வாகை
| வாகை | |
|---|---|
Not evaluated (IUCN 3.1)
| |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | Fabales
|
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | A. lebbeck
|
| இருசொற் பெயரீடு | |
| Albizia lebbeck (L.) Benth. | |
| வேறு பெயர்கள் | |
|
Many, see text | |
வாகை, (Albizia lebbeck) என்பது பபேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரமாகும். இது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் மியான்மரை பூர்வீகமாகக் கொண்டது.[1] இம்மரம் பிற வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றது. இது வாகை இனத்தைச் சேர்ந்தது.
விளக்கம்
[தொகு]இது 18 மீ முதல் 30 மீ வரை வளரக் கூடிய மிதமான அல்லது பெரிய வகை மரமாகும். கிளைகள் அகலப்பரந்து ஒரு குடைபோலக் காணப்படும். இது பலத்தண்டுகளையுடையதாகவும் பரந்து வளரக்கூடியதாகவும் உள்ளது. இலைகள் இரட்டைச்சிறகமைப்பையும், அடிக்காம்பு (Rachis) 70-90 மிமி நீளமும், மேற்காம்புகள் (Rachillae) 1 – 5 இணைகளாகவும், 50-70 மிமி நீளமும் காணப்படும். சிற்றிலைகள் 3-11 இணைகளுடனும், நீள்வட்டம் மற்றும் முட்டைப் போன்ற வடிவிலும்,சமச்சீரற்ற நிலையிலும் காணப்படும். இலை தொடக்கத்தில் கரும்பச்சையிலும் இரவு நேரங்களில் மூடிக்கொள்ளும் பண்புடையதாகவும், முதிர்ந்த நிலையில் பழுப்பு நிறத்திலும் காம்புகளுடன் இறுகிய அமைப்பிலும் காணப்படும். இதன் பூக்கள் மெல்லிய ஊசி போன்ற இதழ்களுடன், மேல் நோக்கிய குஞ்சம் போன்றது. இளமஞ்சள்/வெண்நிறம் உடைய கொத்தான மகரந்தத் தாள்களை உள்ளடக்கிய மணமிக்க பூக்களையும், தட்டையான காய்களையும் உடையது.[2] இது இளவேனிற்காலத்தில் (மார்ச்- மே) பூக்கும்.
இதன் காய்கள் அரை அடிமுதல் ஒரு அடி வரையிலான நீளம் கொண்டவை. காய்கள் தட்டையாக காணப்படும். முதலில் பச்சையாக இருக்கும் காய்கள் முற்றிய பிறகு மஞ்சள் நிறத்திற்கு மாறும். ஒரு கட்டத்தில் மரத்தில் உள்ளை இலைகள் உதிர்ந்து வெறும் காய்களாக காணப்படும். இந்தக் காய்களை அசைத்தால் குலுகிலுப்பை போல ஒலி எழுப்பும்.
இலக்கியம்
[தொகு]சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. "வெற்றி வாகை சூடினான்" எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது. குறிஞ்சிப் பாட்டின் 67 ஆம் அடியில் வாகை மலர் பாடப்பட்டுள்ளது. வாகை என்பதை தூங்கமூஞ்சி மரத்துடன் தற்காலத்தில் தவறுதலாகப் பொருள் கொள்ளப்படுகிறது.
சிறப்புகள்
[தொகு]- வாகை மலர்ச்சூடுதல் வெற்றிக்களிப்பை உணர்த்தும்.
- வீக்கம், கொப்புளம் வடிதலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.
- இருமல், நுரையிரல் அழற்சி, ஈறழற்சி ஆகியவற்றிற்கு இவை மருந்தாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. குறிப்பாக இம்மரப்பட்டையை அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
- இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயனுடையனவாக கருதப்படுகின்றது.[3] வாகை வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்று.
- தமிழீழத்தின் தேசிய மரமாகும்.
- உறுதிமிக்க இந்த மரம் செக்குகள்[4] மாட்டு வண்டிகள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lowry, J.B. & Seebeck, J. 1997 "The Potential for Tropical Agroforestry in Wood and Animal Feed Production". Rural Industries Research and Development Corporation, Indooroopilly, Queensland
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-04-05. Retrieved 2011-10-08.
- ↑ Duke, James A. (2008): Dr. Duke's Phytochemical and Ethnobotanical Databases – Albizia lebbeck. Retrieved 2008-FEB-23.
- ↑ http://www.vikatan.com/news/agriculture/89637-benefits-of-cold-pressed-oil.html