திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருத்தலையாலங்காடு, தலையாலங்காடு
பெயர்:திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:தலையாலங்காடு
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நர்த்தனபுரீஸ்வரர் ,நடனேசுவரர், ஆடவல்லநாதர்
தாயார்:உமாதேவி, திருமடந்தையம்மை
தல விருட்சம்:ஆலமரம்
தீர்த்தம்:சங்கு தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்

திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில் [1] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 93ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் 53.சிமிழி ஊராட்சி கும்பகோணம்-திருவாரூர் பேருந்து சாலையில் அமைந்துள்ளது.

சிறப்புகள்[தொகு]

இத்தலத்தில் முயலகனை அடக்கி அவன் முதுகை நெரித்து இறைவன் நடனமாடினான் என்பது தொன்நம்பிக்கை.

வழிபட்டோர்[தொகு]

கபில முனிவர் வழிபட்ட திருத்தலம். இத்தலத்து தீர்த்தம் நோய் தீர்க்கும் சிறப்புடையது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 232

இவற்றையும் பார்க்க[தொகு]