திருவாரூர்
| திருவாரூர் | |
| — முதல் நிலை நகராட்சி — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவாரூர் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| நகர்மன்றதலைவர் | ரவிச்சந்திரன் |
| சட்டமன்றத் தொகுதி | திருவாரூர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 56,280 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 3 மீட்டர்கள்s (9.8 அடி) |
|
குறியீடுகள்
|
|
திருவாரூர் (ஆங்கிலம்:Tiruvarur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ,மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் தேர்த் திருவிழா கொண்டாடப் படுகிறது.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். தமிழக முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதி திருவாரூர் அருகில் உள்ள திருக்குவளை எனும் ஊரில் பிறந்தவர்.
திருவாரூர் தேர் ஆசியாவிலேயே மிக பெரிய தேராகும்.திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது .இந்த தேர் நான்கு நிலைகளை உடையது அவை முறையே 6 மீட்டர் 1.2 மீட்டர் 1.6 மீட்டர் 1.6 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும் .தேரின் சக்கரங்கள் ஓவொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை .பல கலை நயந்துடன் கூடிய வேலைபாடுகள் உடைய இந்த தேர் ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்த படுகிறது இதை திருச்சி BHEL நிறுவன பொறியாளர்களை கொண்டு கையாள படுகிறது .
இந்த தேரில் சுரங்க வழி ஒன்றும் உள்ளது சிறப்பாகும்.தேர் அலங்கரிக்கப்படாத நிலையில் 26 டன்னும் அலங்காரத்தில் 360 டன்னும் எடை கொண்டது .சென்னை வள்ளுவர் கோட்டம் திருவாரூர் தேரின் மாதிரியை கொண்டு வடிவமைக்கபட்டது.முன்பு ஒரு காலத்தில் மனித சக்தி மட்டும் அல்லாது யானைகளும் தேரை இழுக்க பயன்பட்டன .சில சமயம் தேர் நிலை அடிக்கு வர மாத கணக்காகும்.ஆனால் தற்பொழுது 4 புல்டோசர்கள் கொண்டு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தேரை நிலையடிக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.
வெளி இணைப்புகள் [தொகு]
- 360 டிகிரி கோணத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயில்
- திருவாரூர் தூவாய் நாதர் திருக்கோயில்
- திருவாரூர்
- ஆழித் தேர்
</gallery>
ஆதாரங்கள் [தொகு]
|
|||||||||||||||||||||||