அசோக வனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோக வன சீதையை மிரட்டும் இராவணன். மரத்தின் மேல் அனுமன் (ஓவியம்)

இராமயண காவியத்தின்படி, இராமரின் மனைவியான சீதையை இராவணன் கவர்ந்து சென்று, தற்கால இலங்கையில் அசோக மரங்கள் நிறைந்த தோட்டத்தில் சிறை வைத்த இடமே அசோக வனம் எனக் கருதப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வனம் இலங்கையின் மலையகத்தில், நுவரெலியா மாவட்டத்தின் "சீதா எலிய" எனுமிடத்தில், நுவரெலியா நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் கக்கலை தாவரவியற் பூங்காவில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1][2] தற்போது இவ்விடத்தில் சீதை அம்மன் கோவில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "WWW Virtual Library: Sita Eliya / Seetha Eliya / Sitha Eliya".
  2. "Amazing Sri Lanka : Nature : Seetha Amman Temple - Seetha Eliya". Archived from the original on 2010-11-25. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக_வனம்&oldid=3574708" இலிருந்து மீள்விக்கப்பட்டது