பாக்கித்தான்
பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு Islamic Republic of Pakistan | |
---|---|
குறிக்கோள்: "நம்பிக்கை, ஒற்றுமை, ஒழுக்கம்"[1] | |
நாட்டுப்பண்: [[[பாக்கித்தான் நாட்டுப்பண்|காமீ தரானா]]] Error: {{Transliteration}}: transliteration text not Latin script (pos 3: ப) (help) قَومی ترانہ "தேசியப் பண்" | |
![]() பாக்கித்தானின் கட்டுப்பாட்டில் உள்ள நிலம் அடர் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது; உரிமை கோரப்பட்டு, ஆனால் கட்டுப்பாட்டில் இல்லாத நிலம் வெளிர் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. | |
தலைநகரம் | இசுலாமாபாது 33°41′30″N 73°03′00″E / 33.69167°N 73.05000°E |
பெரிய நகர் | கராச்சி 24°51′36″N 67°00′36″E / 24.86000°N 67.01000°E |
ஆட்சி மொழி(கள்) |
|
தேசிய மொழிகள் | உருது[2] |
பிராந்திய மொழிகள் | மாகாண மொழிகள் |
ஏனைய மொழிகள் | 77 இற்கும் அதிகம்[3] |
இனக் குழுகள் (2017[a]) | |
சமயம் | |
மக்கள் | பாக்கித்தானி |
அரசாங்கம் | கூட்டாட்சி இசுலாமிய நாடாளுமன்றக் குடியரசு |
• குடியரசுத் தலைவர் | ஆரிப் அல்வி |
• பிரதமர் | செபாஷ் செரீப் |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
• மேலவை | மேலவை |
• கீழவை | தேசியப் பேரவை |
விடுதலை பிரித்தானியாவிடம் இருந்து | |
23 மார்ச் 1940 | |
• விடுதலை | 14 ஆகத்து 1947 |
• குடியரசு | 23 மார்ச் 1956 |
• கிழக்குப் பகுதி வெளியேறல் | 26 மார்ச் 1971 |
14 ஆகத்து 1973 | |
பரப்பு | |
• மொத்தம் | 881,913 km2 (340,509 sq mi)[b][8] (33-ஆவது) |
• நீர் (%) | 2.86 |
மக்கள் தொகை | |
• 2022 மதிப்பீடு | 242,923,845[9] (5-ஆவது) |
• அடர்த்தி | 244.4/km2 (633.0/sq mi) (56-ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | ![]() |
• தலைவிகிதம் | ![]() |
மொ.உ.உ. (பெயரளவு) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | ![]() |
• தலைவிகிதம் | ![]() |
ஜினி (2018) | ![]() மத்திமம் |
மமேசு (2022) | ![]() தாழ் · 161-ஆவது |
நாணயம் | உரூபாய் (₨) (PKR) |
நேர வலயம் | ஒ.அ.நே+05:00 (நேரம்) |
பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிக்கப்படுவதில்லை | |
திகதி அமைப்பு |
|
வாகனம் செலுத்தல் | இடது[14] |
அழைப்புக்குறி | +92 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | PK |
இணையக் குறி |
|
பாக்கித்தான் (ஆங்கிலம்: Pakistan, Urdu: پاکستان)[c] என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அதிகாரப்பூர்வமாக பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு (ஆங்கிலம்: Islamic Republic of Pakistan, Urdu: اسلامی جمہوریۂ پاکستان)[d] என்று அழைக்கப்படுகிறது. 24.15 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன்[e] உலகின் மிக அதிக மக்கள் தொகையுடைய ஐந்தாவது நாடாக இந்நாடு திகழ்கிறது. 2023 ஆம் ஆண்டின் கணக்குப்படி உலகின் இரண்டாவது மிகப் பெரிய முசுலிம் மக்கள் தொகையை இந்நாடு கொண்டுள்ளது. இந்நாட்டின் தலைநகரம் இசுலாமாபாத் ஆகும். அதே நேரத்தில், கராச்சியானது இந்நாட்டின் மிகப் பெரிய நகரமாகவும், நிதி மையமாகவும் திகழ்கிறது. பரப்பளவின் அடிப்படையில் உலகிலேயே 33 ஆவது மிகப் பெரிய நாடு பாக்கித்தானாகும். இந்நாடானது தெற்கே அரபிக்கடல், தென்மேற்கே ஓமான் குடா தென்கிழக்கே சர் கிரிக் நீர் எல்லைக் கோடு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. கிழக்கே இந்தியா, மேற்கே ஆப்கானித்தான், தென்மேற்கே ஈரான் மற்றும் வடகிழக்கே சீனாவுடன் இது நில எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. ஓமான் குடாவில் ஓமானுடன் கடல் சார் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்நாடானது ஆப்கானித்தானின் குறுகிய வக்கான் தாழ்வாரத்தால் வடமேற்குப் பகுதியில் தஜிகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.
பாக்கித்தான் பல பண்டைக்கால பண்பாடுகளுக்குத் தளமாக விளங்கியுள்ளது. பலூசிஸ்தானத்தின் 8,500 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால தளமான மெகர்கர், வெண்கலக் காலத்தின் சிந்துவெளி நாகரிகம்,[15]:{{{3}}} மற்றும் பண்டைக்கால காந்தார நாகரிகம்[16] ஆகியவை இதில் அடங்கும். நவீன நாடான பாக்கித்தானின் பகுதிகளானவை பல்வேறு பேரரசுகள் மற்றும் அரசமரபுகளின் அதிகார எல்லைகளுக்குள் இருந்துள்ளன. இதில் அகாமனிசியர், மௌரியர், குசானர், குப்தர், இதன் தெற்குப் பகுதிகளைக் கொண்டிருந்த உமையா கலீபகம்,[17] இந்து ஷாகி, கசனவியர், தில்லி சுல்தானகம், சம்மா, ஷா மீரியர், முகலாயர்,[18] மற்றும் மிக சமீபத்தில் 1858 ஆம் ஆண்டு முதல் 1947 வரை நீடித்திருந்த பிரித்தானியாப் பேரரசு ஆகியவை அடங்கும்.
பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களுக்கு ஒரு தாயகத்தை வேண்டிய பாக்கித்தான் இயக்கத்தால் தூண்டுதல் பெற்றது, 1946 இல் அகில இந்திய முசுலிம் லீக்கின் தேர்தல் வெற்றிகள் மற்றும் பிரித்தானிய இந்தியப் பேரரசின் பிரிப்பு ஆகியவற்றுக்குப் பிறகு 1947 இல் பாக்கித்தான் சுதந்திரமடைந்தது. தன் முசுலிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு தனி நாட்டை பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு வழங்கியது. அதற்கு இணையாக எதுவும் இல்லாத அளவுக்கு பெருமளவு புலப்பெயர்வு மற்றும் உயிரிழப்புடன் இந்த பிரிப்பு நடைபெற்றது.[19]:{{{3}}}[20]:{{{3}}} பிரித்தானியப் பொதுநலவாயத்தின் ஒரு மேலாட்சிப் பகுதியாக தொடக்கத்தில் இருந்த பாக்கித்தான் 1956 ஆம் ஆண்டு அதன் அரசியலமைப்பை அதிகாரப்பூர்வமாக இயற்றியது. இசுலாமியக் குடியரசு என்று அறிவிக்கப்பட்ட ஒரு நாடாகத் தோன்றியது. 1971 இல் கிழக்கு பாக்கித்தான் எனும் பிரித்தவுறுப்புப் பகுதியானது ஒன்பது மாத நீண்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு பாக்கித்தானிலிருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற ஒரு புதிய நாடாக உருவானது. இதைத் தொடர்ந்த நான்கு தசாப்தங்களில் குடிசார் மற்றும் இராணுவ, சனநாயக மற்றும் சர்வாதிகார, ஒப்பீட்டளவில் சமயச் சார்பற்ற மற்றும் இசுலாமிய ஆகிய அரசாங்கங்களால் பாக்கித்தானானது ஆளப்பட்டு வந்துள்ளது.[21]
உலகின் ஏழாவது மிகப் பெரிய நிலையான ஆயுதப் படைகளுடன் பாக்கித்தான் ஒரு நடுத்தர சக்தியாகக் கருதப்படுகிறது. இது ஓர் அறிவிக்கப்பட்ட அணு ஆயுத நாடாகும். ஒரு பெரிய மற்றும் துரிதமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்துடன், வளர்ந்து வரும் மற்றும் வளர்ச்சியையுடைய முன்னணிப் பொருளாதாரங்களில் ஒன்றாக[22] இந்நாடு தரநிலைப்படுத்தப்படுகிறது.[23][24] குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் இராணுவ வளர்ச்சி, மேலும் அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை ஆகியவற்றின் காலங்களை சுதந்திரம் அடைந்ததிலிருந்து பாக்கித்தானின் அரசியல் வரலாறானது இயல்பாகக் கொண்டுள்ளது. இது இன மற்றும் மொழி ரீதியாக பல வேற்றுமைகளையுடைய நாடாகும். இதே போன்று வேறுபட்ட புவியியல் மற்றும் காட்டுயிர்களையும் இந்நாடு கொண்டுள்ளது. வறுமை, எழுத்தறிவின்மை, இலஞ்ச ஊழல், மற்றும் தீவிரவாதம் உள்ளிட்ட சவால்களை இந்நாடு தொடர்ந்து எதிர் கொண்டுள்ளது.[25][26][27] ஐக்கிய நாடுகள் அவை, சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு, நாடுகளின் பொதுநலவாயம், தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு, தீவிரவாத எதிர்ப்புக்கான இசுலாமிய இராணுவக் கூட்டமைப்பு ஆகியவற்றில் ஓர் உறுப்பினராக பாக்கித்தான் உள்ளது. ஐக்கிய அமெரிக்கா இந்நாட்டிற்கு நேட்டோ நாடு அல்லாத ஒரு முக்கியமான கூட்டாளி என்ற நிலையை அளித்துள்ளது.
