இராசிபுரம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராசிபுரம் வட்டம் தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக இராசிபுரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 93 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]

இவ்வட்டத்தில் இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 340,515 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 173,456 ஆண்களும், 167,059 பெண்களும் உள்ளனர். 91,643 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்களில் 60.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 71.77% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 963 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 29499 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 888 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 79,738 மற்றும் 28,353 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.52%, இசுலாமியர்கள் 1.42%, கிறித்தவர்கள் 0.91% மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசிபுரம்_வட்டம்&oldid=2986473" இலிருந்து மீள்விக்கப்பட்டது