விபீடணன்
விபீடணன் | |
---|---|
![]() இலங்கையின் மன்னனாக விபீடணன் | |
ஆட்சி | இராவணனுக்குப் பின் அரசனானான். |
முன்னிருந்தவர் | இராவணன் |
அரசி | சார்மா |
மரபு | புலாத்தியம் |
தந்தை | விசுராவாசு |
தாய் | கேசினி |
பிறப்பு | இலங்கை |
இறப்பு | புராணங்களின் படி இவனுக்கு இறப்பில்லை |
விபீடணன், விபீசணன் அல்லது வீடணன் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு ஒரு கதை மாந்தர். இவரது மகள் திரிசடை ஆவார். இவன் இராவணனின் தம்பி ஆவான். நீதி நியாயத்தின் படி வாழ்ந்து வந்தான். சீதையை இராவணன் கடத்தி வந்த போது அநியாயம் என்று எடுத்து உரைத்தான். சீதையை விட்டுவிடுமாறு பல ஆலோசனைகள் கூறினான். ஆனால் இராவணன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவ விரும்பாத விபீடணன் இராமனிடம் அடைக்கலம் அடைந்து அவனுக்கு உதவினான்.[1] இராவணனுக்கு எதிராக இராமன் நடத்திய போரில் இராவணனும், அவனது கூட்டத்தினரும் மாண்டனர். இராமன் விபீடணனை இலங்கை அரசனாக முடி சூட்டினான்.
படக்காட்சிகள்[தொகு]
கோதண்டராமர் கோயிலின் கருவறைச் சுவர்களில் வரைந்துள்ள இராமாயண நிகழ்வுகளில், வீடணன் குறித்தான சித்திரங்கள்.