ஈரோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈரோடு
மஞ்சள் மாநகரம், நெசவு மாநகரம், கைத்தறி மாநகரம்
—  மாநகரம்  —
ஈரோடு சந்திப்பு இரயில் நிலையம்
ஈரோடு
இருப்பிடம்: ஈரோடு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°21′″N 77°44′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 11°21′″N 77°44′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு மாவட்டம்
வட்டம் ஈரோடு
மாநாகராட்சி 1871
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்
மேயர் மல்லிகாபரமசிவம்
மாநகர தலைவர் கே.ஆர்.செல்வராஜ்
மாநகர காவல் ஆணையர் சோனல் வி. மிஸ்ரா
மக்களவைத் தொகுதி ஈரோடு
மக்களவை உறுப்பினர்

ஏ.கணேசமூர்த்தி

சட்டமன்றத் தொகுதி ஈரோடு (மேற்கு), ஈரோடு (கிழக்கு)
திட்டமிடல் முகமை ஈரோடு மாநகராட்சி
மக்கள் தொகை

அடர்த்தி

151 (2001)

583 /km2 (1 /sq mi)

கல்வியறிவு 76% 
மொழிகள் தமிழ்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

270.14 கிமீ2 (104 சதுர மைல்)

183 metres (600 ft)

தட்பவெப்பம்

மழைவீழ்ச்சி
வெப்பநிலை
• கோடை
• குளிர்

வெப்பவலயம் (Köppen)

     1,050 mm (41 in)
     28 °C (82 °F)
     34.3 °C (93.7 °F)
     24 °C (75 °F)

இணையதளம் http://erodecorp.tn.gov.in/

ஈரோடு (ஆங்கிலம்:Erode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கும் மாநகராட்சி ஆகும்.

இது 11 ° 19.5 "மற்றும் 11 ° 81,05" வடக்கு அட்சரேகை மற்றும் 77 இடையேயும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து தென்மேற்கு திசையில் 400 கிலோமீட்டர் (249 மைல்) தொலைவிலும் காவிரி மற்றும் பவானி ஆறுகளின் நதிக்கரையிலும், தென்னிந்திய தீபகற்பத்தில் மையத்திலும் அமைந்துள்ளது. ° 42.5 "மற்றும் 77 ° 44.5" கிழக்கு தீர்க்க கொண்டது. அதன் இரட்டை நகரம், பள்ளிபாளையமானது, காவிரி நதியின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது.

ஈரோடு கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கு புகழ் பெற்றது. எனவே இது இந்தியாவின் கைத்தறி நகரம் எனவும் பாரதத்தின் ஜவுளி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

உற்பத்தி ரகங்களான பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தரைப்பாய்கள், லுங்கிகள், அச்சிடப்பட்ட துணிகள், துண்டுகள், கால்சட்டைகள் போன்ற பொருட்களை மொத்தமாக இங்கே சந்தைப்படுத்தப்படுகின்றன. இது மஞ்சள் மாநகரமாகவும் (Turmeric City) மற்றும் ஜவுளி மாநகரமாகவும் (Textile City) திகழ்கிறது. ஈரோடு கொங்கு நாட்டில் ஒரு முக்கிய நகரமாக உள்ளது.

பொருளடக்கம்

[தொகு] புவியியல்

வெறும் 8.4 கிமீ பகுதியில் 151.184 மக்கள் இருந்தது 2001 ஆம் ஆண்டைய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பானது (பழைய நகராட்சி பகுதியில்) தெரிவிக்கின்றது.

மற்ற நகராட்சிகளின் ஒருங்கிணைப்பு பின்னர், ஒருங்கிணைந்த நகரமாக 74 கி.மீ2 சுற்றவளவில் 7.10 லட்சம் பேர் வசிப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ஆனது தெரிவிக்கிறது. இது கார்ப்பரேஷன் வரம்பை மீறியுள்ளதாகவும் ஏனெனில் 109 சதுர கி.மீ ல் இத்தகைய அளவு மக்கள் இருக்க வேண்டும் என்பதே.

மக்கள்தொகையில் ஆண்கள் 49% மற்றும் பெண்கள் 51% பேர் வசிக்கின்றனர். தேசிய சராசரியான 59.5% யை விட அதிகமாக 78% சராசரி எழுத்தறிவு வீதத்தினை ஈரோடு பெற்றுள்ளது: ஆண் எழுத்தறிவு விகிதம் 83% மற்றும் பெண் எழுத்தறிவு 72% ஆகும். ஈரோடு மக்கள் தொகையில் 6 வயதுக்கும் கீழ் 9% உள்ளது.

