தானிசு இந்தியா
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
தானிசு இந்தியா Dansk Ostindien | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1620–1869 | |||||||||
டென்மார்க்கு கொடி | |||||||||
![]() இந்தியாவில் டேனிஷ் மற்றும் பிற ஐரோப்பிய குடியேற்றங்கள் | |||||||||
நிலை | தானிசுக் கிழக்கிந்தியக் கம்பனி (1620–1777) டானோ-நோர்வீஜியக் குடியேற்றங்கள் (1777–1814) தானிசுக் குடியேற்றங்கள் (1814–1869) | ||||||||
தலைநகரம் | டான்ஸ்போர்கு கோட்டை | ||||||||
பேசப்படும் மொழிகள் | டேனிஷ் மொழி, தமிழ், இந்தி, வங்காளி | ||||||||
டென்மார்க்கு மன்னர் (மற்றும் நோர்வே 1814 வரை) | |||||||||
• 1588-1648 | கிறிஸ்டியன் IV | ||||||||
• 1863-1906 | கிறிஸ்டியன் IX | ||||||||
ஆளுனர் | |||||||||
• 1620-1621 | ஓவெ ஜெட்டெ | ||||||||
• 1673-1682 | சிவெர்ட் கார்ட்சன் அடெலர் | ||||||||
• 1759-1760 | கிறிஸ்டியன் ஃபிரெடெரிக் ஹோயர் | ||||||||
• 1788-1806 | பீட்டர் ஆங்கர் | ||||||||
• 1825-1829 | ஹான்சு டெ பிரிங்க்-செய்டெலன் | ||||||||
• 1841-1845 | பீடர் ஹான்சென் | ||||||||
வரலாற்று சகாப்தம் | குடிமைப்பட்டக் காலம் | ||||||||
• Established | 1620 | ||||||||
• Disestablished | 1869 | ||||||||
நாணயம் | தானிசு இந்திய ரூபாய் | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | ![]() |
![]() | |
குடிமைப்பட்ட கால இந்தியா | |
---|---|
டச்சு இந்தியா | 1605–1825 |
டேனிஷ் இந்தியா | 1620–1869 |
போர்த்துகேய இந்தியா 1510–1961 | |
காசா ட இந்தியா (இந்திய மாளிகை) | 1434–1833 |
போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி | 1628–1633 |
பிரித்தானிய இந்தியா 1613–1947 | |
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி | 1612–1757 |
இந்தியாவில் கம்பெனி ஆட்சி | 1757–1857 |
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு | 1858–1947 |
பர்மாவில் பிரித்தானிய ஆட்சி | 1824–1942 |
சுதேச சமஸ்தானங்கள் | 1765–1947/48 |
இந்தியப் பிரிவினை | |
தானிசு இந்தியா (Danish India) டென்மார்க்கின், (1814 வரை டென்மார்க்-நோர்வே) முன்னாள் இந்தியக் குடியேற்றங்களைக் குறிப்பதாகும். இவை தற்போதையத் தமிழ்நாட்டிலிலுள்ள தரங்கம்பாடி (Tranquebar), தற்போதைய மேற்கு வங்காளத்தின் செராம்பூர் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் மைய ஆட்சிப்பகுதியில் உள்ள நிக்கோபார் தீவுகள் உள்ளிட்டவையாகும்.
இந்தியாவின் டேனிஷ் குடியேற்றபகுதிகளை 17வது நூற்றாண்டிலிருந்து 19வது நூற்றாண்டு வரை செயலில் இருந்த தானிசுக் கிழக்கிந்தியக் கம்பனி நிறுவியது. இந்தக் குடியேற்றங்களின் தலைநகராக 1620 இல் கோரமண்டல் கடற்கரையில் உள்ள தரங்கம்பாடியில் கட்டப்பட்ட டான்சுபோர்கு கோட்டை விளங்கியது.
தானிசுக்காரர்கள் பல வணிக புறமையங்களை நிறுவி தரங்கம்பாடியிலிருந்து ஆண்டனர்:
- 1696 – 1722 மலபார் கடற்கரையில் அமைந்துள்ள ஓட்வே டோர்ரெ.
- 1698 – 1714 சந்தன் நகருக்கு தென்கிழக்கிலுள்ள தன்மார்க்குநகர் என்கிற கோண்டல்பரா.
- 1752 – 1791 கோழிக்கோடு.
- அக்டோபர் 1755 மேற்கு வங்காளத்திலுள்ள செராம்பூரின் பிரெடிரிக்சுநகர்.
- 1754/1756 நிக்கோபார் தீவுகள் ( பிரெடிரிக்சுசோர்ன் என்ற பெயரில்).
- 1763 பாலசோர் (1636-1643இல் முன்பே ஆக்கிரமிக்கப்பட்டது).
1777ஆம் ஆண்டில் இபகுதிகளை தானிசுக் கம்பனி அரசிடம் ஒப்படைக்க இவை தானிசு மன்னராட்சி் குடியேற்றங்களாயின.
1789 ஆம் ஆண்டு அந்தமான் தீவுகள் பிரித்தானியக் குடியேற்றமானது. நெபோலியப் போர்களின் போது ஐக்கிய இராச்சியம் தானிசு கடல்வணிகத்தை தாக்கி இந்தியாவிலிருந்த தானிசுக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு மிகுந்த நட்டத்தை உண்டாக்கியது. மே 1801 - ஆகத்து 1802 மற்றும் 1808 - செப்டம்பர் 20, 1815 காலகட்டங்களில் ஆங்கிலேயர்கள் தரங்கம்பாடி மற்றும் பிரெடிரிக்சுநகர் கோட்டைகளைப் பிடித்து தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்தனர்.
மெதுவாக தானிசுக் குடியேற்றங்கள் வலுவிழந்து பிரித்தானிய இந்தியாவின் பகுதிகளாயின: 1839ஆம் ஆண்டில் செராம்பூர் பிரித்தானியர்களுக்கு விற்கப்பட்டது, 1845இல் தரங்கம்பாடியும் பெரும்பாலான சிறு குடியேற்றங்களும் விற்கப்பட்டன. 1868 அக்டோபரில், 1848இலிருந்தே புறக்கணிக்கப்பட்டிருந்த, நிக்கோபார் தீவுகளும் பிரித்தானியர்களுக்கு விற்கப்பட்டன.