நந்தகோபன் (தொன்மவியல்)
Jump to navigation
Jump to search
நந்த கோபன் அல்லது நந்தகோபர் என்பவர் என்பவர் இந்துத் தொன்மக் கதைகளின் (பாகவதம்) படி ஒரு யது குல இடையர். வசுதேவரின் உறவினர் தான் நந்தகோபன். வசுதேவருடைய மனைவி தேவகியின் அண்ணனான கம்சன் வசுதேவருடைய குழந்தைகளை எல்லாம் கொன்றதால் வசுதேவர், கிருட்டிணர் பிறந்ததும் அவரை கோகுலம் என்ற இடத்தில் வாழ்ந்து வந்த இடையர்களின் தலைவராகிய நந்தரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். நந்தரே கிருட்டிணனையும் பலராமனையும் வளர்த்தார். யசோதை இவரது மனைவி.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ இஞ்சிக்கொல்லை ஆர். சிவராம சாஸ்திரிகள்,(மொழிபெயர்ப்பு) ஸ்ரீமத் பாகவதம்-தமிழ் வசனம், பாகம்-5. பக். 45.