சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நெல்லூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நெல்லூர் மாவட்டம்
மாவட்டம்
இருப்பிடம்: நெல்லூர் மாவட்டம் , ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
இருப்பிடம்: நெல்லூர் மாவட்டம் , ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பெயர்ச்சூட்டுபொட்டி சிறீராமுலு
தலைநகரம்நெல்லூர்
அரசு
 • மாவட்ட ஆட்சியர்ஸ்ரீ. கேவிஎன் சக்ரதர் பாபு,இ.ஆ.ப
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
இணையதளம்spsnellore.ap.gov.in

சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 26 மாவட்டங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் நெல்லூரில் உள்ளது. 13,076 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில் [1] 2,668,564 மக்கள் வாழ்கிறார்கள் [2] . 2011 கணக்கெடுப்புப்படி இதில் 22.45% நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். (60.0%) பேர் தெலுங்கு பேசுகின்றனர், (38.0%) பேர் தமிழ் பேசுகின்றனர் [3] . தமிழ் பேசுபவர்கள் அதிகளவில் பெரும்பான்மையாக மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ளனர்.

நெல், ஊர் ஆகிய இரு சொற்கள் இணைந்து நெல்லூர் என்று ஆனது (தெலுங்கிலும் ஊர் என்பது ஊரை குறிக்கும்). சூலூர்பேட்டை, நாயுடுபேட்டை, கூடூர், வெங்கடகிரி, காவலி, கோவூர் என்பன மற்ற முதன்மையான ஊர்களாகும். இதன் கிழக்கு எல்லையாக வங்காள விரிகுடாவும் வடக்கு எல்லையாக பிரகாசம் மாவட்டமும் தெற்கு எல்லையாக திருப்பதி மாவட்டத்தையும் தென்மேற்கு எல்லையாக அன்னமய்யா மாவட்டத்தையும் மேற்கு எல்லையாக கடப்பா மாவட்டத்தையும் கொண்டுள்ளது.கடப்பா மாவட்டம் வெளிகோடா மலையினால் பிரிக்கப்பட்டுள்ளது.

நெல்லூர் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட இம்மாவட்டம் 2008ல் தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோரி உயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர் பொட்டி சிறீராமுலுவின் நினைவாக 'சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம் என்று மாற்றி ஆந்திரப்பிரதேச அரசு அரசாணை பிறப்பித்தது.[4]

இம்மாவட்டத்தின் நிலப்பரப்பில் தோராயமாக பாதியளவு உழவுக்கு பயன்படுகிறது. மற்ற பகுதி தரிசாக உள்ளது.[5]. மாவட்டத்தின் நடுவில் வட பெண்ணையாறு பாய்கிறது. மாவட்டத்தின் முதன்மை ஆறுகள் பெண்ணையாறு, சுவர்ணமுகி.

இம்மாவட்டத்தில் ஸ்ரீஹரிக்கோட்டா அமைந்துள்ளது.

மாவட்டம் பிரிப்பு[தொகு]

4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு புதிய திருப்பதி மாவட்டம் நிறுவப்பட்டது.[6][7]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை ஐந்து வருவாய்க் கோட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை நெல்லூர், காவலி,கூடூர், நாயுடுபேட்டை, ஆத்மகூர்

இந்த மாவட்டம் முழுவதும் நெல்லூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

இந்த மாவட்டம் ஆந்திர சட்டமன்றத்திற்கான பத்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. அவை காவலி, ஆத்மகூர், கோவூர், நெல்லூர் நகரம், நெல்லூர் ஊரகம், சர்வபள்ளி, கூடூர், சூள்ளூர்பேட்டை, வெங்கடகிரி, உதயகிரி ஆகியன.

இந்த மாவட்டத்தை 46 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[8]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Andhra Pradesh: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. பக். 1111–1112. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. https://archive.org/details/nlsiu.01.2.ind.24174. பார்த்த நாள்: 2011-10-11. 
  2. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. Gazetteer of the Nellore District: brought up to 1938
  4. "The martyr of Telugu statehood". The Hindu (Chennai, India). 2002-11-11 இம் மூலத்தில் இருந்து 2003-07-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030701130051/http://www.hindu.com/thehindu/mp/2002/11/11/stories/2002111101540200.htm. 
  5. NELLORE WASTELANDS INFORMATION -AREA IN Sq.Mts. rd.ap.gov.in
  6. With creation of 13 new districts, AP now has 26 districts
  7. ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உதயம்: திருப்பதி தனி மாவட்டமானது
  8. http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Nellore.pdf பரணிடப்பட்டது 2014-03-27 at the வந்தவழி இயந்திரம் நெல்லூர் மாவட்டத்தின் மண்டலங்களும், மண்டலவாரியாக ஊர்களும் (ஆங்கிலத்தில்)