நாயக்கர்
|
இக் கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. அருள் கூர்ந்து, நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக் கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். மேற்கோள்கள் தரப்படாத கட்டுரைப் பகுதிகள் கேள்விக்கு உட்படலாம் என்பதுடன் நீக்கப்படவும் கூடும். |
|
இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் ஒரு பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இது விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்றப்பட வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம் மற்றும் நடைக் கையேடு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். |
| நாயக்கர் / நாயுடு |
|---|
| மொத்த மக்கள்தொகை |
|
4.5 கோடி |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
| தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடகா, இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் ,புதுச்சேரி, கேரளா, |
| மொழி(கள்) |
| தெலுங்கு ,தமிழ் , கன்னடம் , துளு |
| சமயங்கள் |
| இந்து |
ஆந்திரா, கர்நாடகா, தமிழ் நாடு , கேரளா போன்ற தென் மாநிலங்களில் காணப்படும் ஆரியரல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களே நாயக்கர் இனத்தவர்கள். இவர்களின் தாய் மொழி தெலுங்கு . இவர்கள் தென்மாநிலங்களில் மக்கள் தொகையில் அதிகமாக காணபடுகிறார்கள். இவர்கள் ஆதியில் காப்பு என்னும் இனத்தை சேர்ந்தவர்கள். காம்பு எனப்படும் பழங்குடி இனத்தவர்களின் மரபுகளாக அறியபடுகிரார்கள் . இவர்களே நாகர்கள் என்றும் இம்மக்கள் கூறுகிறார்கள்.
நாயுடு , நாயக்கர் , ரெட்டி , ராவ் , ராயர் , செட்டே, உடையார் , ராயுடுஎன்ற பலபெயர்களில் இவர்கள் வாழுகிறார்கள் . தமிழகத்தை பொறுத்தவரையில் கொங்கு நாடில் நாமக்கல் , திருப்பூர் , கோயம்புத்தூர் , சேலம் , ஈரோடு , கரூர் போன்ற பகுதிகளிலும் , தெற்கு பகுதியில் விருதுநகர் , மதுரை , திண்டுக்கல் , தேனீ , ராமநாதபுரம் ,தூத்துக்குடி போன்ற பகுதிகளிலும் , செஞ்சி , தஞ்சை , சென்னை , திருவள்ளூர் போன்ற இடங்களிலும் அதிகமாக வாழுகிறார்கள். தமிழகத்தில் நாயக்கர் என்ற பட்டம் கொண்ட இனம் அல்லது கிளை இனம் தான் மக்கள் தொகையில் அதிக அளவில் உள்ளவர்கள் . பொதுவாக நாட்டை ஆண்டவர்கள் , பாளையத்தை ஆண்டவர்கள் ( குறுநிலத்தை ) நாயக்கர் என்று அழைக்கப்பட்டனர் . ஆந்திராவில் மக்கள் தொகையில் அதிகமாக உள்ள காப்பு ( ராஜ கம்பளம் , பலிஜா , கவரா ) போன்றோர்களும் , தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வன்னியர்களின் பெரும் பகுதியினர் வட தமிழகத்தில் நாயக்கர் என்ற பட்டதை பயன்படுத்துகின்றனர் . கம்மவார் , அகமுடையாரில் சிலர் , போயர் ( ஒட்டர்) , முத்தரையர் போன்றோர்கள் நாயக்கர்களாக அறியப்படுகிறார்கள்.
நாயக்கர்களில் காப்பு இனத்தை சேர்ந்தவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் ,கிருஷ்ணதேவராயன், திருமலை நாயக்கர் , இராணி மங்கம்மாள், விருப்பாச்சி கோபால நாயக்கர் போன்ற அரசர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பவர்கள்.
[தொகு] மக்கள் தொகை
ஆந்திராவில் காப்பு நாயுடு இனத்தவர்கள் 29 % பேர் உள்ளனர் அதாவது மூன்று கோடிக்கு பக்கத்தில் உள்ளனர் , ஆந்திராவில் பெருன்பான்மை இனத்தவர்கள் இவர்களே. அதே போல தமிழகத்தில் அதிக மக்கள் தொகை இவ்வினத்தில் உள்ளனர்.கருநாடகம், கேரளா, மற்றும் தென் இந்தியா முழுவதும் இவர்கள் விரிந்து வாழுகிறார்கள். விடுதலை போராட்டத்தில் இம்மக்களின் பங்கு பெருமளவில் இருந்து வந்து இருக்கிறது .