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஈரோட்டில் 151,184 ,பெரியசேமூர் 32024, வீரப்பன்சத்திரம் 72,703, காசிபாளையம் 52,369, சூரம்பட்டி 31,948, திண்டல் 10,084, கங்காபுரம் 4337, எல்லப்பாளையம் 1921, வில்லரசம்பட்டி 5621, முத்தம் பாளையம் 1477 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.

இவ்வூரின் அமைவிடம் 11.35° N 77.73° E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 183 மீட்டர் (600 அடி) உயரத்தில் இருக்கின்றது.

[தொகு] சொல்லிலக்கணம்

நவீன வரலாற்றாசிரியர்கள் ஈரோடு எனும் சொல்லானது ”இரு ஓடை” எனும் இரட்டை சொற்றிகளிலிருந்து வந்ததாக கூறுகின்றனர்.

சூரம்பட்டியின் பெரும்பள்ளமும், பிராமண பெரிய அக்ரஹாரம் மற்றும் காசிபாளையத்தின் காளிங்கராயன் கால்வாய் பகுதியும் தற்போது ஈரோடு மாநகராட்சிப்பகுதியின் எல்லைகளாக திகழ்கின்றன. ஆனால் பழைய ஈரோடு நகராட்சியில் கால்வாய்கள் ஏதுமில்லாமல் இருந்தது.

பைரவ புராண விளக்கவுரையில், சிவனின் மாமனாரான தட்சன், தாம் நடத்திய யாகத்திற்கு தமது மருமகனான இறைவன் சிவனை கூப்பிடவே இல்லை, அவரது மனைவி தட்சாயினி தமது கணவர் விருப்பத்திற்கு எதிராக யாகத்திற்கு வந்தாள், யாகத்தில் தமது கணவரை தந்தை இழிவுபடுத்தியதால் மனமுடைந்து திரும்பினாள். மேலும் அவள் சிவனிடம் திரும்பியபின் சிவன் கோபமுற்று தட்சாயினியை எரித்ததார் எனக்கூறுகிறது. அதை கேட்ட பிரம்மா தன் ஐந்தாவது தலையை துண்டித்தார். அந்த மண்டை ஓடு சிவனை ஒட்டிக்கொண்டு பிரம்மதோஷம் பிடித்தது. பிரம்மதோஷத்தின் காரணமாக சிவன் இந்தியா முழுவதும் சுற்றினார். அப்போது ஈரோடு வந்து போது இங்குள்ள கபால தீர்த்தத்தில் நீராடியதால் மண்டை ஓடு சிதைந்தது. இந்த மண்டை துணுக்குகள், ஈரோட்டினை சுற்றியுள்ள வெள்ளோடு (Vellode ("வெள்ளை மண்டை")), பேரோடு (Perode ("பெரிய மண்டை")) மற்றும் சித்தோடு (Chithode ("சிறிய மண்டை")) ஆகிய இடங்களில் விழுந்ததாக கூறுகிறது. அவற்றின் பெயர்களும் முன்னுதரணமாக அமைந்துள்ளன. கபால தீர்த்தமானது ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலின் இடதுபுறத்தில் உள்ளதை இன்றும் காணலாம். கையொப்பமிடப்பட்டுள்ளது உள்ளது. மேற்கண்டவாறு வரலாற்றினை பைரவ புராணமானது விளக்குகிறது. வைஷ்ணவர் அவதாரங்களில் குறிப்பிடத்தக்க அவதாரமான கூர்ம அவதாரத்திற்கான அடித்தளமாக இது திகழ்வதாக சான்றுகள் உள்ளன.

[தொகு] வரலாறு

ஈரோடு நகரமானது உள்ளூர் கங்கை வம்ச அரசர்களான சேர மன்னர்கள் மற்றும் மேற்கு கங்கை வம்ச அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. தாராபுரமானது அவர்களின் தலைமையகமாக திகழ்ந்தது. சோழர்கள் ஆட்சியிக்கு பின்னர், முஸ்லிம்கள் (மோடின் சுல்தான் (Modeen Sulthans)) மதுரை நாயக்கர்களின் கீழ் ஆட்சிபுரிந்தனர்.