பெயர்க் காரணம்
[தொகு]பாக்கிஸ்தான் என்ற பெயரானது ஒரு பாக்கித்தானிய இயக்கச் செயல்பாட்டாளரான சௌத்ரி ரகமத் அலி என்பவரால் முதன் முதலில் குறிப்பிடப்பட்டது. தன்னுடைய தற்போது அல்லது எப்போதும் இல்லை என்ற சிற்றேட்டில் முதலெழுத்துக்களின் ஒரு சொல்லாக இதை சனவரி 1933 இல் முதன் முதலில் (உண்மையில் "பாக்ஸ்தான்") பதிப்பித்தார்.[28][29][30] "இந்தியா மற்றும் ஆசியாவின் பஞ்சாப், ஆப்கானியா, காசுமீர், சிந்து மற்றும் பலூசிஸ்தான் ஆகிய அனைத்து தாயகங்களின் பெயர்களில் இருந்தும் எடுக்கப்பட்ட முதல் எழுத்துக்களை பாக்கிஸ்தான் கொண்டுள்ளது" என ரகமத் அலி விளக்கினார். மேலும் அவர் குறிப்பிட்டதாவது, "பாக்கிஸ்தான் என்பது ஒரு பாரசீக மற்றும் உருது ஆகிய இரு மொழிச் சொல்லாகும்... இதன் பொருள் பாக்ஸ்களின் நிலம் என்பதாகும், ஆன்மீக ரீதியாக தூய்மையான மற்றும் மாசற்ற என்பதாகும்".[31] பாரசீக மற்றும் பஷ்தூ ஆகிய இரு மொழிகளில் பாக் என்ற சொல்லுக்கு 'தூய்மையான' மற்றும் -ஸ்தான் என்ற பாரசீகப் பின்னொட்டின் பொருள் 'நிலம்' அல்லது 'இடம்' என்ற பொருள்படுவதாக சொற்பிறப்பியல்லாளர்கள் குறிப்பிடுகின்றனர்.[29]
ரகமத் அலியின் பாக்கித்தான் என்ற கருத்துருவானது இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியுடன் மட்டுமே தொடர்புடையதாக இருந்தது. வங்காளத்தின் முசுலிம் பகுதிகளுக்கு "பங்க்ளாஸ்தான்" மற்றும் ஐதராபாத் இராச்சியத்திற்கு "ஒஸ்மானிஸ்தான்" ஆகிய பெயர்களையும் கூட இவர் பரிந்துரைத்தார். மேலும், இந்த மூன்று பகுதிகளுக்கு இடையில் ஓர் அரசியல் கூட்டமைப்பு ஏற்படுவதையும் பரிந்துரைத்தார்.[32]
வரலாறு
[தொகு]வரலாற்றுக்கு முந்தைய மற்றும் பண்டைக் காலம்
[தொகு]தெற்காசியாவில் தொடக்க கால பண்டைய மனித நாகரிங்களில் சில தற்போதைய பாக்கித்தானை உள்ளடக்கிய பகுதிகளிலிருந்து தோன்றின.[35] பழைய கற்காலத்தின் பிந்தைய பகுதியின் போது இருந்த சோவனிகப் பண்பாடானது இப்பகுதியின் தொடக்க காலத்தில் அறியப்பட்ட குடியிருப்பாளர்களைக் கொண்டிருந்தது. பஞ்சாப்பின் சோவன் பள்ளத்தாக்கில் இம்மக்களின் தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.[36] தற்போதைய பாக்கித்தானின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டிருந்த சிந்துப் பகுதியானது பல தொடர்ச்சியான பண்டைக்காலப் பண்பாடுகளின் தளமாக இருந்துள்ளது. இதில் புதிய கற்கால (7000–4300 பொ. ஊ. மு.) தளமான மெகர்கர்,[37]:{{{3}}}[38]:{{{3}}}[39]:{{{3}}} தெற்காசியாவின் 5,000 ஆண்டு கால நகர வாழ்வின் வரலாறு முதல் மொகெஞ்சதாரோ மற்றும் அரப்பா உள்ளிட்ட சிந்துவெளி நாகரிகத்தின் பல்வேறு தளங்களும் அடங்கும்.[40]:{{{3}}}[41]
சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து வேத காலத்தில் (1,500-500 பொ. ஊ. மு.) பல அலைகளாக நடந்த புலப்பெயர்வில் நடு ஆசியாவிலிருந்து பஞ்சாப் பகுதிக்கு இந்திய-ஆரியப் பழங்குடியினங்கள் நகர்ந்தன.[42] தங்களது தனித்துவமான சமயப் பாரம்பரியங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை அவர்கள் தங்களுடன் கொண்டு வந்தனர். இவை உள்நாட்டுப் பண்பாட்டுடன் இணைந்தன.[43] பாக்திரியா-மர்கியானா பண்பாட்டைச் சேர்ந்த இந்திய-ஆரியர்களின் சமய நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள், மற்றும் முந்தைய சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த பூர்வீக அரப்பா சிந்து நம்பிக்கைகள் இறுதியாக வேதப் பண்பாடு மற்றும் பழங்குடியினங்களின் வளர்ச்சிக்குக் காரணமாயின.[43] இதில் மிக முக்கியமானது காந்தார நாகரிகம் ஆகும். இது இந்தியா, நடு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு இணையும் இடத்தில் செழித்திருந்தது. வணிக வழிகளை இணைத்தது. வேறுபட்ட நாகரிகங்களில் இருந்து பண்பாட்டுத் தாக்கங்களை உள்ளிழுத்துக் கொண்டது.[44] தொடக்க கால வேதப் பண்பாடானது ஒரு பழங்குடியின, மேய்ச்சல் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டிருந்த சமூகமாக, சிந்துவெளியை மையமாகக் கொண்டிருந்தது. அது தற்போதைய பாக்கித்தானில் அமைந்திருந்தது.[45] இந்த காலத்தின் போது இந்து சமயத்தின் மிகப் பழமையான புனித நூல்களான வேதங்கள் உருவாக்கப்பட்டன.[46][f]