[தொகு] சொல்லிலக்கணம்
- நாயக்கர் = தலைவன், வீரன், தந்தை, அனைத்திலும் முதல்வன் , உயர்ந்தவன் என்று பல பொருள் படும்
- நாயக்கடு =( தெலுங்கில் "நாயுடு " என்று ஆனது )
- நாயக்கர் =நாயர் ( மலையாளம் )
- நாயக்கர்=நாயகே( சிங்களம் )
- நாயக்கர்=நாயக்( மராத்தி)
- நாயக்கர்=நாயக்ஸ், பட்டநாயக் ( ஒரிசா)
[தொகு] பிரிவுகள்
[தொகு] காப்பு எனப்படும் இனத்தில் உள்ள பிரிவுகள்
- காப்பு
- பலிஜா
- கவரா
- தொட்டிய நாயக்கர்
- காப்பு
ஆந்திராவில் வழங்கப்படும் பெயர் . இவர்கள் முன்னேறிய சாதிகள்பிரிவில் உள்ளனர் , உயர் சாதியினராக கருதபடுகிறார்கள். காப்பு என்பதற்கு காவல் என்று பொருள் . இம்மக்கள் அரசர்களாக இருந்ததால் இவர்களை காப்பு என்று அழைப்பர் . காப்பு என்றால் காவல் காப்பவர் .
- பலிஜா
பலிஜா என்பதற்கு பலம் பொருந்தியவர்கள் என்றும், வாணிகம் செய்தவர்கள் என்றும் இருவேறு பொருள் கூறுகிறார்கள் . இம்மக்கள் பெரும்பாலும் வணிகம் சார்ந்தே வாழுகிறார்கள் . இவர்கள் தென் நாடு முழுவதும் வாழுகிறார்கள் .கவரா , வளையல் நாயக்கர், வடுகர்(கம்மவாரை தவிர்த்து)[1] என்பது பலிஜாவின் கிளை ஜாதியினர் .
தொட்டிய என்றால் பெரிய என்று தெலுங்கில் பொருள் . காப்பு இனத்திலேயே பழங்குடியினர்கள் . தாங்கள் "'கம்பளம் என்ற நாட்டில் இருந்து வந்ததால் தங்களை ராஜ கம்பளத்தார் என்றும் அழைத்து கொள்கிறார்கள் . இம்மக்களே 90 லட்சம் பேருக்கு மேல் தமிழகத்தில் வாழுகிறார்கள் . இவர்கள் தமிழ் கலந்த ஒரு விதமான ஆதி தெலுங்கை பேசுவர் . வீரபாண்டிய கட்டபொம்மன் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்தவரே .
இவர்கள் பலிஜா வின் கிளை ஜாதியினர் . இம்மகள் தங்களுக்கு என்று ஒரு கட்டுபாட்டை வெய்து கொள்வர், ஊர் பெரியவர் தான் இம்மக்களுக்கு குரு , இவரை '" ஊர் நாயக்கர் "' என்று அழைப்பர் .இவர்கள் கல்வி அறிவில் பின் தங்கி உள்ளனர் . பெரும்பாலான தமிழக பாளையங்கள் இவர்களால் ஆளப்பட்டுள்ளது 72 பாளையங்களாக இருந்த காலத்தில் 62 பாளையங்கள் இவர்களால் ஆளபட்டதே .விடுதலை போராட்டத்தில் பெருமளவு பங்கு பெற்றுள்ளனர். வரதட்சணை இல்லாத திருமணம் , பழைய பழக்கம் எதனையும் மாற்றாத முறை , கூட்டு வாழ்கை என்று கம்பளத்தார்கள் ஏனைய சமுதாயங்களில் இருந்து வேறுபட்டு பழமையோடு வாழுகிறார்கள்.[[1]]
- தொட்டிய நாயகர்களின் கிளை
தொட்டிய நாயக்கர்கள் தங்களை ஒன்பது குலங்களாக பிரித்து தங்கள் குலங்களுக்கு உள்ளாகவே திருமணம் செய்து கொள்வர். அந்த ஒன்பது கம்பளங்கள்:
- சில்லவார்
- கொல்லவார்
- தொக்கலவார்( முதாவுலுவார்)
- குரு சில்லவார்
- பாலவார்(பாளையகார்)
- பெல்லவார்
- மல்லவார்
- எற சில்லவார்
- மேகலவார்
இது இம்மக்களின் ஒன்பது குலங்கள். ஒன்பது குலத்தவரும் சேர்ந்து ராஜ கம்பளம் என்று தங்களை அழைத்து கொள்வர் .
