ஆல்
![]() |
விக்சனரியில் ஆலமரம் என்னும் சொல்லைப் பார்க்கவும். |
ஆல் | |
---|---|
![]() | |
ஆலமரம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | மக்னோலியோபைட்டா |
வகுப்பு: | மக்னோலியோப்சிடா |
வரிசை: | Urticales |
குடும்பம்: | மொராசியே |
பேரினம்: | ஆலினம் |
துணைப்பேரினம்: | உரோஸ்டிக்மா |
இனங்கள் | |
பல |
ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன.
பெயர்[தொகு]
மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது.[1] அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[2]
பயன்[தொகு]
- ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
- நல்ல நிழல் தரும்.[3]
- இதன் இலைகளைத் தைத்து உண்கல இலையாகப் பயன்படுத்துவர்
- ஆலம் பழத்தைப் பறவைகள் விரும்பி உண்ணும்
- பசு கன்று ஈன்றபின் போடும் மாசியை வைக்கோல் தாளில் கட்டி ஆலமரத்தில் தொங்கவிடுவர்
- இது நல்ல நிழல் தருகிறது
சிறப்பு[தொகு]
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி
- நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி
- சிவன் ஆலமர் செல்வன் எனப் போற்றப்படுகிறான்.[4]
- திருவாலங்காடு என்னும் ஊர் இம்மரத்தால் சிறப்புப் பெற்றுள்ளது
- 'ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி வாழ்க' என வாழ்த்துவர்.
- இன்றும் பல ஊர்களில் கிராமக் கூட்டங்கள் ஆலமரத்தடியில் நடைபெறுகின்றன.[5]
- திருஅன்பிலாலந்துறை, பழுவூர், திருவாலம்பொழில் முதலிய சிவத்தலங்களில் ஆலமரம் தலமரமாக விளங்குகின்றது.[6]
இந்திய தேசிய சின்னங்களில் ஆலமரம் தேசிய சின்னமாக உள்ளது.[7]
சொல்லின் வேர்[தொகு]
அல் மற்றும் அலை என்பதற்கு அலைதல், விரித்தல் என்று பொருள். ஆலமரம் அலைந்து விரிந்து வளரும் மரம் என்பதால் "ஆல் "என்று பொருள். அதே போல ஆலை என்பதற்கு அலைந்த விரிந்த இடம் என்றும் பொருளுண்டு.
பழமையான ஆலமரம்[தொகு]
சென்னை அடையாற்றில் 450 ஆண்டுகள் கடந்த பழமையான ஆலமரமொன்று பாதுகாக்கபட்டு வருகின்றது.[8][9]
படத்தொகுப்பு[தொகு]
அடிக்குறிப்பு[தொகு]
- ↑
- அகல் > ஆல்
- பகு < பகல் > பால்
- துகள் > தூள்
- விழுது > வீழ்
- ↑
- மரத்தின் உறுப்புகளில் ஒன்று வீழ் - தொல்காப்பியம் மரபியல் 90
- ஐது வீழ் இகுபெயல் (மழை விழுதல்) - சிறுபாணாற்றுப்படை 8
- ↑
- தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை
- தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
- நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
- அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு
- மன்னரக்கு இருக்க நிழல் ஆகும்மே - வெற்றிவேற்கை
- ↑ ஆலமர் செல்வன் அணிசல் பெருவிறல் கலித்தொகை - 81
- ↑ http://www.indg.in/primary-education/childrenscorner/national-symbols/ba4bc7b9abbfbaf-baebb0baebcd[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-04-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-04-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-12-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-23 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.thehindu.com/news/cities/chennai/survivors-of-time-long-before-chennai-there-stood-a-tree/article2141956.ece
- ↑ "சென்னை அடையாறு ஆலமரம் 450 வயதை கடந்தது மாலைமலர் செப்டம்பர் 17 2013". 2013-09-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-23 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- ஆலமரத்தின் சிறப்பு, மருத்துவ குணங்கள் பரணிடப்பட்டது 2010-11-28 at the வந்தவழி இயந்திரம்