எருமைப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருமைப்பட்டி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் சேந்தமங்கலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

12,085 (2011)

737/km2 (1,909/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 16.4 சதுர கிலோமீட்டர்கள் (6.3 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/erumapatty

எருமைப்பட்டி (ஆங்கிலம்:Erumaipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது நாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லுரி அமைந்துள்ளது. இது வேளாண்மை நிறைந்த ஊர் பகுதியாகும்

அமைவிடம்[தொகு]

நாமக்கல் - துறையூர் செல்லும் சாலையில், நாமக்கல்லிருந்து 17 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் துறையூர் 41 கிமீ; வடக்கில் இராசிபுரம் 45 கிமீ; தெற்கில் தொட்டியம் 29 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

16.4 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 60 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,954 வீடுகளும், 12,085 மக்கள்தொகையும் கொண்டது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. எருமைப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  4. Erumaipatti Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=எருமைப்பட்டி&oldid=3030313" இலிருந்து மீள்விக்கப்பட்டது