[தொகு] குல தெய்வம்
[தொகு] பலிஜா
ரேணுகா அம்மா, எல்லம்மா , கனகம்மா , மீனாக்ஷி அம்மா , திருமால் , மல்லன்னா , அங்கம்மா , நாகம்மா போன்ற தெய்வங்களை குல தெய்வங்களாக வணங்குவர் .
[தொகு] கவரா
அழகர் சாமி , சின்னம்மா , சென்னம்மா , மங்கம்மா போன்ற தெய்வங்களை குல தெய்வமாக கொள்வர் .
[தொகு] ராஜ கம்பளத்தார்
ஜக்கம்மா இவர்களின் இஷ்ட மற்றும் குல தெய்வம் , பொம்மன்னா, பொம்மக்கா , வீர சின்னையா , மல்லையா. போன்ற தெய்வங்களை வணங்குவர் .
பலிஜா , கவரா , ராஜ கம்பளம் சமுதாயத்தினர் தங்கள் முன்னோர்களை கடவுளாக வணங்கும் வழக்கம் உடையவர்கள் . போரில் இறந்தவர்கள் , தங்களுக்கு உதவிய ஏனைய சமுதாயதினரையே வணங்கும் பழக்கம் கொண்டவர்கள் .
[தொகு] கம்மவார் நாயக்கர்
கம்மவார் , நாயுடு , சவுதாரி , நாயக்கர் என்று அழைக்கப்படும் இவர்கள் தமிழகத்தில் கோவில்பட்டி , விருதுநகர் ,தேனி ,கோவை போன்ற பகுதிகளில் அதிக அளவில் வாழுகிறார்கள் . அதிகம் கரிசல் நிலங்களில் வாழும் இவர்கள் மதுரை நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் குடியேறினர் . தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட இவர்கள் குருமி என்ற இனத்தில் இருந்து வந்ததாக அறியப்படுகிறார்கள் .பாலநாடு என்ற பகுதியை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர் மேலும் காகதிய ,விஜயநகர மன்னர்கள் நாயக்கர் காலத்திலும் படை வீரர்களாக இருந்து வந்துள்ளனர் . காப்பு இனத்தில் இருந்து மாறுபட்டாலும் , கம்மகாப்பு என்ற இனம் ஆந்திரா பகுதியில் இன்றும் உள்ளது . தமிழகத்தில் இளையரசனேந்தல் , பெரியகுளம் ,நெய்க்காரப்பட்டி ஆகிய ஜமின்களை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர் . ஆந்திரா மக்கள் தொகையில் 5 % கொண்ட இவர்கள் அரசியலிலும் , பொருளாதாரம் , கல்வியிலும் முன்னேறிய மக்களாக உள்ளனர் , பல கல்வி நிறுவனகள் , தொழிற்கூடங்கள் இவர்களால் நடத்தப்படுகின்றன.
[தொகு] போயர் நாயக்கர்
அடிப்டையில் தெலுங்கு மொழியை பேசும் இவர்கள் , கன்னட மொழியையும் கொங்கு நாட்டில் ஒரு சில பகுதிகளில் பேசி வருகின்றனர் . கொங்கு நாடு , திருவள்ளூர் , காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் வாழும் இவர்கள் நாயக்கர் , உடையார் போன்ற பட்டங்களை சிலர் பயன்படுத்தி வருகின்றனர் . சில பாளையங்கள் இவர்களால் ஆளப்பட்டுளது. கல்வியிலும் , பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இவர்கள் உள்ளனர் .http://en.wikipedia.org/wiki/Boyar_%28caste%29
[தொகு] வன்னிய நாயக்கர்
தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட சமுதாயம் . வடக்கு தமிழகத்தில் தங்களை நாயக்கர் என்று அழைத்துக்கொள்ளும் இவர்கள் பல்லவர்களின் வம்சமாக அறியப்படுகிறார்கள் . விஜயநகர நாயக்கர் ஆட்சி காலத்திலும் சில பாளையங்களை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர் .தமிழ் ,தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டுள்ள இவர்கள் , தமிழ் மொழியினை தாய்மொழியாக கொண்டவர்கள் வன்னிய குல சத்திரியர் என்றும் , தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் 'அக்னி குல வம்சி அக்னி குல சத்திரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.