செவ்வியல் காலம்
[தொகு]
பொ. ஊ. மு. 517 வாக்கில் பாக்கித்தானின் மேற்குப் பகுதிகளானவை அகாமனிசியப் பேரரசின் பகுதியாக உருவாயின.[48] பொ. ஊ. மு. 326 இல் பேரரசர் அலெக்சாந்தர் பல்வேறு உள்ளூர் ஆட்சியாளர்களைத் தோற்கடித்ததன் மூலம் இப்பகுதியை வென்றார். தோற்கடிக்கப்பட்டவர்களில் மிக குறிப்பிடத்தக்கவர் செலத்தில் தோற்கடிக்கப்பட்ட மன்னர் போரசு ஆவார்.[49] இதைத் தொடர்ந்து சந்திரகுப்த மௌரியரால் தோற்றுவிக்கப்பட்டு, பேரரசர் அசோகரால் விரிவாக்கப்பட்டு பொ. ஊ. மு. 185 வரை நீடித்திருந்த மௌரியப் பேரரசு இப்பகுதியை ஆட்சி செய்தது.[50][51][52] பாக்திரியாவின் தெமித்திரசுவால் (180–165 பொ. ஊ. மு.) நிறுவப்பட்ட இந்திய-கிரேக்க இராச்சியமானது காந்தாரம் மற்றும் பஞ்சாப்பை உள்ளடக்கியிருந்தது. இது தன் உச்சபட்ச விரிவாக்கத்தை மெனாந்தரின் (165–150 பொ. ஊ. மு.) ஆட்சியின் கீழ் அடைந்தது. இப்பகுதியில் கிரேக்க-பௌத்தப் பண்பாடு செழிப்பதற்குக் காரணமானது.[53][54][55] உலகின் தொடக்க கால பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி மையங்களில் ஒன்றான தக்சசீலமானது பொ. ஊ. மு. 6 ஆம் நூற்றாண்டில் பிந்தைய வேத காலத்தின் போது நிறுவப்பட்டது.[56] பேரரசர் அலெக்சாந்தரின் படையெடுத்து வந்த இராணுவங்களாலும், பொ. ஊ. 4 ஆவது அல்லது 5 ஆவது நூற்றாண்டில் சீன புனிதப் பயணிகளாலும் பதிவு செய்யப்பட்டு இந்த பண்டைக் கால பல்கலைக் கழகமானது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[57][58][59] தமது உச்ச நிலையின் போது இராய் அரசமரபானது (489–632 பொ. ஊ.) சிந்து மற்றும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளை ஆண்டது.[60]
நடுக் காலம்
[தொகு]அரேபியப் படையெடுப்பாளரான முகம்மது இப்னு காசிம் சிந்து, மற்றும் பஞ்சாபின் சில பகுதிகளை பொ. ஊ. 711 இல் வென்றார்.[50][61] பாக்கித்தானிய அரசாங்கத்தின் அலுவல்பூர்வ காலவரிசையானது இந்நேரத்தையே பாக்கித்தானுக்கான அடித்தளம் நிறுவப்பட்ட காலமாகக் குறிப்பிடுகிறது.[62] தொடக்க நடுக் காலமானது (642–1219 பொ. ஊ.) இப்பகுதியில் இசுலாம் பரவுவதைக் கண்டது.[63] 8 ஆம் நூற்றாண்டில் இசுலாமின் தொடக்கம் தொடங்குவதற்கு முன்னர் பாக்கித்தான் பகுதியானது பல நம்பிக்கைகளுக்குத் தாயகமாக இருந்தது. இதில் இந்து சமயம், பௌத்தம், சைனம் மற்றும் சரதுசம் ஆகியவையும் அடங்கும்.[64]:{{{3}}}[65] இக்காலத்தின் போது சூபி சமய போதகர்கள் இப்பகுதியின் பெரும்பாலான மக்களை இசுலாமுக்கு மதம் மாற்றியதில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றினர்.[66] பொ. ஊ. 7 ஆம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை காபுல் பள்ளத்தாக்கு, காந்தாரம் மற்றும் மேற்கு பஞ்சாப்பை நிர்வகித்த துர்க் மற்றும் இந்து ஷாகி அரசமரபுகளின் தோல்வியைத் தொடர்ந்து பல தொடர்ச்சியான முசுலிம் பேரரசுகள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளன. இதில் கசனவியப் பேரரசு (975–1187 பொ. ஊ.), கோரி இராச்சியம் மற்றும் தில்லி சுல்தானகம் (1206–1526 பொ. ஊ.) ஆகியவை அடங்கும்.[67] தில்லி சுல்தானகத்தின் கடைசி அரசமரபான லௌதி அரசமரபானது முகலாயப் பேரரசால் (1526–1857 பொ. ஊ.) இடமாற்றம் செய்யப்பட்டது.[68]

பாரசீக இலக்கியம் மற்றும் உயர்குடியினப் பண்பாட்டை முகலாயர்கள் அறிமுகப்படுத்தினார். இப்பகுதியில் இந்திய-பாரசீகப் பண்பாட்டின் வேர்களை நிறுவினர்.[70] நவீன கால பாக்கித்தான் பகுதியில் முகலாயர் காலத்தின் போது முக்கியமான நகரங்களாக முல்தான், இலாகூர், பெசாவர் மற்றும் தட்டா ஆகியவை திகழ்ந்தன.[71] போற்றத்தக்க முகலாயக் கட்டடங்களுக்குத் தளமாக இந்த நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.[72] 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியானது முகலாயப் பேரரசின் ஆட்சியின் கீழ் தொடர்ந்து இருந்தது.[73] 18 ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசின் மெதுவான சிதைவுறுதலானது எதிரி சக்திகளின் வளர்ச்சியால் வேகப்படுத்தப்பட்டது. அந்த எதிரி சக்திகளில் மராத்தியக் கூட்டமைப்பு மற்றும், பிந்தைய கால சீக்கியப் பேரரசு, மேலும், 1739 இல் ஈரானில் இருந்து நடத்தப்பட்ட நாதிர் ஷாவின் படையெடுப்புகள், மற்றும் 1759 இல் ஆப்கானித்தானின் துராணிப் பேரரசு ஆகியவை அடங்கும்.[74][75] வங்காளத்தில் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த பிரித்தானியரின் அரசியல் சக்தியானது நவீன கால பாக்கித்தானை அந்நேரம் வரை அடையவில்லை.[76]
