கண்ணாடிப்புழா
தோற்றம்
கண்ணாடிப்புழா (Kannadipuzha River) தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் ஆறு ஆகும். இது இம்மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறுகளுள் ஒன்று. ஆனைமலையின் அடிவாரத்தில் பிறக்கும் இந்த ஆறு, பாலக்காடு நகரின் தென்எல்லையை ஒட்டிப் பாய்ந்து பின் பாரதப்புழையுடன் சேர்கிறது.[1]