[தொகு] முத்தரைய நாயக்கர்
பாளையக்கார நாயக்கர் , சேர்வைகாரர் , அம்பலகாரர் , மூப்பனார் , முத்துராஜா , முதிராஜு, வலையர் என்று பல பெயரோடு வாழும் இவர்கள் தமிழகத்திலும் , ஆந்திராவிலும் கணிசமான அளவு வாழ்கிறார்கள் . புதுக்கோட்டை , திருச்சி , கரூர் , சிவகங்கை , ராஜபாளையம் வேலூர் போன்ற பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் இவர்கள் தமிழ் , தெலுங்கு தாய் மொழியாக கொண்டவர்கள் . ஆந்திராவில் சத்திரிய என அழைக்கப்படும் இவர்கள் குறு நில மன்னர்களாகவும் , பாளயகாரர்களாகவும் இருந்து வந்துள்ளனர் . களபிரர் ஆட்சி காலம் இவர்களுடையது என்று நம்பப்படுகிறது . இவர்கள் தமிழுக்கும் , ஆன்மிகத்துக்கும் அறிய பல தொண்டுகள் செய்துள்ளனர் . வீரபாண்டிய கட்டபொம்மன் ராஜகம்பளம் இனத்தில் பிறந்தார் , 'ராஜகம்பளம் முத்தரைய இனத்தின் உட்பிரிவாக கருதப்படுவதால் கட்டபொம்மனை இவர்களும் உரிமைக்கொள்கிறார்கள் .
[தொகு] பிற நாயக்கர்கள்
அகமுடைய நாயக்கர் , வெற்றிலைகார நாயக்கர் , உப்பிலிய நாயக்கர் , உரிகார நாயக்கர் , துளுவ நாயக்கர் , தொழுவ நாயக்கர் , காட்டு நாயக்கர் , சேர்வை நாயக்கர் , கொங்கு நாயக்கர் போன்றோர்கள் எண்ணிக்கையில் சிறிய அளவில் இருந்தாலும் பல பெயரோடு தமிழகம் , ஆந்திரா , கர்நாடகா முழுவதும் பரவி வாழ்கிறார்கள் .
[தொகு] நாயக்கர்கள் கட்டிய கோவில்கள் , கோட்டைகள்
[தொகு] நாயக்கர்கள் கட்டிய கோவில்கள்
- மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் - விசுவநாத நாயக்கர்[[2]]
- ஆயிரங்கால் மண்டபம் , வீர வசந்தியர் மண்டபம் , வசந்த மண்டபம் - திருமலை நாயக்கர்
- கிளி கூடு மண்டபம் , தெப்பகுளம் , மீனாக்ஷி நாயக்கர் மண்டபம் -- ராணி மங்கம்மாள்
- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் - ராஜ கோபுரம் ,
அண்ணாமலை கோபுரம் , ஆயிரங்கால் மண்டபம் , கோவில்குளம் --- கிருஷ்ண தேவ ராயர்
- காளகஸ்தி கோவில் - 120 அடி கோபுரம் , 100 கால் மண்டபம் -- கிருஷ்ணதேவ ராயர்
காஞ்சி ஏகாம்பரீஷ்வர் கோவில் -- 192 அடி கோபுரம் , 100 கால் மண்டபம் , வரதராஜ கோவில்
- திருவரங்கம் கோவில் - குதிரை மண்டபம் , கருடா மண்டபம் , சந்திரா சூர்யா புஷ்கரணி குளம்
- மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
- திருச்சி உச்சி பிள்ளையார் கோவில்
- வண்டியூர் மாரியம்மன் கோவில்
- திருப்பதி எழுமலையான் கோவில் - படிகட்டுகள் , தற்போதைய கோபுரம்
கல்யாண மண்டபம் , வசந்த மண்டபம் , ராய கோபுரம் -- ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர்
- ஹம்பி வித்தல கோவில் - உலக புகழ் பெற்றது
- ஆற்காடு , தஞ்சாவூர் , கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோவில்கள் --- தஞ்சை நாயக்கர்கள்
இது மட்டும் அல்லது சிறு மற்றும் பெரிய கோவில்கள் பலவற்றை விஜயநகர , நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டு உள்ளது , பழைய கோவில்களையும் இம்மன்னர்கள் புதுப்பித்து ஆன்மிகத்துக்கு அறிய பல தொண்டுகளை செய்து உள்ளனர் .
