மொடக்குறிச்சி
| மொடக்குறிச்சி | |
| — பேரூராட்சி — | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | வீ.கே.சண்முகம் [3] |
| சட்டமன்றத் தொகுதி | மொடக்குறிச்சி |
| சட்டமன்ற உறுப்பினர் |
ஆர். என். கிட்டுச்சாமி (அதிமுக) |
| மக்கள் தொகை | 10,036 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
மொடக்குறிச்சி (ஆங்கிலம்:Modakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இதன் தற்போதய சட்டமன்ற உறுப்பினர் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றகழகத்தை சார்ந்த ஆர் என் கிட்டுசாமி ஆவார். 1996-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் 1033 பேர் போட்டியிட்டனர்.[4][5]
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,036 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மொடக்குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மொடக்குறிச்சி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ http://ceo.maharashtra.gov.in/canFaqCon2.php
- ↑ http://www.hindu.com/2004/04/27/stories/2004042713040400.htm
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
|
||||||||||||||||||||||||||