நாமக்கல்
| நாமக்கல் | |
| — தேர்வு நிலை நகராட்சி — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | ஜெகநாதன் |
| நகராட்சித் தலைவர் | இரா. கரிகாலன் |
| ஆணையர் | எசு. செழியன் |
| சட்டமன்றத் தொகுதி | நாமக்கல் |
| சட்டமன்ற உறுப்பினர் |
கே. பி. பி பாஸ்கர் (அதிமுக) |
| மக்கள் தொகை • அடர்த்தி |
53,040 (2001[update]) • 960 /km2 (2 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | 55.24 square kilometres (21.33 ச மைல்) |
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | www.municipality.tn.gov.in/namakkal |
நாமக்கல் (Namakkal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இது ஒரு நகராட்சியாகும். நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது "குப்பை இல்லா நகரம்" என்னும் சிறப்பையும் பெற்றதாகும்[3]. 2011ல் நகராட்சியானது கொண்டிசெட்டிபட்டி, கொசவம்பட்டி, பெரியப்பட்டி, காவேட்டிப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலைப்பட்டி, சின்ன முதலைப்பட்டி ஊர்களை இணைத்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது [4]. இதனால் நகர்மன்றங்களின் எண்ணிக்கை 30லிருந்து 39 ஆக உயர்ந்துவிட்டது.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
"நாமகிரி" என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இவ்வூரின் பழைய பெயர் 'ஆரைக்கல்' என்பதாகும். இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாறையின் மீது கோட்டை ஒன்று உள்ளது இதை ராமச்சந்திர நாயக்கர் கட்டியது என கருதப்படுகிறது, இதை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது [5]. பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார் என்றும் நம்பப்படுகிறது. மகாத்மா காந்தி அவர்களின் பொதுக்கூட்டம் இப்பாறை அருகே நடைபெற்றது [6]. அரிசனம் இயக்கத்திற்கு ஆதரவு வேண்டி 1934 பிப்ரவரி 14 அன்று நாமக்கலில் மகாத்மா காந்தி பேசிய கூட்டத்திற்கு 15,000 மக்கள் வந்திருந்தனர் [7]
இப்பாறையின் ஓரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது. இக்கோயில்கள் கிபி 784ல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.[8]
அமைவிடம் [தொகு]
நாமக்கலின் அமைவிடம் 11.23° N 78.17° E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 218 மீட்டர் (715 அடி) உயரத்தில் இருக்கின்றது. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள கொல்லி மலைக்கு இது அருகில் அமைந்துள்ளது. அருகிலுள்ள ஆறு காவிரி. நாமக்கல் நகரம் பின்வரும் நரங்களில் இருந்து குறிப்பிடத்தக்க தொலைவில் அமைந்துள்ளது (தொலைவு தோராயமாக).
- சென்னைக்கு தென் மேற்கே 360 கி.மீ. தொலைவில்
- பெங்களூருக்கு தெற்கே 250 கி.மீ. தொலைவில்
- கோயம்புத்தூருக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவில்
- ஈரோட்டிற்கு கிழக்கே 55 கி.மீ. தொலைவில்
- கரூருக்கு வடக்கே 48 கி.மீ. தொலைவில்
- சேலத்திற்கு தெற்கே 55 கி.மீ. தொலைவில்
- திருச்சிக்கு வடகிழக்கே 84 கி.மீ. தொலைவில்
பொருளாதாரம் [தொகு]
- உள்ளூர் மக்களின் சுய முயற்சியால் சரக்கு போக்குவரத்து துறையில் நாமக்கல் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. 10,000 க்கும் அதிகமான லாரி (Lorry) என்னும் சுமையுந்து வண்டிகள் இங்கு உள்ளன. சுமையுந்து வண்டிகளின் உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது. சுமையுந்து தொடர்பான பட்டறை என்னும் தொழில் கூடங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது.