[தொகு] நாயக்கர்கள் கட்டிய கோட்டைகள் :
நாயக்கர் ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கோட்டைகள் கட்டப்பட்டன , நாட்டின் பாதுகாப்புக்கும், எதிரிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றவும் பல கோட்டைகள் நாயக்கர் கால ஆட்சியில் கட்டப்பட்டன . அவற்றுள் சில பிரபலமான கோட்டைகள் :
- திருச்சி மலைகோட்டை - விசுவநாத நாயக்கரால் கட்டப்பட்டது - புகழ் பெற்ற கோட்டை
- நாமக்கல் கோட்டை - ராமச்சந்திர நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு - குறுநில மன்னர்
- திண்டுக்கல் கோட்டை - முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு
- வேலூர் கோட்டை - சின்ன பொம்மி நாயக்கர், திம்ம ரெட்டி நாயக்கர் - 15 ஆம் நூற்றாண்டு
- உதயகிரி கோட்டை - கஜபதி ராயர்
- சங்ககிரி கோட்டை - 15 ஆம் நூற்றாண்டு
[தொகு] குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு] வரலாறு
[தொகு] காப்பு இனம்
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- ஊமைத்துரை
- கிருஷ்ணதேவராயன்[2]
- கனகேந்தி அனுமந்து - பாலநாடு அரசு
- விசுவநாத நாயக்கர்
- குமார கம்பணன்
- திருமலை நாயக்கர்
- இராணி மங்கம்மாள்
- ராணி கங்காதேவி ( மதுர விஜயம் எழுதிய அரசி )
- ராணி ருத்ரம்மா (காகதிய அரசி )
- விருப்பாச்சி கோபால நாயக்கர் (திண்டுக்கல் விடுதலைப் போராட்ட வீரர் )
[தொகு] கம்மா இனம்
- முன்சுன்றி காபநெடு
- பெம்மசாணி திம்மா நாயுடு
- ராமலிங்க நாயுடு
[தொகு] வன்னிய இனம்
- மலையமான்
- மழவராயர்
- சோழனார், மும்முடி சோழனார்
- பல்லவராயர்
- தொண்டைமான்
- கச்சிராயர்
- காடவராயர்
- சேரனார்
- சம்புவராயர்
[தொகு] முத்தரைய இனம்
- பெரும்பிடுகு முத்தரையர்
- இளங்கோ முத்தரையர்
[தொகு] அரசியல் :
[தொகு] காப்பு இனம்
- பெரியார்- கன்னட நாயக்கர்.
- வங்கவேடி மோகன ரங்கா -ஆந்திராவின் சிம்ம குரல்
- சிரஞ்சீவி - நடிகர், அரசியல்
- விஜயகாந்த் -நடிகர் , அரசியல், தே.மு.தி.க தலைவர் , தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர்
- ஈ. வெ. கி. சம்பத்
- ஈ. வெ. கி. ச. இளங்கோவன்
- கே. வி .தங்கபாலு [[3]]
- காமாட்சி நாயுடு - திராவிட தெலுங்கர் முனேற்ற கழகம்
[தொகு] கம்மா இனம்
- ரா. கிருஷ்ணசாமி நாயுடு விடுதலைப் போராட்ட வீரர் ,
- வைகோ - பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்.