குடியேற்ற ஆட்சி
[தொகு]சிந்துவின் தல்பூர்களால் நிர்வகிக்கப்பட்ட ஒரு சிறிய மீனவ கிராமமான, கடற்கரையைப் பாதுகாக்க ஒரு மணல் கோட்டையுடன் கூடிய கராச்சியானது கைப்பற்றப்பட்ட 1839 ஆம் ஆண்டு வரை நவீன் பாக்கித்தானின் எந்த ஒரு பகுதியும் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இல்லை. ஒரு துறைமுகம் மற்றும் இராணுவ தளத்துடன் கூடிய, அந்நியப் பகுதிகளால் சூழப்பட்ட பகுதியாக இப்பகுதியை இதைத் தொடர்ந்து முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போரில் பிரித்தானியா பயன்படுத்தியது.[81] 1843 இல் எஞ்சிய சிந்துப் பகுதியானது பெறப்பட்டது.[82] இறுதியாக, ஒரு தொடர்ச்சியான போர்கள் மற்றும் ஒப்பந்தங்களின் வழியாக கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் பிறகு சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் (1857–1858) பிந்தைய காலத்தில் பிரித்தானியப் பேரரசின் இராணி விக்டோரியாவின் நேரடி ஆட்சி ஆகியவற்றின் போது பெரும்பாலான பகுதியானது பெறப்பட்டது.[83] சிந்தில் மியானி யுத்தத்தால் (1843) தீர்க்கப்பட்ட பலூச்சி தல்பூர் அரசமரபுக்கு எதிரான சண்டை,[84] ஆங்கிலேய-சீக்கியப் போர்கள் (1845–1849)[85] மற்றும் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்கள் (1839–1919)[86] உள்ளிட்டவை இப்பகுதியில் நடைபெற்ற முக்கியமான சண்டைகளாகும். 1893 வாக்கில் அனைத்து நவீன கால பாக்கித்தானும் பிரித்தானிய இந்தியப் பேரரசின் பகுதியாயின. 1947 இல் சுதந்திரம் அடையும் வரை பிரித்தனியாவின் ஆட்சியின் கீழ் தொடர்ந்தன.[87]
பிரித்தானிய ஆட்சியின் கீழ் நவீன கால பாக்கித்தானானது முதன்மையாக சிந்துப் பிரிவு, பஞ்சாப் மாகாணம் மற்றும் பலூசிஸ்தான் முகமை என பிரிக்கப்பட்டிருந்தது. பல்வேறு மன்னர் அரசுகளையும் கூட இப்பகுதி உள்ளடக்கியிருந்தது. இதில் மிகப் பெரியது பகவல்பூர் ஆகும்.[88][89]
இப்பகுதியில் பிரித்தானியருக்கு எதிரான முக்கியமான ஆயுதமேந்திய போராட்டமானது 1857 இல் நடைபெற்ற சிப்பாய்க் கிளர்ச்சி ஆகும்.[90] இந்து சமயம் மற்றும் இசுலாமுக்கு இடையிலான உறவு முறையில் வேறுபாடுகளானவை பிரித்தானிய இந்தியாவில் குறிப்பிடத்தக்க பதட்டங்களுக்குக் காரணமாயின. சமய வன்முறைக்கு இது வழி வகுத்தது. இந்துக்கள் மற்றும் முசுலிம்களுக்கு இடையே மொழி சர்ச்சையும் இதை மேலும் கடுமையாக்கியது.[79][91] இந்து மறுமலர்ச்சிக்கு எதிராக சர் சையது அகமது கானால் தலைமை தாங்கப்பட்ட ஒரு முசுலிம் சிந்தனைசார் இயக்கமானது இரு-நாட்டு கோட்பாட்டுக்கு வலியுறுத்தியது. 1906 இல் அகில இந்திய முசுலிம் லீக் நிறுவப்படுவதற்கு இது வழி வகுத்தது.[77]:{{{3}}}[78]:{{{3}}}[79]
மார்ச் 1929 இல் நேரு அறிக்கைக்குப் பதிலாக பாக்கித்தானை நிறுவிய முகம்மது அலி ஜின்னா தனது 14 குறிப்புகளை வெளியிட்டார். ஓர் ஒன்றிணைந்த இந்தியாவில் முசுலிம் சிறுபான்மையினரின் குறிக்கோள்களைப் பாதுகாப்பதற்கான முன்மொழிவுகளை இது உள்ளடக்கியிருந்தது. இந்த முன்மொழிவுகளானவை நிராகரிக்கப்பட்டன.[92]:{{{3}}}[93]:{{{3}}}[94]:{{{3}}} 1930 திசம்பர் 29 அன்று தன்னுடைய உரையில் வடமேற்கு இந்தியாவில் இருந்த முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசுகளை ஒன்றிணைக்க முகமது இக்பால் பரிந்துரைத்தார். இதில் பஞ்சாப், வட-மேற்கு எல்லைப்புற மாகாணம், சிந்து மற்றும் பலூசிஸ்தான் ஆகியவை அடங்கும்.[94]:{{{3}}}[95] 1937 முதல் 1939 வரை முசுலிம் லீக்கை காங்கிரசால் தலைமை தாங்கப்பட்ட பிரித்தானிய மாகாண அரசாங்கங்கள் தவிர்த்தன என்ற பார்வையானது ஜின்னா மற்றும் பிற முசுலிம் லீக் தலைவர்கள் இரு-நாடு கோட்பாட்டைத் தழுவுவதற்குத் தூண்டியது.[96][97] 1940 ஆம் ஆண்டில் பாக்கித்தான் முன்மொழிவு பின்பற்றப்படுவதற்கு இது வழி வகுத்தது. இதை ஏ. கே. பசுலுல் ஹக் சமர்ப்பித்தார். இது பாக்கித்தான் தீர்மானம் என்றும் கூட அறியப்படுகிறது.[98]
