புங்கை
| புங்கை | |
|---|---|
| புங்கையின் பூ | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | தாவரம் |
| தரப்படுத்தப்படாத: | பூக்குந்தாவரம் |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | Fabales |
| குடும்பம்: | பேபியேசியே |
| பேரினம்: | மில்லெட்டியா |
| இனம்: | பின்னாட்டா |
| இருசொற் பெயரீடு | |
| மில்லெட்டியா பின்னாட்டா (L.) Panigrahi | |
| வேறு பெயர்கள் | |
|
Cytisus pinnatus L. | |
புங்கை அல்லது புங்கு அல்லது பூந்தி அல்லது கிரஞ்ச மரம் (Millettia pinnata) என்னும் இத்தாவரம் பட்டாணி சார்ந்துள்ள பேபேசியேக் குடும்பத்தைச் சார்ந்தது. இது வெப்பமண்டலப் பகுதிகளான ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. இது இந்தியா மட்டும் அல்லாது சீனா, சப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளிலும் காணப்படுகிறது[2].
புங்க மரத்தின் நிழல் குளுமையானது. அடர்த்தியான இலைகள் கொண்ட இம்மரத்தின் அடியில் நிழல் இதமாக இருக்கும். இதன் குளிர்ச்சியை குறிக்கும் விதமாக புங்க மர நிழலும் மங்காத் தாய்மடிச் சுகமும் ஒன்றாம் என்ற தமிழ்ப் பழமொழி உண்டு.[3]
பயன்கள்
[தொகு]- புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை. தீப் புண்களை ஆற்றும் சக்தி புங்கை மரத்தின் பட்டைக்கு உள்ளது. புங்கை மரத்தின் பட்டை, ஆலம்பட்டை, பழுத்த அத்தி இலை -இவை மூன்றையும் நன்கு அரைத்து புங்கன் எண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்ட புண்களின் மீது தடவி வர புண்கள் வெகுவாக ஆறும்.
- புங்கை மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர மூல நோய் தீரும்.
- பல் துலங்க புங்கை மரத்தின் குச்சிகளைப் பயன்படுத்தினார்கள்.
- புங்கம் வேர், மிளகு, திப்பிலி, சீந்தில் இலை, மகிழவேர் இவற்றை சம அளவு எடுத்து கற்றாழை சாற்றால் அரைத்து சிறு உருண்டையளவு உட்கொள்ள எலி கடியினால் ஏற்படும் விஷம் முறியும்.
- புங்கை இலைக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணை போக்கும் சக்தி உள்ளது. புங்கன் மர இலையை இடித்து சாறு பிழிந்து 30 முதல் 60 மில்லி அளவு குடித்து வர வயிற்றுப்புண் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.
- புங்கன் இலையை தூளாக்கி விளக்கெண்ணெய் விட்டுக் காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தடவி வர காயம் ஆறும். இதில்லாமல், புங்கன் இலையை பச்சையாக அரைத்து வைத்துக் கட்டினாலும் வெட்டுக்காயம் விரைவில் ஆறும். புங்கன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கத்தின் மீது வைத்து கட்டி வர வீக்கம் குறையும்[4]
சங்க இலக்கியத்தில்
[தொகு]சங்ககால நூல் குறிஞ்சிப் பாட்டு இதன் பூவைக் குறிப்பிடுகிறது. குறிஞ்சி நிலத்து மகளிர் பல்வேறு வகையான மலர்களைக் குவித்து விளையாடியபோது இதனையும் சேர்த்துக் குவித்தார்களாம்.[5]
சங்கப்பாடல்களில் ஒன்று இதனைப் ”புன்கு” எனக் குறிப்பாடுகிறது.[6]
மேற்கோள்
[தொகு]- ↑ "Millettia pinnata (L.) Panigrahi". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2006-01-31. Retrieved 2010-05-02.
- ↑ "Millettia pinnata (L.) Panigrahi". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2006-01-31. Retrieved 2010-05-02.
- ↑ அர.செல்வமணி (2026-07-11). "புங்க மரமும் அன்னை மடியும் | காட்டு வாழ்க்கை 13". Hindu Tamil Thisai. Retrieved 2026-07-12.
- ↑ http://www.eegarai.net/-f14/-t9532.htm?theme_id=147
- ↑ கபிலர் - குறிஞ்சிப்பாட்டு அடி 74
- ↑ புன்கு – பொறிப் பூம் புன்கின் முறி திமிரல் - ஐங்குறுநூறு 347
படங்கள்
[தொகு]- போங்க(புங்க)மரம்
- பூத்துக் குலுங்கும் புங்கமரம்
- மரத்தடியில் புங்கஞ் செம்மல்
- தரையில் புங்கஞ் செம்மல்