பாலப் பேரரசு
நேப்பாள அரசு , நேபாள மன்னர்கள் , நேபாள மல்லர் குல மக்கள் நேபாளத்தில் இருந்து வந்து தெற்கே ஆண்ட போது நேப்பாளர்.. பாளர்.. பாலர்.. பல்லவர் ஆக்கி , மருவச் செய்து , பெயர் ரீதியான மாற்றம் செய்விக்கப்பட்டுள்ளது ''அவர்கள் யார் என குழப்பம் நிலவுகிறது... இந்தியாவின் - வட மேற்கு பகுதியில் இருந்து வந்திருக்கலாம்'' என்பது தற்போதைய வரலாறு.
**நேப்பாள மன்னர் / மல்லர் மக்கள் அரசாட்சி என்பதில் 'நேபாள' என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு நேபாள ... பாலர் ... 'பல்லவர்' ஆட்சி என்கிறார்கள்.
**நேப்பாள மன்னர் / மல்லர் மக்கள் அரசாட்சி என்பதில் 'மல்லரை' மட்டும் எடுத்துக் கொண்டு ஆதியான பாண்டியர் மல்லை .. மாமல்லையை தொடர் கலைப் பணியில் மாமல்லபுரம் .. mallaas என்கிறார்கள்.
**நேப்பாள மன்னர் / மல்லர் மக்கள் அரசாட்சி என்பதில் சில இடங்களில் இரண்டையுமே ஒருங்கே இணைத்து மல்லபல்லவா , பல்லமாமல்லர் , பல்லமல்லர் என்கிறார்கள்.
**நேபாள தலைநகர் கா(த்)ட்மண்டு மக்கள் / மன்னர் ஆட்சி என்பதில் 'காட்மண்டு' என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு காடவர் ஆட்சி என்று இந்தியத்தின் மத்தியில் கூறுகிறார்கள்.
• வங்க தேசம் முதற்கொண்டு ஆப்கானித்தான், பாகிசுதான் மற்றும் நேபாளம் உட்பட இந்த 'மல்லர்' குல ஆட்சியை பால ஆட்சி /பாலப் பேரரசு (Pala Empire) என்கிறர்.
• பிற்கால நேபாள பேரரசு .... ஒரே மாதிரி இருக்கக் கூடாது என்பதால் ,
தமிழ்நாட்டில் நேபாள .. பால .. பல்லவர் ஆட்சி & மாமல்லர் ஆட்சி (mallaas .. pallavaas) என்கிறர் ; மத்தியில் காடவர் / கடவராயர் ஆட்சி என்றும் வடக்கே பால பேரரசு என்றும் பகர்கின்றனர் ; எல்லாம் சம காலத்து ஆட்சி வகை . கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லாம் நேபாள 'மல்லர்' எனும் ஒன்றே ; இப்படி பலவாக குறிப்பிட்டு இந்திய நாட்டு சரித்திரம் , சரித்திரமாக இல்லாமல் சின்னம் பின்னம் செய்யப்பட்டு ... துண்டு போடப்பட்டு பலவாக சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது .
,
பாலப் பேரரசு (Pala Empire), தற்கால ஆப்கானித்தான், பாகிஸ்தான், நேபாளம் & வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் வடக்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளில், கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கும், பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கும் இடையில் நிலவிய அரசைக் குறிக்கும். பால (வங்காள மொழி: পাল) என்னும் சொல் காப்பவர் என்னும் பொருள் கொண்டது. இச் சொல் எல்லாப் பாலப் பேரரசர்களதும் பெயர்களோடு பின்னொட்டாகக் காணப்படும்.
இப் பேரரசை நிறுவியவன் கோபால என்பவன். இவனே வங்காளத்தின் முதலாவது சுதந்திர அரசனாவான். இவன் கி.பி 750 ஆம் ஆண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவிக்கு வந்தான். கி.பி 750 தொடக்கம் 770 வரை ஆட்சியில் இருந்த இவன் தன்னுடைய கட்டுப்பாட்டை வங்காளம் முழுவதிலும் விரிவாக்கினான். இவனுக்குப் பின்வந்த தர்மபால (770-810), தேவபால (810-850) ஆகியோர் பேரரசை இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகளில் மேலும் விரிவாக்கினர். சேன அரச மரபினரின் தாக்குதலைத் தொடர்ந்து 12 ஆம் நூற்றாண்டில் பாலப் பேரரசு நிலை குலைந்தது.
