உபதீச நுவாரா இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உபதீச நுவர இராச்சியம் (Kingdom of Upatissa Nuwara) (இதனை விஜிதபுரம் என்றும் அழைப்பர்), விஜயனின் மறைவிற்குப் பின்னர் அவரது அமைச்சராக இருந்த உபதிஸ்ஸன் கிமு 505 இல் உபதீச நுவாரா இராச்சியத்தை நிறுவினார். உபதிஸ்ஸனுக்குப் பின்னர் மன்னர் விஜயனின் நெருங்கிய உறவினரான பண்டுவாசுதேவன் வட இந்தியாவிலிருந்து, இலங்கை வந்து உபதீச நுவாரா இராச்சியத்தின் மன்னரானார்.

வரலாறு[தொகு]

தாமிரபரணி இராச்சியத்திலிருந்து வடக்கே ஏழு அல்லது எட்டு மைல் தொலைவில், தற்கால மன்னார் மாவட்டத்தில் உபதீச நுவாரா இராச்சியம் அமைந்திருந்தது.[1][2][3] இலங்கை மன்னர் விஜயனின் புரோகிதரும், அமைச்சருமான உபதீசன் பெயரில், விஜயனின் மறைவிற்குப் பின் கிமு 505 இல் இவ்விராச்சியம் நிறுவப்பட்டது. இந்த இராச்சியத்தின் தலைநகரம் உபதீச நுவாரா ஆகும். இந்த இராச்சியத்தின் பொறுப்பு மன்னராக உபதீசன் உபதீசன் செயல்பட்டார். பின்னர் மறைந்த மன்னர் விஜயனின் உறவினர்களிடம் இவ்விராச்சியத்தினை ஆளும் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஆட்சியாளர்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CHAPTER I THE BEGINNINGS; AND THE CONVERSION TO BUDDHISM".
  2. Mittal, J.P. (2006). "Other dynasties". History of Ancient India: From 4250 BC to 637 AD. Volume 2 of History of Ancient India: A New Version. Atlantic Publishers & Distributors. பக். 405. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-269-0616-2. https://books.google.com/books?id=rrh4tY3v2A4C&pg=PA405. பார்த்த நாள்: 2009-11-06. 
  3. "Pre-history of Sri Lanka". lankaemb-egypt.com. Embassy of Sri Lanka Cairo, Egypt. Archived from the original on May 24, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-11-06.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உபதீச_நுவாரா_இராச்சியம்&oldid=3586283" இலிருந்து மீள்விக்கப்பட்டது