- நகர்ப்புறத்தில் சுமையுந்து தொழில் சிறப்படைந்ததை போல கிராமப்பகுதியில் கோழி வளர்ப்பு சிறப்படைந்துள்ளது. கோழி வளர்ப்பில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தொடர்பான கோழி & மாடு தீவன (Feeds) ஆலைகள் பத்துக்கும் மேல் இங்கு உள்ளன. தமிழகத்தின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது.[9]
- மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் சேக்கோ (Sego) எனப்படும் சவ்வரிசி ஆலைகள் அதிக அளவில் உள்ளன,
சுற்றுலா இடங்கள் [தொகு]
- இராமசந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டப்பாட்டில் உள்ளது. இதன் மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிகளை பாறையை (மலையை) செதுக்கி செய்துள்ளனர். இம்மலையில் இருந்து பார்த்தால் நாமக்கலின் சுற்று வட்டாரம் தெளிவாக தெரியும். இது பாறையானதால் மாலையில் ஏறினால் வெப்பம் குறைவாக இருக்கும் அல்லது காலையில் ஏறி வெப்பம் தாக்குவதற்குள் இறங்கினால் நலம். தண்ணீர் & சில திண்பண்டங்கள் எடுத்து செல்வது நல்லது. குரங்குகள் உள்ளதால் உங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.
- அருள்மிகு நரசிம்மர்-நாமகிரி தாயார் கோயில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது. கணித மேதை இராமானுஜர் நாமகிரி தாயாரின் பக்தர். நரசிம்மரின் சிலை மலையை குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரித் தாயாரின் கோயில் மலையை குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஓரு குடைவரை கோயில், இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
- புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இவர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள ஆஞ்சனேயருக்கு கோபுரம் கிடையாது. உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளுள் இச்சிலையும் ஒன்று.
- மலையின் கிழக்கு புறம் அருள்மிகு அரங்கநாதன் கோயில் உள்ளது. இங்கு திருவரங்கன், 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடன் மீது படுத்தவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இது ஒரு குடைவரை கோயில், இதுவும் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
- நாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் கூலிப்பட்டி என்ற இடத்தில் சிறிய குன்றில் முருகன் கோயில் உள்ளது. தெய்வத்திரு கிருபானந்த அடிகளார் இக்கோயிலுக்கு அடிக்கடி வருகை தருவார்.
- நாமக்கலிருந்து கரூர் செல்லும் வழியில் பரமத்தி-வேலூர் அருகேயுள்ள ஜேடரபாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள தடுப்பணை.
- நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் தத்தகிரி முருகன் ஆலயம் உள்ளது. இங்கு தத்தாஸ்வரேயர் சன்னதியும் உள்ளது. இக்கோயில் சேந்தமங்கலத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு அம்மண சாமியார் என்பவர் சமாதி நிலையை அடைந்துள்ளார்.
- நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் முத்தக்காப்பட்டியில் பெரியசாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கட்டடம் ஏதும் இல்லை. கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள தோப்பில் இக்கோயில் அமைந்துள்ளது உள்ளது. வார இறுதி நாட்களில் ஏராளமான மக்கள் வருவர். இக்கோயிலுக்கு முத்தக்காப்பட்டியில் இருந்து சிறிது தொலைவு உள்ளே செல்ல வேண்டும். இங்கு செல்வதற்கு சிற்றுந்து (Mini Bus) வசதி உள்ளது.
- நைனா மலையில் அருள்மிகு வரதராச பெருமாள் கோயில் உள்ளது. மலை மீது ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும். 2500 லிருந்து 3000 படிக்கட்டுக்கள் வரை உள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமை பெருந்திரளான மக்கள் இங்கு வருவர். இக்கோயில் புதன்சந்தையிலிருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் உள்ளது.
- ஆகாயகங்கை அருவி நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது. கொல்லி மலையில் அமைந்துள்ள அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது. இங்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுக்கள் அமைத்துள்ளது.அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது.
- நாமக்கலிருந்து கரூர் செல்லும் வழியில் பரமத்தி-வேலூர் அருகேயுள்ள கொளக்காட்டுப்புதூரிலுள்ள தங்காயி அம்மன் கோவில் மிக பிரசித்தி பெற்றது என எல்லோருக்கும் தெரியும்.
