அத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரம்மரிஷி அத்திரி
அத்திரி முனிவருடன் இராமன் & இலக்குமணன் உரையாடுதல் , சீதையுடன் அத்திரி முனிவரின் மனைவி அனுசுயா உரையாடுதல்
தகவல்
துணைவர்(கள்)அனுசுயா
பிள்ளைகள்துர்வாசர், தத்தாத்ரேயர், சந்திரன்

அத்ரி, ரிக் வேத கால முனிவர்களில் ஒருவராவார். இவர் பிரம்மனின் மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர். இவரது மகன்களில் புகழ்பெற்றவர்கள் துர்வாசர் & தத்தாத்ரேயர் ஆவார். சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களில் இவரும் ஒருவர். இவரது மகன்கள் பலர் ரிக் வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன.[1] இவரது மனைவி அனுசுயா தேவி ஆவார்.

இராமாயணத்தில்[தொகு]

14 ஆண்டு வனவாசத்தின் போது, சீதை மற்றும் இலக்குமணர்களுடன், இராமன் சித்திரகூடத்தில் உள்ள அத்திரி - அனுசுயா இணையர்களின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.[2] சீதைக்கு அனுசுயா தேவி தனது நகைகளை சீதைக்கு அணிவித்து மகிழ்ந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Antonio Rigopoulos (1998). Dattatreya: The Immortal Guru, Yogin, and Avatara. State University of New York Press. பக். 2–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7914-3696-7. https://books.google.com/books?id=ZM-BlvaqAf0C. 
  2. Roshen Dalal (2010). Hinduism: An Alphabetical Guide. Penguin Books. பக். 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-341421-6. https://books.google.com/books?id=DH0vmD8ghdMC. 
  3. Alf Hiltebeitel (2016). Nonviolence in the Mahabharata: Siva’s Summa on Rishidharma and the Gleaners of Kurukshetra. Routledge. பக். 55–56, 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-23877-5. https://books.google.com/books?id=7abOCwAAQBAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்திரி&oldid=3752594" இலிருந்து மீள்விக்கப்பட்டது