திரிசிரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்தலையுடைய இராவணனின் மகன் திரிசிரனை, அனுமான் தலைமையிலான வானரப்படைகள் சூழ்ந்து தாக்குதல்

திரிசிரன் அல்லது முத்தலையன் (ஆங்கிலம்: Trishira அல்லது Trisiras, சமக்கிருதம்: त्रिसिर) அசுரர் குல மன்னரும் இலங்கை வேந்தனுமான இராவணனின் ஏழு மகன்களில் ஒருவர் ஆவார். மூன்று தலைகள் கொண்டவன் என்பதால் இவன் திரிசிரஸ் என அழைக்கப்பட்டான். இவனது மற்ற சகோதரர்கள் முறையே இந்திரஜித், பிரகஸ்தன், அதிகாயன், அட்சயகுமாரன் மற்றும் நராந்தகன் - தேவாந்தகன் (இரட்டையர்) ஆவார்.

இராமகாதையின் யுத்த காண்டத்தில், அனுமானின் தாக்குதலுக்கு இலக்காகி, திரிசிரனின் மூன்று தலைகளும் கொய்யப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Trishira". Archived from the original on 2016-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-14.


"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிசிரன்&oldid=3558042" இலிருந்து மீள்விக்கப்பட்டது