- நாமக்கலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைதோட்டம் (நருவலூர் புதூர் கிராமம்) என்ற பகுதி இருக்கும் ஸ்ரீ ஏரிக்கரை முத்துசாமி / கருப்பண்ண சாமி மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு மும்பை மற்றும் டெல்லி இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் இப்பகுதி மக்கள் ஏரிக்கரை முத்துசாமிக்கு திருவிழா நடத்துகின்றனர்.
விளை பொருட்கள் [தொகு]
நாமக்கல் மழை மறை பகுதியில் அமைந்திருப்பதால் இங்கு நஞ்சை விவசாயம் அல்லாமல் புஞ்சை விவசாயமே நடைபெறுகிறது. சோளம், மரவள்ளிக்கிழங்கு,எள், கரும்பு, நெல், வெற்றிலை, பாக்கு, மக்காசோளம், துவரை, உளுந்து, ஆமணக்கு, தட்டைபயறு, பருத்தி & நிலக்கடலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
போக்குவரத்து [தொகு]
நாமக்கல் மற்ற நகரங்களுடன் சாலை வசதிகளால் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை வாரனாசியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7 ( தேசிய நெடுஞ்சாலை 7 - NH7 இந்தியாவிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை )நாமக்கல் வழியாக செல்கிறது. அருகிலுள்ள நகரங்கள் சேலம் (57 கிமீ) , ஈரோடு (54 கிமீ) , கரூர் (45 கிமீ), திருச்சி (85 கிமீ), கோயமுத்தூர் (154 கிமீ). சேலத்திலிருந்து திருச்சி & மதுரை செல்லும் பேருந்துகள் நாமக்கல் வழியாக செல்லும். நாமக்கல்லில் தொடர்வண்டி நிலையம் இல்லை. நாமக்கல் வழியாக சேலத்தில் இருந்து கரூருக்கு அகலப் பாதை அமைக்கும் திட்டம் 1996-97 ல் ஒப்புதல் பெற்று, பணி மெதுவாக நடந்து வருகிறது. மல்லூர், இராசிபுரம், புதுசத்திரம், நாமக்கல், லத்துவாடி, மோகனூர், வாங்கல் வழியாக புதிய சேலம் - கரூர் இரும்புப்பாதை திட்டம் செல்கிறது. அருகில் உள்ள பெரிய தொடர்வண்டி (புகை வண்டி) நிலையங்கள் சேலம் மற்றும் ஈரோடு. அருகில் உள்ள வானூர்தி நிலையம், சேலம்.
கல்வி [தொகு]
நாமக்கல் தரமான பள்ளிகள் & கல்லூரிகள் நிறைந்த இடம். நாமக்கல் கல்லூரிகள் பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.
கல்லூரிகள் பட்டியல் [தொகு]
- அரசு கால்நடை மருத்துவ கல்லூரி & ஆராய்ச்சி நிலையம்.
- அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி (இருபாலர்), லத்துவாடி
- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரி
- பிஜிபி அறிவியல் & கலைக்கல்லூரி
- செல்வம் அறிவியல் & கலைக்கல்லூரி
- டிரினிட்டி பெண்கள் கல்லூரி
- பிஜிபி பொறியியல் & தொழிற்நுட்ப கல்லூரி
- அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியற் கல்லூரி, எருமைப்பட்டி அஞ்சல்
- செல்வம் தொழிற்நுட்ப கல்லூரி
- சி. எம். சி பொறியியற் கல்லூரி
பள்ளிகள் பட்டியல் [தொகு]
- பாரதி துவக்கப்பள்ளி , ரெட்டிப்பட்டி.
- பாரதி உயர்நிலைப்பள்ளி , ரெட்டிப்பட்டி.
- பாரதி மேல்நிலைப்பள்ளி , ரெட்டிப்பட்டி.
- அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தெற்கு
- அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடக்கு
- நகராட்சி உயர் நிலைப்பள்ளி
- டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி பள்ளி
- கந்தசாமி கண்டர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- குறிஞ்சி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- கிரீன் பார்க் பள்ளி
- ஜேக் & ஜில் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- அண்ணா நேரு மெட்ரிகுலேசன் பள்ளி
- பாரதி மேல்நிலைப்பள்ளி
- நாமக்கல் கொங்கு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- ஸ்பெக்ரம் அகாடமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- பிஜிபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- மாருதி வித்யாலயா
மருத்துவமனை [தொகு]
நாமக்கல் அரசினர் மருத்துவமனை பல்வேறு வசதிகளுடன் உள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ART மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி இங்குள்ளது.
- Anti Retro-Viral Treatment (ART)
- Anti Retro-Viral drugs (ARV)
தமிழகத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் நாமக்கல் மாவட்டத்தில் அதிகம் உள்ளதால் இங்கு நடமாடும் எய்ட்ஸ் ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளது.[10]
2011 உள்ளாட்சி தேர்தல் [தொகு]
2011 அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் இரா. கரிகாலன் 30638 வாக்குகள் பெற்று நகரவை தலைவரானார்.[11] தனி சின்னம் கிடைக்காததால் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் கூட்டணி கட்சியான பாஜக சின்னத்தில் போட்டியிட்டார்.
| வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
|---|---|---|
| அருள் கே | பாஜக | 4647 |
| கரிகாலன் இரா | அதிமுக | 30638 |
| செல்வராஜ் எம் | சுயேச்சை | 392 |
| செல்வராஜ் இரா | திமுக | 14310 |
| நடராஜன் மு | சுயேச்சை | 387 |
| புகழேந்திரன் எம் | மதிமுக | 1138 |
| மணிமாறன் பழ | விடுதலைச் சிறுத்தைகள் | 295 |
| வாசு சீனிவாசன் கே | காங்கிரசு | 966 |
| வேல் எஸ்.கே | தேமுதிக | 4103 |
குறிப்பிடத்தக்க சிறப்புகள் [தொகு]
- நாமக்கல் மாவட்டம் கோழி வளர்ப்புக்குப் பெயர்பெற்றது.
- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை யின் ஊர்
- சிலம்பொலி செல்லப்பனின் ஊர்.
- நாமக்கல்லில் உள்ள ஆஞ்சனேயர் கோவிலிலுள்ள சிலை மிகப் பெரிய சிலைகளில் ஒன்று.
- சுமையுந்து வண்டிகளின் உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது.
- கைத்தறி நெசவு தொழில் இங்கு நடைபெறுகிறது.
- ஆழ் துளையடும் வண்டி உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது.
- திருச்செங்கோட்டில் உள்ள சிவன் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
- இம்மாவட்டத்தில் சற்று அதிகமான முருகன் கோவில்கள் உள்ளன .
படங்கள் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://municipality.tn.gov.in/namakkal/ph_Iso.htm
- ↑ 2011, சனவரி 21ல் நகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்டது
- ↑ Gazetter of south india - page 61
- ↑ South India Handbook - Travel Guide page 150 பார்க்கப்பட்ட நாள் 2012 பிப்ரவரி 09
- ↑ GANDHIJI'S HARIJAN TOUR IN TAMIL NADU, PDF file
- ↑ http://www.hindu.com/thehindu/fr/2002/11/01/stories/2002110101441000.htm
- ↑ 1.htm "நாமக்கல்லில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி!". Web dunia. 25 டிசம்பர் 2007. http://tamil.webdunia.com/newsworld/news/business/0712/25/1071225035 1.htm. Retrieved 2007-12-26.
- ↑ "நாமக்கல்லில் நடமாடும் எய்ட்ஸ் ஆய்வுக்கூடம் அறிமுகம்". 04 ஜனவரி 2008. http://thatstamil.oneindia.in/news/2008/01/04/tn-mobile-aids-detection-centre-in-namakkal.html.
- ↑ உள்ளாட்சி தேர்தல் முடிவு
வெளிஇணைப்புகள் [தொகு]
- நாமக்கல் நகராட்சி இணையதளம்
- சேலம்-நாமக்கல்-கரூர் இருப்புப்பாதை குறித்து நடுவன் இருப்புப்பாதை இணை அமைச்சர் வேலு பேச்சு 2006-12-27
|
|||||||||||||||||||||||||