புதுச்சேரி வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1 ஆம் நூற்றாண்டின்செங்கடல் செலவு நூலில் புதுச்சேரியை, புடுக்கி (Puduki) என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி நகரம் இந்தியாவின் தென்கிழக்கு கடலோரத்தில் உள்ளது. காலனிய காலத்தில் இதன் பழங்கால வரலாறு பற்றி போதுமான அளவு எழுதப்படாத நிலை இருந்தது, டச்சு, போர்த்துகீசிய, ஆங்கிலேய, பிரஞ்சு போன்ற காலனித்துவ சக்திகள் வருகைக்கு பின்னரான புதுச்சேரியின் வரலாறு குறித்த தெளிவான பதிவுகள் எழுதப்பட்டன. அருகிலுள்ள அரிக்கமேடு, அரியாங்குப்பம், காகையன் தோப்பு, வில்லியனூர், பாகூர் ஆகிய பகுதிகள் பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனியால் தங்கள் பகுதியுடன் இணைக்கப்பட்டன. விடுதலைக்குப் பின்னர் புதுச்சேரியின் சூழல் மாறியது, காலனித்துவ காலத்திற்கு முந்தைய காலத்தின் வரலாறுகள் எழுதப்பட்டன.

முற்காலம்[தொகு]

புதுச்சேரியின் சுட்டுக்கேணியில் கண்டறியப்பட்ட 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நகைகள், குய்மிட் அருங்காட்சியகம்
1-2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீராம்பட்டினம் அரிக்கமேட்டில் கிடைத்த கிரேக்க ரோமன் செவ்வியல் தன்மைவாய்ந்த பறவையுடன் உள்ள குழந்தையின் பொம்மை, குய்மிட் அருங்காட்சியகம்.

1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செங்கடல் செலவு என்னும் நூலில் ஒரு வணிகப் பகுதியாக பொதுகே அல்லது பொதுகா என்ற இடம் குறிப்பிடப்படுகிறது (பாகம். 60). ஜி. டபில்யூ. பி. ஹண்டிங்போர்ட் இந்த இடத்தை அரிக்கமேடு (தற்போது அரியாங்குப்பத்தின் ஒரு பகுதியாக உள்ளது) என அடையாளம் கண்டுள்ளார், இது தற்போதைய புதுச்சேரி நகரத்தில் இருந்து 2 மைல் (3.2 கி.மீ) தொலைவில் உள்ளது. புதுச்சேரி ஒரு முதன்மை இலக்காக ரோம வணிகர்களிடையே இருந்தது. ஹண்டிங்போர்ட் மேலும் குறிப்பிடுகையில் 1937 இல் ரோம மண் பாண்டங்கள் அரிக்கமேட்டில் கிடைத்ததாக குறிப்பிடுகிறார்.

1944 மற்றும் 1947 இக்கு இடைப்பட்ட காலத்தில் இங்கு நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் இப்பகுதியானது "கி.பி. 1 ஆம் நூற்றாண்டில் முதல் பாதியில் ரோமானியப் பொருட்களை இறக்குமதி செய்யப்படும் ஒரு வர்த்தக நிலையமாக இருந்தது" என்பதை காட்டியது என்கிறார்.[1]

4 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், புதுச்சேரி பல்லவ பேரரசின் பகுதியாக இருந்தது. பின்வந்த நூற்றாண்டுகளில் புதுச்சேரி பல தென்னக மரபினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கி.பி 10 ஆம் நூற்றாண்டில். சோழர்கள் கைப்பற்றினர், இவர்களுக்கு மாற்றாக 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள் வந்தனர். பிற்காலத்தில் வடக்கிலிருந்து முஸ்லீம் ஆட்சியாளர்கள் வந்தனர், இவர்களால் மதுரை சுல்தானகம் நிறுவப்பட்டது. அதன் பிறகான காலத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்கு தென்னிந்தியா முழுக்க உட்பட்டது, இவர்கள் அதிகாரமானது 1638 இல் செஞ்சியை பீஜப்பூர் சுல்தான்களால் கைப்பற்றப்பட்ட காலம்வரை நீடித்தது.

ஐரோப்பியர் காலம்[தொகு]

புதுச்சேரி பில்லினின் திட்டம் ஒரு செப்புத் தகடு வேலைப்பாடு.

1674 இல் புதுச்சேரியில் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி வணிக மையத்தைத் துவக்கியது. இந்த வணிக மையம் பிற்காலத்தில் பிரஞ்சு இந்திய காலனியின் தலைமையகமானது.

டச்சு மற்றும் பிரித்தானிய வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவுடனான வர்த்தகத்தை விரும்பின. இதனால் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் தீவிரமாக போட்டி நடந்தது. 1693 இல் புதுச்சேரி டச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது ஆனால் 1699 இல் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி புதுச்சேரியை பிரான்ஸ் திரும்ப பெற்றது.