ஐதர் அலி ஆட்சிக்கு பின் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் மாவீரன் தீரன் சின்னமலை உதவியுடன் ஆதிக்கத்தினை செலுத்தினர். 1799 இல், திப்பு சுல்தான் தமது ஆட்சியினை பிரிட்டிஷ் அரசிடம் இழந்தார், சங்ககிரி மலைக் கோட்டையில் தீரன் சின்னமலையின் மறைவிற்கு பின் கிழக்கு இந்திய கம்பனியானது ஆட்சி புரிந்தது.

ஹைதர் அலி ஆட்சியின் போது, ஈரோடு நன்கு புனரமைக்கப்பட்டு 300 வீடுகள் மற்றும் 1500 மக்கள் தொகை கொண்ட செழிப்பான நகரமாக இருந்தது. சுமார் 4000 சிப்பாய்கள் மூலம் கேர்ரிசன் களிமண் கோட்டையை, கிழக்கு நோக்கிய எல்லையாக (பட்சன் குறிப்பு - 1800 ஆம் ஆண்டு நவம்பர் 7 மற்றும் 8)வும், வடக்கில் காவிரி ஆற்றின் மீது காளிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்டதால் தென்னந்தோப்புகள் மற்றும் வளமான நிலங்களால் சூழப்பட்டு இருந்தது.

அடுத்தடுத்த மராட்டிய, மைசூர் மற்றும் பிரிட்டிஷ் படையெடுப்புகள் காரணமாக வார்ஸ் கோட்டை பாதுகாப்பு அரண் உட்பட, கிட்டத்தட்ட சிதைந்த ஈரோடு நகரமாக மாறியது. எனினும் பிரிட்டிஷ் சமாதானத்தால் மக்கள் திரும்பி இங்கு குடியேறினர். ஒரு ஆண்டுக்குள் அது வளர்ச்சி காட்ட ஆரம்பித்தது.

கேர்ரிசன் 1807 ல் விலகிக்கொண்டது, நகரின் மையத்தில் பாழாக்கி கோட்டையை 1877 ம் ஆண்டு பஞ்சத்தின் போது நிவாரண வேலை மூலம் சரி செய்ததது. பாதுகாப்பு அரண் உள்ள இடத்தில் தற்போது வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் கோட்டை இருந்த இடத்தில் சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய இரு இந்து மதக் கோயி்ல்கள் தற்போது இருக்கின்றன.

பண்டைய கொங்கு கால வரலாற்றின் படி சங்க கால கொங்கு பகுதியின் ஒரு பாகமாகவே ஈரோடு திகழ்ந்தது. இராஜ ராஜ சோழனின் ஆட்சியின் கீழ் இப்பகுதியினை ராஷ்ட்ராகுட்டாக்கள் கோசம்புதுரினை தலைமை இடமாக கொண்ட கோசாரஷ் என்ற துருப்புகள் எடுத்துக் கொண்டனர். அவர்கள் கோவையில் பயிற்சி பெற ஏதுவாக தங்கும் பகுதியாக பயன்படுத்தினர். இதை சாளுக்கியர்கள் தங்கள் பகுதியாக்கி கொண்டனர். பின்னர் மதுரை பாண்டிய மன்னர்களும் ஒய்சாளர்களும் தனதாக்கி கொண்டனர்.

[தொகு] புவியியல் மற்றும் காலநிலை

ஈரோடு மாநாகரானது உள்ளூர் திட்டமிடலிடன்படி 54 ச.கி.மீ-ஆகத் திகழ்கிறது, இது 129 சதுர கிமீ வரை நீட்டிக்க வழிவகை செய்யப்படும்.

பொதுவாக ஈரோடு குறைந்த மழை மற்றும் ஒரு வறண்ட காலநிலையினை கொண்டு உள்ளது. அதிகபட்ச மழையானது கோபிச்செட்டிபாளையத்தில் பதிவு செய்யப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டு இடைவெளியானது கோயம்புத்தூர் மாவட்டம் காலநிலையினை வறண்ட தன்மையாக மாற்றுகிறது. பாலக்காட்டு கணவாய் வழியாக மேற்கு கடற்கரையிலிருந்து வரும் பருவகாற்று, அதன் ஈரப்பதத்தை இழப்பதால் கோயம்புத்தூர் மாவட்ட பகுதிகளும், ஈரோடு பகுதியும் உலர் அடைகின்றன.

