பாரதப்புழா
பாரதப்புழா | |
---|---|
![]() | |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | அரபிக்கடல் |
நீளம் | 209 கி.மீ (130 மைல்) |

பாரதப்புழா (Bharathappuzha) தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள முதன்மையான ஆறுகளுள் ஒன்று. இது கேரள மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஆறு. இதன் நீளம் 209 கி.மீ. இந்த ஆறு நிலா என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆற்றின் முதன்மையான துணையாறு மேற்குத் தொடர்ச்சி மலையின் தமிழ்நாட்டு எல்லைக்குள் அமைந்துள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி பின் மேற்கு நோக்கி பாலக்காட்டுக் கணவாய் வழியாக பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களின் ஊடாகப் பாய்கிறது. திரூர் ஆறு உட்பட பல ஆறுகள் இவ்வழியில் சேர்கின்றன.
பரளி என்ற இடத்தில் கண்ணாடிப்புழாவும் கல்ப்பாத்திப்புழாவும் இணைந்து பாரதப்புழா என்ற ஆறாக ஓடுகிறது. இந்த ஆறு மேற்கு நோக்கி ஓடி பொன்னாணி என்ற இடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. தூதப்புழா ஆறு பள்ளிப்புரம் என்ற இடத்தில் பாரதப்புழாவுடன் சேர்கிறது.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருநாவாய் நவ முகுந்தன் கோயில் இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
துணையாறுகள்[தொகு]
Sorted in order from the mouth heading upstream.