பிரஞ்சு-ஆங்கிலப் போர்கள் (1742-1763) மாஹேயில் 1720 களிலும், ஏனாமில் 1731 இலும், காரைக்காலில் 1738 இலும் நடந்தன. 1761 சனவரி 16 அன்று புதுச்சேரியை பிரஞ்சுக்காரர்களிடமிருந்து பிரித்தானியர்கள் கைப்பற்றினர், ஆனால் ஏழு ஆண்டுகள் போரின் முடிவில் பாரிஸ் உடன்படிக்கை (1763) முடிவில் பிரித்தானியர் புதுச்சேரியை மீண்டும் பிரஞ்சு வசம் ஒப்படைத்தது.[2]

புதுச்சேரி பகுதியை பிரெஞ்சுப் புரட்சி காலத்தில் மீண்டும் 1793 இல் பிரித்தானியர்களால் கைப்பற்றப்பட்டது, ஆனால் மீண்டும் பிரஞ்சு வசம் 1814 இல் ஒப்படைத்தது. பிரித்தானியர் 1850-ன் பிற்பகுதியில் இந்தியா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த போது, அவர்கள் பிரஞ்சுக்காரர்கள் நாட்டில் தங்கள் குடியிருப்புக்களைத் தங்கள் வசமே வைத்துக்கொள்ள அனுமதித்தனர். இதனால் புதுச்சேரி, மாகி, ஏனாம், காரைக்கால் ஆகிய பிரெஞ்சு இந்தியா பகுதிகள் பிரஞ்சுவசம் 1954 வரை நீடித்தது.

இந்திய ஒன்றியம் 1947 இல் பிரித்தானியரிடம் இருந்து விடுதலையடைந்தது. இதனையடுத்து பிரஞ்சு இந்திய பகுதிகளை இந்திய ஒன்றியத்துடன் இணைக்க போராட்டங்கள் தோன்றின. இதனையடுத்து இங்கு பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா பிரான்சு ஆகிய நாடுகளுக்கிடையே 1948 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி சந்திர நாகூர் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 97% மக்கள் இந்திய ஒன்றியத்துடன் இணைய விருப்பம் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக மேற்கு வங்காளத்தின் ஒரு பகுதியாக அது இணைக்கப்பட்டது. 1954 அக்டோபர் 18 அன்று கீழூர் என்ற சிற்றூரில் பிரஞ்சு அரசு வாக்கெடுப்பு நடத்தியது. அதில் பாண்டிச்சேரி, மாகே, ஏனாம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 178 பேர் வாக்களித்தனர். இதில் 170 பேர் இந்திய ஒன்றியத்துடன் இணைய வாக்களித்தனர். இதனையடுத்து அக்டோபர் 21 அன்று இந்த நான்கு பகுதிகளின் அதிகாரத்தை இந்திய ஒன்றியதிடம் அளிக்கும் ஒப்பந்தத்தில் பிரஞ்சு அரசு கையொப்பமிட்டது. 1954 நவம்பர் 1 அன்று இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து. ஆனால் இதன்பிறகு ஏழத்தாழ எட்டு ஆண்டுகளுக்குப் பிறகே இந்திய பிரஞ்சு நாடாளுமன்றங்கள் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தன. இதன்பிறகு புதுச்சேரி இந்த நான்கு பகுதிகளும் இந்திய ஒன்றியத்துடன் 1962 ஆகத்து 16 அன்று அதிகாரப்பூரவமாக இணைந்தன. இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. இது 1963 இல் ஒன்றிய பிரதேசமாக ஆக்கப்பட்டது. 204 முதல் நவம்பர் முதல் நாளை புதுச்சேரி அரசு விடுதலை நாளாக கொண்டாடிவருகிறது.[3]

இந்தியாவில் இருந்த பிரெஞ்சு ஆளுநர்களின் பட்டியல்[தொகு]

குறிப்பு: அனைத்து பிரெஞ்சுகாரர்களின் பெயர்களும் பிரெஞ்சு உச்சரிப்பில் கொடுக்க பட்டுள்ளது.

இந்திய சுதந்திரத்திற்கு முன்[தொகு]

ஆணையர்கள்[தொகு]

புதுச்சேரியில் உள்ள ஜோசெப் பிரான்சுவா டூப்லெக்ஸின் சிலை

கவர்னர் ஜெனரல்கள்:[தொகு]

1946-ல் பிரெஞ்சு இந்தியா, பிரான்சின் வெளிநாட்டு ஆட்சிப்பிரதேசமாக ஆனது.

இந்திய சுதந்திரத்திற்கு பின்[தொகு]

ஆணையர்கள்[தொகு]

நடைமுறையில் இந்திய ஒன்றியத்தோடு மாற்றப்பட்டது,

உயர் ஆணையர்கள்[தொகு]

  • கேவல் சிங், நவம்பர் 1, 1954-1957
  • எம்.கே.கிரிபலானி, 1957-1958
  • எல்.ஆர்.எஸ். சிங், 1958-1958
  • ஏ.எஸ். பாம், 1960
  • சரத் குமார் தத்தா, 1961-1961

மேலும் பார்க்க[தொகு]

இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தபின், பணியாற்றிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்.

குறிப்புகள்[தொகு]

  1. The Periplus of the Erythraean Sea, transl.
  2. Chand, Hukam.
  3. போட்டித் தேர்வு: புதுச்சேரியின் விடுதலை வரலாறு, கோபால், இந்து தமிழ், 2019, அக்டோபர் 29
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுச்சேரி_வரலாறு&oldid=3925422" இலிருந்து மீள்விக்கப்பட்டது