பொதுவாக இங்கே பருவ மழை சீசன் போது தவிர மற்ற நாட்கள் முழுவதும் மிதமான-வறண்ட வானிலை உள்ளது. ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வசந்த காலங்களாக உள்ளன, ஆனால் மார்ச் மாதம், தொடங்கி மே இறுதி வரை கத்திரி வெயில் தொடர்வதால் அதிகபட்ச வெப்பநிலையினை எட்டுகிறது. பொதுவாக மே மாதத்தில் அதிகபட்ச வெப்பமானது பதிவு செய்யப்படுகிறது. இந்த காலத்தில் குறைந்த மழை பொழிவானது வெப்பநிலை குறைக்க முடியாமல் இருக்கிறது. ஜூன்-ஆகஸ்ட் காலத்தில் காலநிலை வசந்த காலநிலையாக மாறுகிறது. இந்த முன் பருவ காலத்தில், வெப்பநிலையில் அதன் போக்கு தலைகீழாகிறது.செப்டம்பர் மாதத்தில் இருண்ட வானிலை நிலவிய போதிலும் மழையளவு மிகக்குறைந்த அளவே உள்ளன. வட கிழக்கு பருவமழை மூலம் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் மழை பெய்கிறது. டிசம்பர் மாதத்தில் தீவிரமடைந்து தெளிவான வானிலையை பெற்றுவிடுகிறது.

[தொகு] உலகமுழுவதும் ஏற்றுமதி

ஜவுளிப்பொருட்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள் ஆகியன உலகமுழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

[தொகு] முக்கிய தொழில்கள்

இப்பகுதி பருத்தி விளைச்சலுக்கு சாதகமாக உள்ளது. பஞ்சாலைகளும் மோட்டார் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளும் இங்குள்ள முக்கிய தொழில்களுள் ஒன்றாகும்.

[தொகு] முக்கிய சுற்றுலாத்தலங்கள்

திண்டல் முருகன் கோயில்

[தொகு] மக்கள் வகைப்பாடு

சிவரஞ்சனி உணவகம் அருகே பிரப் சாலை

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,63,668 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஈரோடு மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஈரோடு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஈரோட்டில் 151,184 ,பெரியசேமூர் 32024, வீரப்பன்சத்திரம் 72,703, காசிபாளையம் 52,369, சூரம்பட்டி 31,948, திண்டல் 10,084, கங்காபுரம் 4337, எல்லப்பாளையம் 1921, வில்லரசம்பட்டி 5621, முத்தம் பாளையம் 1477 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.

[தொகு] வட்டச் சாலை (Ring Road)

நெரிச்சல் மிக்க ஓர் சந்திப்பு

ஈரோடு நகரின் வாகன நெரிச்சலை குறைப்பதற்காக வட்டச் சாலையானது 2 கட்டங்களாக அமைக்கப்படவுள்ளது. முதல் கட்டத்தில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொக்கராயன் பேட்டையும் ஈரோட்டிலுள்ள திண்டலையும் இணைக்கிறார்கள். இதன் நீளம் 14.1 கி.மீ, அகலம் 7 மீ ஆகும். தற்போது 7மீ அகலம் உள்ள போதும் எதிர்கால விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு 30மீ அளவுக்கு நிலம் கையக்கப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள். இது வெண்டிபாளையம், நஞ்சை ஊத்துக்குளி, நஞ்சை லக்காபுரம், புஞ்சை லக்காபுரம், வடமுகம் வெள்ளோடு வழியாகச் செல்லுகிறது. [5][6][7]. 2வது கட்டத்தில் திண்டலையும் பவானி சாலையிலுள்ள பிராமண பெரிய அக்ரகாரத்தையும் (பி.பி. அக்ரகாரம்) இணைக்க திட்டமிட்டுள்ளார்கள். இதன் நீளம் 9.5 கி.மீ ஆகும்.

[தொகு] இவ்வூரில் பிறந்த புகழ்பெற்ற மனிதர்கள்

[தொகு] ஆதாரங்கள்

  1. http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
  2. http://www.tn.gov.in/gov_cm.html
  3. "Erode". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
  4. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
  5. http://www.hindu.com/2009/09/17/stories/2009091755470100.htm
  6. http://www.projectstoday.com/Potpourri/IndianNews/Land%20acquisition%20begins%20for%20Erode%20ring%20road%20project.asp
  7. http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Erode&artid=129173&SectionID=102&MainSectionID=102&SEO=&Title=

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஈரோடு&oldid=1079394" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்