1942 வாக்கில் இந்தியா நேரடியாக சப்பானியப் படைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளானதுடன் பிரித்தானியா இரண்டாம் உலகப் போரின் போது குறிப்பிடத்தக்க அளவுக்கு அழுத்தத்தை எதிர் கொண்டது. போரின் போது ஆதரவு அளிப்பதற்கு மாற்றாக இந்தியாவுக்கு தாமாக முன் வந்து சுதந்திரத்தை அளிப்பதாக பிரித்தானியா உறுதியளித்தது. எனினும், இந்த உறுதியளிப்பானது ஒரு கூறை உள்ளடக்கியிருந்தது. அதில் உருவாக்கப்படும் மேலாட்சிப் பகுதியுடன் இணையுமாறு பிரித்தானிய இந்தியாவின் எந்த ஒரு பகுதியும் கட்டாயப்படுத்தப்படாது என்று குறிப்பிடப்பட்டது. ஒரு சுதந்திரமான முசுலிம் நாட்டுக்கு ஆதரவளிப்பதாக இதைப் புரிந்து கொள்ளலாம். காந்தியின் தலைமையின் கீழான காங்கிரசானது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கியது. பிரித்தானிய ஆட்சிக்கு உடனடி முடிவைக் கொண்டு வர வேண்டியது. மாறாக, முசுலிம் லீக்கானது ஐக்கிய இராச்சியத்தின் போர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வழியைத் தேர்ந்தெடுத்தது. ஒரு முசுலிம் நாடு நிறுவப்படுவதற்கான சாத்தியத்திற்கு இவ்வாறாக உதவியது.[99]:{{{3}}}[100]
சுதந்திரம்
[தொகு]
1946 ஆம் ஆண்டு தேர்தல்களானவை முசுலிம் இடங்களில் 90%ஐ முசுலிம் லீக் வென்றதைக் கண்டன. சிந்து மற்றும் பஞ்சாப்பில் இருந்த நில உடைமையாளர்களால் இதற்கு ஆதரவளிக்கப்பட்டிருந்தது. இந்திய முசுலிம்களுக்கான லீக்கின் பிரதிநிதித்துவம் குறித்து தொடக்கத்தில் ஐயத்தைக் கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரசை அக்கட்சியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் நிலைக்கு இம்முடிவுகள் தள்ளின.[101]:{{{3}}} இந்தியாவைப் பிரிக்க பிரித்தானியருக்கு எண்ணம் இல்லாத போதும் அந்நிலையை மறுபரிசீலனை செய்ய இந்திய முசுலிம்களின் குரலாக ஜின்னா உருவானதானது கட்டாயப்படுத்தியது.[62] இந்தியப் பிரிவினையைத் தடுக்கும் தங்களது கடைசி முயற்சியாக பிரித்தானியர் 1946 ஆம் ஆண்டின் அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழுவை முன்மொழிந்தனர்.[102]:{{{3}}}
அமைச்சரவை தூதுக் குழுவானது தோல்வியடைந்த போது பிரித்தானியர் சூன் 1948 வாக்கில் தமது ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் எண்ணத்தை அறிவித்தனர்.[103][104] இந்தியத் தலைமை ஆளுநரான பர்மாவின் மவுண்ட்பேட்டன் பிரபு, அகில இந்திய முசுலிம் லீக்கின் முகம்மது அலி ஜின்னா மற்றும் காங்கிரசின் சவகர்லால் நேரு ஆகியோரைக் கொண்ட கடுங்கண்டிப்பான விவாதங்களைத் தொடர்ந்து பிரித்தானிய இந்தியாவை பாக்கித்தான் மற்றும் இந்தியா என்ற பெயர்களைக் கொண்ட இரு சுதந்திரமான மேலாட்சிப் பகுதிகளாகப் பிரிக்கும் அலுவல்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை 1947 சூன் 3 அன்று மாலை மவுண்ட்பேட்டன் வெளியிட்டார். மவுண்ட்பேட்டனின் அலுவலகத்தில் உலக அளவில் ஒலிபரப்பப்படும் முன்னர் இத்திட்டத்தின் தங்களது நகல்களை தோராயமாக ஒரு டசன் முதன்மையான மன்னர் அரசுகளின் பிரதம மந்திரிகள் பெற்றனர். அன்று இரவு 7:00 மணிக்கு அனைத்திந்திய வானொலியானது இந்த பொது அறிவிப்பை ஒலிபரப்பியது. முதலில் இந்தியத் தலைமை ஆளுநரின் உரையுடன் தொடங்கியது. பிறகு, நேரு மற்றும் ஜின்னா தத்தமது உரையை ஆற்றினர்.[105]
இந்தியாவைப் பிரிக்க ஐக்கிய இராச்சியம் ஒப்புக் கொண்ட போது[105] நவீன நாடான பாக்கித்தான் 14 ஆகத்து 1947 அன்று நிறுவப்பட்டது (இசுலாமிய நாட்காட்டியின் 1366 ஆம் ஆண்டின் ரமலான் மாதத்தின் 27 ஆம் நாள் இதுவாகும். இசுலாமியப் பார்வைப்படி மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக இந்நாள் கருதப்பட்டது).[106][107] இந்தப் புதிய நாடானது பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதில் பலூசிஸ்தான், கிழக்கு வங்காளம், வட-மேற்கு எல்லைப்புற மாகாணம், மேற்கு பஞ்சாப் மற்றும் சிந்து ஆகிய மாகாணங்கள் உள்ளடங்கியிருந்தன.[108]
