திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருப்புகலூர்
பெயர்:திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்புகலூர்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சரண்யபுரீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான்
தாயார்:கருந்தார் குழலி, சூளிகாம்பாள்
தல விருட்சம்:புன்னை மரம்
தீர்த்தம்:அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்
வரலாறு
தொன்மை:புராதனக்கோயில்

அக்கினிபுரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 75ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் தலவிருட்சமாக புன்னை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் பாண தீர்த்தம் ஆகியவை உள்ளன.

அமைவிடம்[தொகு]

இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் அக்னிபுரீஸ்வரர்,இறைவி கருந்தார் குழலி.

அமைப்பு[தொகு]

கோயிலின் முன்பே குளம் உள்ளது. ராஜ கோபுரத்தை அடுத்து, உள் கோபுரம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. மூலவர் சன்னதியின் வலது புறத்தில் திருநாவுக்கரசர் சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் அகத்தியர், நடராஜர், கணபதி, அண்ணாமலை, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் வாதாபி கணபதி, திருநாவுக்கரசர், காசிவிசுவநாதர், சோமநாயகர் சன்னதிகள் உள்ளன. திரிமுகாசுரன், காலசம்காரமூர்த்தி ஆகியோரும் உள்ளனர். அருகில் தலவரலாறு கல்வெட்டாக உள்ளது. வெளியே இடதுபுறத்தில் சூளிகாம்பாள் (கருந்தார்குழலி) சன்னதி உள்ளது. கோயில் வளாகத்தின் வெளியில் திருநாவுக்கரசர் மண்டபம் 22 சூன் 1958இல் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டதற்கான கல்வெட்டோடு உள்ளது. மண்டபத்தின் முன்பாக குளம் காணப்படுகிறது

பிற சிறப்புகள்[தொகு]

திருப்புகலூர் முருக நாயனார் அவதாரத்தலம். இவரது திருமடம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலான நாயன்மார்கள் இவருடன் தொண்டர்குழாமாக இருந்து மகிழ்ந்த மடம்.சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவனார் செங்கல்லைப் பொன் கல்லாக மாற்றிய தலம்.[1][2]

திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம்[தொகு]

மூலவர் அக்னிபுரீஸ்வரர் சன்னதியை ஒட்டி, அதன் இடது புறத்தில் மற்றொரு பாடல் பெற்ற தலமான திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம் கோயிலுக்குள் கோயிலாக உள்ளது. மூலவர் அக்னிபுரீஸ்வரர் சன்னதிக்குள் நுழையும் வாயில் வழியாகவே அடுத்துள்ள வர்த்தமானீஸ்வரர் சன்னதிக்குச் செல்லமுடியும். அதற்கு தனியாக வேறு வாயில் காணப்படவில்லை. அதில் வர்த்தமானீஸ்வரர் உள்ளார். அவருக்கு அருகில் பலி பீடம் உள்ளது. எதிரில் முருக நாயனார் சிற்பம் உள்ளது. அருகே சுவரில் ஞானசம்பந்தர் திருப்புகலூர் வர்த்தமானீசுரத்தைப் போற்றிப் பாடிய பதிகம் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.shaivam.org/siddhanta/spt_nayanmar.htm
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 222,223

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

படத்தொகுப்பு[தொகு]