இராசகிரிக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசகிரிக் கோட்டை
பகுதி: தமிழ்நாடு
விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இராசகிரிக் கோட்டை
இராசகிரிக் கோட்டை is located in தமிழ் நாடு
இராசகிரிக் கோட்டை
இராசகிரிக் கோட்டை
வகை கோட்டை
இடத் தகவல்
நிலைமை சிதைந்த நிலை

இராசகிரிக் கோட்டை ( Rajagiri Fortசெஞ்சிக் கோட்டையில் உள்ள மூன்று மலைக்கோட்டைகளில் ஒன்றாகும். இது கி.பி. 1200 இல் கட்டப்பட்டது. இராஜகிரி என்பதன் பொருள் மன்னன் மலை என்பதாகும்.[1] இது செஞ்சி கடைவீதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோட்டை கருங்கற்களால் கட்டப்பட்டது.  இந்தக்  கோட்டை வளாகத்தில்  உடற்பயிற்சிக் கூடம் , அரண்மனை தளம், பார்வையாளர் கூடம், மணிமாடம், களஞ்சியம்,  இந்தோ-இஸ்லாமிய பாணி கருவூலம், தானியங்கள் பாதுகாப்பு கட்டடம், யானைக் குளம் ஆகியவற்றுடன் மேற்கு நுழைவு வாயிலில், வேணு கோபாலசாமி கோவில், விஜயநகர மன்னர்கள் கட்டிய அரங்கநாதர் கோயில், கல்யாண மண்டபம், சதத்தல்லாகானின் பள்ளிவாசல் (1717-18), மகபத்கானின் பள்ளிவாசல் போன்றவையும் தொடர்ந்து நீர் வரக்கூடிய குளியல் தொட்டி, ஒரு பெரிய பீரங்கி, கோட்டை அருகே கோயிலைச் சேர்ந்த சக்கரக்குளம் (நீர்த்தேக்கம்) ஆகியவை உ்ள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. South India Handbook By Roma Bradnock
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசகிரிக்_கோட்டை&oldid=3390444" இலிருந்து மீள்விக்கப்பட்டது