பஞ்சாப் மாகாணத்தைப் பிரிக்கும் போது நடந்த அமளியில் 2 முதல் 20 இலட்சத்திற்கு இடையிலான மக்கள் கொல்லப்பட்டனர். சமயங்களுக்கு இடையிலான ஒரு பழிவாங்கும் இனப்படுகொலை என்று சிலர் இதைக் குறிப்பிட்டனர்.[109] இந்தியாவிலிருந்து மேற்கு பாக்கித்தானுக்கு தோராயமாக 65 இலட்சம் முசுலிம்களும், மேற்கு பாக்கித்தானிலிருந்து இந்தியாவுக்கு 47 இலட்சம் இந்துக்களும், சீக்கியர்களும் இடம் பெயர்ந்தனர்.[110]:{{{3}}} மனித வரலாற்றில் மிகப் பெரிய மனித இடம் பெயர்வு இது தான்.[111] சம்மு மற்றும் காசுமீரின் மன்னர் அரசு மீது ஏற்பட்ட தொடர்ந்த பிரச்சினையானது இறுதியாக 1947-48 ஆம் ஆண்டின் இந்தியா-பாக்கித்தான் போருக்குக் காரணமானது.[112]
புவியியல்
[தொகு]பாக்கிஸ்தானின் அண்மையில் இந்தியா, சீனா, ஈரான், ஆப்கானித்தான் ஆகிய நாடுகள் உள்ளன. பாக்கிஸ்தானின் தெற்கில் அரபிக்கடல் உள்ளது. இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான சிந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாக்கிஸ்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் என்பன தற்போது பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
மக்கள்
[தொகு]மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாமிடம் வகிக்கிறது. பாக்கிஸ்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இஸ்லாமியர்கள். உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி. சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது.
நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]
பாக்கிஸ்தானானது, 4 மாகாணங்கள், 1 நடுவண நிர்வாகப்பழங்குடி பிரதேசம் மற்றும் 1 தலைநகரப்பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

மாகாணங்கள்:
பிரதேசங்கள்:
பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரம்:
அரசியல்
[தொகு]அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம்.[சான்று தேவை] பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக்கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது படைத்துறையினரால் (ராணுவத்தால்) 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது. பாக்கிஸ்தானின் படைத்துறையைச் சேர்ந்த பெர்வேஸ் முஷாரஃப் அண்மையில் அதிபராக இருந்தார். முஷாரப் – பெனாசிர் இணக்கப்பாடு ஏற்படுவதில் குழப்பநிலை நீடித்து, இறுதியில் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டார். தற்பொழுது பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி குடியரசுத்தலைவரகாக உள்ளார்.
பொருளாதாரம்
[தொகு]பாக்கிஸ்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று. பெரும்பாலும் அமெரிக்காவை நம்பியே இதன் பொருளாதாரம் உள்ளது இராணுவபலத்தை பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. ஆப்கனிஸ்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவுமுகமாக நடந்துகொண்டதால் தற்காலிகமாக இச்சிக்கல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு ஓப்பியம் போன்ற போதைப்பொருட்கள் கடத்திச் செல்லும் வழிகளில் பாக்கிஸ்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.[சான்று தேவை]
குறிப்புகள்
[தொகு]- ↑ வெவ்வேறு ஆதாரங்கள் பரவலாக வெவ்வேறு புள்ளிவிவரங்களைக் கொடுக்கின்றன. மதிப்பீடுகள் 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தரப்பட்டுள்ளன.[4][5]
- ↑ "காசுமீரின் பாக்கித்தானியப் பகுதிகளுக்கான தரவுகளை உள்ளடக்கியது; ஆசாத் காஷ்மீர் (13,297 km2 or 5,134 sq mi) மற்றும் வடக்கு நிலங்கள் (72,520 km2 or 28,000 sq mi).[7] இவற்றைத் தவிர்த்த பிரதேசங்களின் பரப்பளவு கிட்டத்தட்ட 796,095 km2 (307,374 sq mi)."
- ↑ Urdu: پَاکِسْتَان, Urdu pronunciation: [ˈpɑːkɪst̪ɑːn] ⓘ; Pronounced variably in English as /ˈpækɪstæn/ (ⓘ), /ˈpɑːkɪstɑːn/ (ⓘ), /ˌpækɪˈstæn/, and /ˌpɑːkɪˈstɑːn/.