- என்.டி.ராமாராவ் - தெலுங்கு தேசம் நிறுவனர்
- சந்திரபாபு நாயுடு - முன்னாள் ஆந்திர முதல்வர்
- ஆற்காடு வீராசாமி - முன்னாள் தமிழக அமைச்சர்
[தொகு] வன்னிய இனம்
- ராமதாஸ் - பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்
- மா.வே .மாணிக்கவேலு நாயக்கர்
[தொகு] கலை
[தொகு] நடிப்பு
[தொகு] காப்பு இனம்
- S.V. ரங்கா ராவ்
- சாவித்திரி
- சிரஞ்சீவி -
- விஜயகாந்த் -
- M.R. ராதா
- நாகேஸ்வர ராவ்
- தேவிகா
- பவன் கல்யான்
- கண்ணாம்பாள்
- ராதிகா
- ராதாரவி
- ஜி. வரலக்ஷ்மி
- சிநேகா
- ஜெயம் ரவி
- ஸ்ரீ ஹரி
- பானு சந்தர்
- நாகேந்திர பாபு
- அல்லு அர்ஜுன்
- தனுஷ் - தமிழ் நடிகர்
- ரவிக்ரிஷ்ணன்
- சுகுமார்
- ராம் சரண் தேஜா
- த்யாக ராஜ்
- ரம்பா -
- சாந்த குமரி
- சரத் பாபு
- கிருஷ்ணவேணி
[தொகு] கம்மா இனம்
- .என்.டி .ராமராவ்
- நாகேஸ்வர ராவ்
- சோபன் பாபு
- ஜூனியர் என்.டி.ஆர்
- ஸ்ரீகாந்த்
[தொகு] இயக்குனர்கள்
- பவன் கல்யான்
- கோடி ராம கிருஷ்ணன்
- தாசரி நாராயண ராவ் - புகழ்பெற்ற இயக்குனர்
- ம.ராஜ
[தொகு] இசை அமைப்பாளர்கள்
- தேவி ஸ்ரீ பிரசாத்
- ரமேஷ் நாயுடு
[தொகு] பாடகர்கள்
- ஜிக்கி
- சாந்தா குமாரி
[தொகு] தொழில் நுட்பாளர்
- தோட்டா தாரணி
- மார்தான்ட் கே. வெங்கடேஷ்
[தொகு] நடனம்
- சோபா நாயுடு
[தொகு] தொழில் அதிபர்கள்
- ஸ்ரீனி கோபுலு - நிருவாக இயக்குனர் மைக்ரோசாஃப்ட் இந்தியா
- அல்லு அரவிந்த் -சினிமா தயாரிப்பாளர்
[தொகு] எழுத்தாளர்கள்
- தோட்டா பிரசாத்
- ஏ .எம்.ரத்னம்
[தொகு] விளையாட்டு :
- சி.கே.நாயுடு - முதல் கேப்டன் கிரிக்கெட்
- புச்சி பாபு நாயுடு - இந்திய கிரிக்கெட்டின் தந்தை
- கோட்டா ராமசாமி - கிரிக்கெட் , டென்னிஸ்
- சி.எஸ்.நாயுடு - கிரிக்கெட்
- அம்பட்டி ராயுடு - கிரிக்கெட்
[தொகு] வெளி இணைப்புகள்
- தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி
- கண்டி நாயக்கர்
- தொட்டிய நாயக்கர்கள்
- ராஜகம்பளம்
- பலிஜா
- கம்பளத்து நாயக்கர் - பாளையங்கள்
[தொகு] மேற்கோள்கள்
- Balijavaaru Puraanam, by Sri Salem Pagadaala Narasimhalu Nayudu.
- Balijakula Charithra, by Kante Narayana Desayi
- Andhrula Sankshiptha Charitra, by Balarama Murthi
- The Valayar of South India, Volume 1 p9 no 323-428
- Police power and colonial rule, Madras, 1859-1947
- Justice Party golden jubilee souvenir, 1968 9g no 854
- http://books.google.com/books?id=r-ffeWmj2JUC&printsec=frontcover&dq=balijas&hl=en&ei=9ooITqm4I8a3rAfYh5CXDA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CC4Q6AEwAA#v=onepage&q=nayaks&f=false
- http://www.ebooksread.com/authors-eng/edgar-thurston/castes-and-tribes-of-southern-india-volume-7-ala/page-14-castes-and-tribes-of-southern-india-volume-7-ala.shtml Edgar Thurston
- Castes and tribes of southern India (Volume 7) (page 14 of 32)]]
[தொகு] சான்றுகள்
குண்டலநாயக்கன் பட்டி விஜய் டிவி குறும்படம்