தியா குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியா குமாரி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்ஹரி ஓம் சிங்
தொகுதிராஜ்சமந்த்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2013 – 2018
பின்னவர்டேனிஷ் அப்ரார்
தொகுதிசவாய் மாதோபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 சனவரி 1971 (1971-01-30) (அகவை 53)
ஜெய்ப்பூர், ராஜஸ்தான், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்நரேந்திர சிங்
பிள்ளைகள்3, இதில் பத்மநாப் சிங்
பெற்றோர்(s)பவானி சிங்
பத்மினி தேவி
வாழிடம்(s)நகர அரண்மனை, ஜெய்ப்பூர்
கல்விமாடர்ன் பள்ளி (புது தில்லி)
மகாராணி காயத்ரி தேவி பெண்கள் பொதுப் பள்ளி
இணையத்தளம்www.diyakumari.org

தியா குமாரி(Diya Kumari) (பிறப்பு 30 ஜனவரி 1971) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் ராஜ்சமண்ட் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவும், பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராகவும் உள்ளார். குமாரி மறைந்த ஜெய்ப்பூரின் மகாராஜா, சவாய் பவானி சிங், மற்றும் பத்மினி தேவி ஆகியோரின் மகள்.

சுயசரிதை

தியா குமாரி நவீன பள்ளி (புது தில்லி), ஜி.டி. சோமணி நினைவு பள்ளி, மும்பை மற்றும் மகாராணி காயத்ரி தேவி பெண்கள் பொதுப் பள்ளி, ஜெய்ப்பூரில் பயின்றார். பின்னர் இவர் லண்டனில் ஒரு அலங்காரக் கலை படிப்பைப் பயின்றார். [1]இவர் ஜெய்ப்பூர் நகர அரண்மனை (இதுவும் இவருடைய அரச இல்லமாகும்) மற்றும் ஜெய்கர் கோட்டை, அம்பர் மற்றும் இரண்டு அறக்கட்டளைகளான மகாராஜா சவாய் மன் சிங் II அருங்காட்சியகம் அறக்கட்டளை, ஜெய்ப்பூர் மற்றும் ஜெய்கர் பொது அறக்கட்டளை உள்ளிட்ட குடும்ப பாரம்பரிய சொத்துகளை நிர்வகிக்கிறார். மேலும், அரண்மனைப் பள்ளி மற்றும் மகாராஜா சவாய் பவானி சிங் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளையும் இவர் நிர்வகிக்கிறார். ஜெய்ப்பூரில் உள்ள ராஜ்மஹால் பேலஸ் உணவகம், மவுண்ட் அபுவில் உள்ள ஜெய்ப்பூர் ஹவுஸ் உணவகம் மற்றும் ஜெய்ப்பூரின் லால் மஹால் பேலஸ் உணவகம் ஆகிய மூன்று உணவகங்களின் நிர்வாகத்திலும் இவர் ஈடுபட்டுள்ளார். [2]

நரேந்திர சிங்குடனான திருமணத்திலிருந்து தியா குமாரிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சிவாத்தைச் சேர்ந்த திகானா கோத்தாராக்கு, 2003 ஆம் ஆண்டில் பவானி சிங் 'மகாராஜ்' என்ற பட்டத்தை வழங்கினார்.[3] இவர்களின் மூத்த மகன், பத்மநாப் சிங், 1998 ஆம் ஆண்டு சூலை 2 ஆம் நாள் பிறந்தார். மேலும் பவானி சிங்கை தனது வாரிசாகவும், முந்தைய அரச குடும்பத்தின் தலைவராகவும், 2002 நவம்பர் 22 ஆம் நாள் தத்தெடுத்தார். மேலும் 27 ஏப்ரல் 2011 அன்று ஜெய்ப்பூர் காடியில் பதவியேற்றார். இவர்களின் இரண்டாவது மகன் லக்ஷ்ராஜ் சிங், இவர்களின் மகள் கொளரவி குமாரி ஆவர்.[4] இவர் தனது கணவரை 2018 டிசம்பரில் விவாகரத்து செய்தார்.

அரசியல்

குமாரி, செப்டம்பர் 10, 2013 அன்று ஜெய்ப்பூரில் நடந்த பேரணியில் இரண்டு லட்சம் மக்கள் கூட்டத்திற்கு முன், அன்றைய குஜராத் முதலமைச்சர், நரேந்திர மோடி, பாஜக தலைவர், ராஜ்நாத் சிங் மற்றும் வசுந்தரா ராஜே இவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.[5]

மேற்கோள்கள்

  1. Diya Kumari biography from Maharaja Sawai Mansingh II Museum
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-27. பார்க்கப்பட்ட நாள் 2021-07-10.
  3. Sebastian, Sunny (9 October 2003). "A royal surprise in Jaipur". தி இந்து இம் மூலத்தில் இருந்து 13 ஜனவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040113031651/http://www.thehindu.com/2003/10/09/stories/2003100906482200.htm. 
  4. Princess Diya Kumari biography from Maharaja Sawai Mansingh II Museum
  5. "Jaipur princess joins BJP". The Telegraph (India). 11 September 2013. http://www.telegraphindia.com/1130911/jsp/nation/story_17336370.jsp#.UjF3SnuLi3E. பார்த்த நாள்: 22 July 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியா_குமாரி&oldid=3843693" இலிருந்து மீள்விக்கப்பட்டது