- ↑ ISO: اِسْلامی جُمْہُورِیَہ پَاکِسْتَان, Islāmi Jumhūriyāh Pākistān
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;fn3
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Rigveda
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The State Emblem". Ministry of Information and Broadcasting, பாக்கித்தான் அரசு. Archived from the original on 1 July 2007. Retrieved 18 December 2013.
- ↑ Article: 251 National language. https://pakistanconstitutionlaw.com/article-251-national-language/. பார்த்த நாள்: 23 July 2018.
- ↑ Ethnologue 2022.
- ↑ "Pakistan's population is 207.68m, shows 2017 census result". 19 May 2021.
- ↑ "TABLE 11 – POPULATION BY MOTHER TONGUE, SEX AND RURAL/ URBAN" (PDF). www.pbs.gov.pk. Pakistan Bureau of Statistics. 2021. Archived from the original (PDF) on 9 April 2022. Retrieved 12 May 2022.
- ↑ "Part I: "Introductory"". pakistani.org.
- ↑ "Pakistan statistics". Geohive. Archived from the original on 6 April 2013. Retrieved 20 April 2013.
- ↑ "Where is Pakistan?". worldatlas.com. 24 February 2021.
- ↑ "Pakistan". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2025 ed.). நடுவண் ஒற்று முகமை. Retrieved 24 September 2022. (Archived 2022 edition)
- ↑ 10.0 10.1 10.2 "World Economic Outlook database: April 2022". IMF. Retrieved 26 May 2022.
- ↑ "Report for Selected Countries and Subjects".
- ↑ "Gini Index". World Bank. Retrieved 12 August 2021.
- ↑ "Human Development Report 2021/2022" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். 8 September 2022. Retrieved 8 September 2022.
- ↑ Loureiro, Miguel (28 July 2005). "Driving—the good, the bad and the ugly". Daily Times (Pakistan) இம் மூலத்தில் இருந்து 10 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120110085150/http://www.dailytimes.com.pk/default.asp?page=story_28-7-2005_pg3_5.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Wright-2009
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Badian 1987.
- ↑ Wynbrandt 2009.
- ↑ Spuler 1969.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Copland-2001
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Metcalf-2006
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Talbot 2016.
- ↑ Zia & Burton 2023.
- ↑ Rais 2017.
- ↑ Cornwall & Edwards 2014.
- ↑ Joseph 2016.
- ↑ Baqir 2018.
- ↑ SATP 2024.
- ↑ Aziz 1987.
- ↑ 29.0 29.1 Saqib & Malik 2018.
- ↑ Lahiri 2023.
- ↑ Tummala 1996.
- ↑ Anand 1991.
- ↑ Parker 2017.
- ↑ Burrison 2017.
- ↑ Allchin & Petraglia 2007.
- ↑ Ahmed 2014.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Coningham-Young-2015
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Fisher-2018
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Dyson-2018
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Allchin-1982
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Dales, Kenoyer & Alcock 1986.
- ↑ Oursel 2015.
- ↑ 43.0 43.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Vedic period
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Behrendt 2007.
- ↑ Rahmaan 2017.
- ↑ Oberlies 2023.
- ↑ Stonard 2017.
- ↑ Dandamaev 2023.
- ↑ Sadasivan 2011.
- ↑ 50.0 50.1 James 1980.
- ↑ Khan 2022, ப. 114.
- ↑ Cooke 2017.
- ↑ Pollitt 1986.
- ↑ Quintanilla 2007.
- ↑ Kubica 2023.
- ↑ Westmoreland 2019.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Needham-1994
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Kulke-Rothermund-2016
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Mookerji 1989.
- ↑ Banerjee 2022.
- ↑ Mufti 2013.
- ↑ 62.0 62.1 Hoodbhoy 2023.
- ↑ Cavendish 2006, ப. 318.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Stubbs-Thomson-2016
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Malik 2006, ப. 47.
- ↑ Lapidus 2014.
- ↑ Samad 2011.
- ↑ Faroqhi 2019.
- ↑ Junejo 2020.
- ↑ Canfield 2002.
- ↑ Chandra 2005.
- ↑ Malik 2006, ப. 79.
- ↑ Metcalf & Metcalf 2006.
- ↑ Haleem 2013.
- ↑ MacDonald 2017.
- ↑ Simpson 2007.
- ↑ 77.0 77.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Wolpert-1984
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 78.0 78.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Sengupta-2023
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 79.0 79.1 79.2 Holt & Curta 2016.
- ↑ Wolpert 1984.
- ↑ Gayer 2014.
- ↑ Sharma, D'Angelo & Giri 2020.
- ↑ Pirbhai 2009.
- ↑ Harjani 2018.
- ↑ Cook 1975.
- ↑ Khan 2022, ப. 119.
- ↑ Cavendish 2006, ப. 365.
- ↑ Law 1999.
- ↑ Hussain 2015.
- ↑ Malleson 2016.
- ↑ Hali & Akhtar 1993.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Hardy-1972
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Wuthnow-2013
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 94.0 94.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Singh-Shani-2021
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Iqbal
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Pandeya 2003.
- ↑ Basu & Miroshnik 2017.
- ↑ M. H. Khan 2016.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Tucker-2020
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Chandra 2008.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Mohiuddin-2007-1
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Mohiuddin-2007-2
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Wolpert 1984, ப. 309.
- ↑ Markovits 2012.
- ↑ 105.0 105.1 Wolpert 1984, ப. 328–329.
- ↑ Hasanie 2013.
- ↑ Akbarzadeh 2020.
- ↑ Cohen 2004, ப. 6.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Riots-1
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Hasan-Raza-2009
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Riggs 2024.
- ↑ Bhaumik 1996.