நர-நாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நர நாராயணர்கள்
நர-நாராயணர்கள், சுவாமிநாராயணன் கோயில், அகமதாபாத், இந்தியா
தேவநாகரிनर-नारायण
சமசுகிருதம்nara-nārāyaṇa
வகைதிருமாலின் அவதாரம்
இடம்பத்ரிநாத்

நர-நாராயணன் (Nara-Narayana) (சமக்கிருதம்: नर-नारायण; nara-nārāyaṇa) இந்து சமயம் கூறும் இரு தேவர்கள் ஆவார். ஆதிசேஷன் மற்றும் திருமாலின் அவதார இரட்டையர்களான நர-நாராயணர்கள், பூவுலகில் தருமத்தை நிலை நிறுத்த தோன்றினார்கள். மேலும் நர-நாராயாணத் தத்துவம், நிலையற்ற சீவாத்மாவான நரன் (மனிதன்), நிலையான, தெய்வீக பரமாத்மாவான நாராயாணனை அடைய வேண்டியதாக கருதப்படுகிறது.

இந்து சமய காவியமான மகாபாரதம், கிருஷ்ணரை நாராயணனாகவும், அருச்சுனனை நரனாகவும் குறிக்கிறது. பாகவத புராணத்தில் நர-நாராயணர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. இரட்டையர்களான நர-நாராயணர்கள் பத்ரிநாத் கோயிலில் குடிகொண்டுள்ளதாக இந்துக்கள் நம்புகின்றனர்.

சுவாமிநாராயண் இயக்கத்தினரின் கோயில்களில் நர-நாராயணர்களை மூல தெய்வங்களாக வழிபடும் முறை உள்ளது. மேலும் சுவாமிநாராயணனை நாராயணனின் அவதாரமாக கருதுகின்றனர்.

மகாபாரத காவியத்தில், அருச்சுனனை நரனாகவும், கிருஷ்ணரை நாராயணனாகவும் குறிக்கப்பட்டுள்ளது.[1]

மகாபாரதம், அரி வம்சம் மற்றும் புராணங்களின் படி நரன் ஆதிசேசனின் அவதாரமாகவும்; நாராயணன் திருமாலின் அவதாரமாகவும் கருதப்படுகிறது. [2]

படக்காட்சிகள்

குறிப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nara Narayana
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்

  • Bhandarkar, Ramkrishna Gopal (1995). Vaisnavism Saivism and Minor Religious Systems. Asian Educational Services. p. 238. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0122-X. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Vijnanananda, Swami (2004). The Sri Mad Devi Bhagavatam: Books One Through Twelve Part 1. Kessinger Publishing. p. 624. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7661-8167-7. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Swaminarayan Temple Cardiff - Murtis - NarNarayan Dev

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=நர-நாராயணன்&oldid=2551604" இலிருந்து மீள்விக்கப்பட்டது