பௌண்டரக வாசுதேவன்
தோற்றம்
பௌண்டரக வாசுதேவன் (Paundraka Vasudeva) பாகவத புராணத்தில் கூறப்படும் ஒரு கதை மாந்தர் ஆவார். ஜராசந்தனின் கூட்டாளியான பௌண்டர நாட்டு மன்னர் பௌண்டரக வாசுதேவன், வாசுதேவனைப் போன்று உடையணிகள் பூண்டு, தானே உண்மையான பௌண்டர வாசுதேவன் எனக் கூறிக்கொண்டான்.[1] இறுதியில் இம்மன்னர் ஒரு போரில் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான்.[2]
- மகத நாட்டின் கௌதம தீர்க்கதமஸ் எனும் முனிவரின் மகனான பாலியின் வழித்தோன்றல்களே பௌண்டர நாடு மன்னர்கள் ஆவார்.
- தருமரின் இராசசூய வேள்வியின் போது, பௌண்டர நாட்டு மன்னர் வங்க நாடு கலிங்க நாட்டு மன்னர்களுடன் காணப்பட்டார் எனச் சபா பருவம், அத்தியாயம் 33-இல் குறித்துள்ளது.
- குருச்சேத்திரப் போரில் பௌண்டர நாட்டுப் படைகள் கௌரவர் அணியில் சேர்ந்து, பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டனர். (மகாபாரதம் அத்தியாயம் 7:20) ஆயிரக்கணக்கான பௌண்டர நாட்டுப் படைகள் அருச்சுனனை எதிர்த்துப் போரிட்டது.[3]
- திரௌபதியின் சுயம்வரத்தில் பௌண்டர நாட்டு மன்னர் பௌண்டரக வாசுதேவன் கலந்து கொண்டார் என ஆதி பருவம், அத்தியாயம் 1:188 -189 இல் குறிப்பிட்டுள்ளது
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pauṇḍraka, the False Vāsudeva
- ↑ "Srimad Bhagavatam Canto 10 Chapter 66". Archived from the original on 21 பெப்ரவரி 2007. Retrieved 6 நவம்பர் 2014.
- ↑ (மகாபாரதம் 7:90)