சாலங்காயனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாலங்காயனா் (The Salankayanas) என்போர் ஆந்திரப்பிரதேசத்தின் ஒரு பகுதியை ஆட்சி செய்த ஒரு பழமையான அரச மரபினர் ஆவர். இவர்களின் ஆட்சிப் பகுதி கோதாவரி கிருஷ்ணா ஆற்றுக்கு இடைப்பட்டப் பகுதியில் இருந்தது. இவர்களின் தலை நகரம் தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எருலுவுக்கு அருகில் தற்போது பேடவேகி என்று அழைக்கப்படும் வேங்கி ஆகும். இந்த மரபினர் கி.பி. 300 முதல் 440 வரை ஆண்டனர். இவர்கள் பிராமணர். இவர்களின் பெயர் இவர்களின் கோத்திர சின்னத்தில் இருந்து வந்ததாகும். [1]

இவர்களின் அரசை 5 ஆம் நூற்றாண்டில், விஷ்ணுகுந்தினப் பேரரசின் இரண்டாம் மாதவர்மன் வெற்றி கொண்டான்

அரசர்களின் பட்டியல்[தொகு]

  1. அஸ்திவர்மர்
  2. நந்தி வர்மர்
  3. விஜயதேவ வர்மர்
  4. விஜயநந்தி வர்மர்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலங்காயனர்&oldid=2972273" இலிருந்து மீள்விக்கப்பட்டது