அகுவாடா கோட்டை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அகுவாடா கோட்டை | |
---|---|
![]() அரபிக் கடலைப் பார்த்தபடியிருக்கும் கோட்டை மதில். | |
அமைவிடம் | கோவா, இந்தியா |
ஆள்கூற்றுகள் | 15°29′17″N 73°45′47″E / 15.488°N 73.763°E |
கட்டப்பட்டது | 1612 |
வகை | பண்பாடு |
State Party | ![]() |
அகுவாடா கோட்டை இந்தியாவின் கோவாவில் உள்ள 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு போர்த்துக்கேயக் கோட்டை ஆகும். சிங்குவெரிம் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள இது அரபிக் கடலை நோக்கியபடி அமைந்துள்ளது. இக்கோட்டைஉம் அதன் கலங்கரை விளக்கமும் நல்ல நிலையில் பேணப்பட்டுள்ள ஒரு வரலாற்றுச் சின்னமாக விளங்குகின்றன.
தோற்றமும் வரலாறும்[தொகு]
ஒல்லாந்தரிடமிருந்தும், மராட்டாக்களிடமிருந்தும் இப்பகுதியைப் பாதுகாப்பதற்காக 1613 ஆம் ஆண்டில் இக்கோட்டை கட்டப்பட்டது. அக்காலத்தில் ஐரோப்பாவில் இருந்து வரும் கப்பல்களுக்கான ஒரு அடையாளப் புள்ளியாக இவ்விடம் விளங்கியது. இந்தக் கோட்டை கடற்கரையோரமாக காண்டோலிமுக்குத் தெற்கே மண்டோவி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் கப்பல் போக்குவரத்துக்குப் பாதுகாப்பாக இருப்பதும், அருகில் உள்ள பார்தேசு துணை மாவட்டத்தைப் பாதுகாப்பதுமே இதன் பணியாக இருந்தது.
இக்கோட்டைக்குள் இருக்கும் ஒரு நன்னீர் ஊற்றின் மூலம் அப்பகுதிக்கு வரும் கப்பல்களுக்கு நீர் வழங்கினர். இதனாலேயே இதற்கு அகுவாடா என்னும் பெயர் ஏற்பட்டது. அகுவாடா என்பது "நீர்" என்னும் பொருள் தரும் ஒரு சொல். இங்கே நான்கு மாடிகளைக்கொண்ட போர்த்துக்கேயக் கலங்கரை விளக்கம் உள்ளது. 1864 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இது இவ்வகையில் ஆசியாவிலேயே மிகப் பழமையானது. இக்கோட்டை ஒருகாலத்தில் 79 பீரங்கிகளைக் கொண்டதாக இருந்தது. 2,376,000 கலன்கள் நீரைச் சேமித்து வைக்கக்கூடிய வசதிகள் இங்கே இருந்தன. ஆசியாவின் மிகப் பெரிய நீர் சேமிப்பிடங்களில் ஒன்றாகவும் இது விளங்கியது.
இக்கோட்டை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. மேற்பகுதி கோட்டையாகவும், நீர் வழங்கும் நிலையமாகவும் தொழிற்பட்ட அதே வேளை, கீழ்ப்பகுதி போர்த்துக்கேயக் கப்பல்களுக்குப் பாதுகாப்பான நிறுத்தும் இடமாக இருந்தது. மேற்பகுதியில், அகழி, நிலக்கீழ் நீர்த்தாங்கி, வெடிமருந்து அறை, கலங்கரை விளக்கம், கொத்தளங்கள் என்பன இருந்தன. போர்க் காலங்களிலும், அவசர தேவைகளுக்கும் பயன்படுத்துவதற்காக இரகசியத் தப்பும் வழி ஒன்றும் இருந்தது. தொடக்கத்தில் கலங்கரை விளக்கம் ஏழு நிமிடங்களுக்கு ஒரு தடவை ஒளியைப் பாய்ச்சுமாறு அமைக்கப்பட்டு இருந்தது. 1834 ஆம் ஆண்டில் இது 30 செக்கன்களுக்கு ஒரு தடவை ஒளி பாய்ச்சும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. 1976ல் இது கைவிடப்பட்டது.