செவ்வாழை
Musa acuminata 'Red Dacca' | |
---|---|
செவ்வாழைச் சீப்புகள் | |
இனம் | |
Musa acuminata | |
பயிரிடும்வகைப் பிரிவு | |
AAA Group (Cavendish group) | |
வெளியீட்டு நிறுவனம் | |
'Red Dacca' | |
தோற்றம் | |
West Indies, Central America |

வாழைப்பழங்களில் செவ்வாழை (செந்த்துழுவன்; Red Dacca bananas) சிறப்பு வாய்ந்தது ஆகும். இதன் தாயகம் தென்மேற்கு ஆசியா எனக் கருதப்படுகிறது.[சான்று தேவை] தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இது அதிகம் விளைகிறது.[சான்று தேவை]
தோற்றம்[தொகு]
செவ்வாழை மரங்கள் மற்ற வாழைமரங்களை விட தண்டு பகுதியில் சற்று சிவந்து காணப்படும். பொதுவாக வாழை மரங்கள் செம்மண் பகுதியில் செழித்து வளருகின்றன. 1870–1880 ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் முதன் முதலாக டொராண்டோ சந்தைகளில் இவ்வகைப்பழங்கள் விற்கப் பட்டன.[1] தமிழகத்தின் தென்கோடியில் அதிகமாகப்பயிரிடப்படும் இவை தற்போதைய காலங்களில் இதன் பயிரிடல் குறைந்து வருகிரது. [2]
பயன்கள்[தொகு]
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
- இயற்கையியலாளர்களின் கருத்துப்படி வடிவமும், நிறமும் அதற்குரியப் பயன்களைத் தரும். அக்கருத்துப்படி, இது சிவப்பு நிறமாக இருப்பதால் இரத்த மண்டலத்திற்கும், ஆண்மைக்கான ஊட்டச்சத்துகளும் இருப்பதாக கருதப்படுகிறது. *கண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
- செரிமானக்கோளாறுகள் மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.
குறிப்புகள்[தொகு]
- அறிஞர் அண்ணா செவ்வாழை என்ற சிறுகதையை எழுதியுள்ளார்.