அனுசுயா
Jump to navigation
Jump to search
அனுசுயா, இந்து சமய புராணங்களில் கற்புக்கரசியாக வர்ணிக்கப்படும் பெண். இவள் அத்ரி முனிவரின் மனைவி ஆவாள். இவள் தத்தாத்ரேயரின் தாய்.
மும்மூர்த்திகளும் அனுசுயாவின் கற்பின் திறனை சோதிக்க முனிவர் வேடம் பூண்டு, அவள் வீட்டிற்கு வந்தனர். அவள் நிர்வாணமாக உணவளித்தால் தான் ஏற்றுக் கொள்வோம் எனக் கூறினர். அவள் தன் கற்பின் திறனால் மூவரையும் குழந்தைகளாக்கி பாலூட்டினாள். மும்மூர்த்திகளின் மனைவியர் அனுசுயாவை வேண்டி தம் கணவரைத் திரும்பப் பெற்றனர்.
இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளபடி, இராமனும் சீதையும் இவள் குடும்பம் வாழ்ந்த சித்திரகூடம் காட்டிற்கு வருகை தந்த போது, அவர்களை உபசரித்து உதவினாள்.[1] பக்தியுடனும் பணிவுடனும் வேலைகளைச் செய்தமையால் அரிய பெரும் சக்திகளைப் பெற்றாள்.