பாலர்கள், புத்த சமயத்தின் மஹாயான, தந்திரப் பிரிவுகளைப் பின்பற்றினர். இவர்கள் கன்னௌசி பகுதியைச் சேர்ந்த ககத்வாலாக்களுடன் மணத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இவர்கள் பல கோயில்களைக் கட்டியதுடன், நாலந்தா, விக்கிரமசீலா முதலிய பல்கலைக் கழகங்களையும் ஆதரித்தனர். இவர்களுடைய மதமாற்றமே திபேத்தில் பௌத்த மதம் பரவுவதற்கு மூல காரணமாக அமைந்ததாகச் சொல்லப்படுகிறது.
பாலர்களின் மூலம்[தொகு]
பெருமளவில் காணப்படும் பாலர் தொடர்பான பதிவுகள் எதிலும் அவர்கள் மூலம் பற்றிய செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் காலத்தைச் சேர்ந்த கிரந்தங்கள், ஆணைகள், கல்வெட்டுக்கள் ஒன்றுமே பாலருடைய தோற்றம் பற்றி எவ்விதத் தகவலையும் தரவில்லை. மஞ்சுசிறீ மூலகல்பம் என்னும் நூல், கோபால ஒரு சூத்திரன் என்கிறது. பால சரிதம், பாலர்கள் தாழ்ந்தகுலச் சத்திரியர்கள் என்கிறது. திபேத்திய வரலாற்றாளரான தாரநாத லாமா தன்னுடைய, இந்தியாவில் பௌத்தத்தின் வரலாறு குறித்து எழுதிய நூலிலும், கணராமா என்பவர் தன்னுடைய நூலான தர்ம மங்களவிலும் இதே கரித்தையே கூறியுள்ளனர். அராபிய நூல்களிலும் பாலர்கள் உயர்ந்த மரபில் வந்தவர்கள் அல்லவென்றே குறிப்பிடுகின்றன. முதலாம் கோபாலவின் மகனான தர்மபாலவின் காலிம்பூர்ச் சாசனம், கோபால வப்யாத்தா எனும் போர்வீரனின் மகன் என்றும், கல்வியில் சிறந்த தாயிதவிஷ்ணு என்பவனின் பேரன் என்றும் குறிப்பிடுகின்றது. சந்தியாகரநந்தி என்பவருடைய ராமசரிதம் ராமபால என்னும் பாலப் பேரரசனை சத்திரியன் எனக்கூறும் அதே வேளை இன்னோரிடத்தில் அவன் சமுத்திர குலத்தைச் சேர்ந்தவன் என்கிறது. பாலர்களைச் சமுத்திரத்துடன் இணைத்ததற்கான காரணம் தெரியவில்லை.
முக்கியமான பாலப் பேரரசர்கள்[தொகு]
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ரிவாத் மக்கள் (கி மு 1,900,000)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சோவனிகம் (கி மு 500,000)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கற்காலம் (50,000–3000 BCE)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெண்கலம் (கி மு 3000–1300)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பாரம்பரியம் (230BCE–1279CE)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மத்தியகாலம் (1206–1596)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தற்காலம் (1526–1858)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடிமை (1510–1961)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மற்ற அரசுகள் (1102–1947)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கை இராச்சியங்கள்
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடிமைப்பட்ட கால பர்மா (1824 - 1948)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
- கோபால (750-770)
- தர்மபால (770-810)
- தேவபால (810-850)
- சுரபால/மகேந்திரபால (850 - 854)
- விக்கிரகபால (854 - 855)
- நாராயண்பால (855 - 908)
- ராஜ்யபால (908 - 940)
- கோபால II (940-960)
- விக்கிரகபால II (960 - 988)
- மகிபால (988 - 1038)
- நாயபால (1038 - 1055)
- விக்கிரகபால III (1055 - 1070)
- மகிபால II (1070 - 1075)
- சுரபால II (1075 - 1077)
- ராமபால (1077 - 1130)
- குமார பாலர் (1130 - 1140)
- கோபால III (1140 - 1144)
- மதனபால (1144 - 1162)
- கோவிந்தபால (1162 - 1174)