இந்திராணி (சப்தகன்னியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திரன் என்ற சக்கரனும் இந்திராணி என்ற சசி தேவியும், ஐராவதம் என்ற தேவலோக யாணையில் பவனி வரும் காட்சி

இந்திராணி (ஒலிப்பு) அல்லது சசி, (Shachi or Indrani) (queen of Indra), ; (சமசுகிருதம்): शची;), துவக்க வேத கால நாகரீகத்தில், இந்து சமயத்தில் ஏழு புகழ் மிக்க பெண் கடவுளர்களில் (சப்தகன்னியர்) ஒருவராக கருதப்படுபவர். இவரை ஐந்திரி என்றும் மகேந்திரி என்றும், பௌமன் என்ற அசுர மன்னின் மகள் என்பதால் பௌலோமி என்றும் வேதங்கள் அழைக்கிறது. இந்திரனின் மனைவியான இந்திராணி மிக அழகானவர். இந்திராணி சிங்கம் மற்றும் யானைகளுடன் தொடர்புடையவர். ஜெயந்தன் மற்றும் ஜெயந்தி (தெய்வானை) மற்றும் சித்திரகுப்தர் ஆகியோரின் தாயாவாள்.

நகுசன் கதையில் இந்திராணியை தொடர்புருத்தி பேசப்படுகிறது.

ஆதார நூல்கள்[தொகு]

  • Hindu Goddesses: Vision of the Divine Feminine in the Hindu Religious Traditions (ISBN 81-208-0379-5) by David Kinsley
  • The Hindus: An Alternative History By Wendy Doniger

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திராணி_(சப்தகன்னியர்)&oldid=3754552" இலிருந்து மீள்விக்கப்பட்டது