ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருஆக்கூர் தான்தோன்றீசுவரர் திருக்கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருஆக்கூர் |
பெயர்: | திருஆக்கூர் தான்தோன்றீசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | ஆக்கூர் |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | தான்தோன்றியப்பர், சுயம்புநாதர்[1] |
தாயார்: | வாள்நெடுங்கண்ணி, கடக நேத்திரி |
தல விருட்சம்: | சரக்கொன்றை |
தீர்த்தம்: | குமுத தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயில் |
வரலாறு | |
அமைத்தவர்: | கோச்செங்கட் சோழன் |
ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 46ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், கபிலதேவ நாயனார் இத்தலம் மீது பாடிய பாடல் பதினொராம் திருமுறையில் உள்ளது. இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி.
அமைவிடம்[தொகு]
அப்பர் பாடல் பெற்ற இத்தலம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது. செம்பொனார் கோயிலுக்கு ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது.[1] சிறப்புலி நாயனார் அவதரித்த தலம்.[1]
அமைப்பு[தொகு]
இராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே பலி பீடம், நந்தியை அடுத்து கருவறை உள்ளது. இடப்புறம் ஆயிரத்தொருவர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் உள்ளன.பலிபீடம் நந்தியைக் கடந்து உள்ளே செல்லும்போது மூலவர் கருவறைக்கு முன்பாக துவாரபாலகர்கள் உள்ளனர். திருச்சுற்றில் இரண்டு பாணலிங்கங்கள், விசாலாட்சி, விசுவநாதர், சிறப்புலிநாயனார், மகாலிங்கம், சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், பரவையார், சுந்தரர், ச்ஙகிலியார், கணபதி, மகாலிங்கம், பாலமுருகன், அருணகிரிநாதர், மகாலிங்கம், கஜலட்சுமி, கைலாசநாதர், பர்வதவர்த்தினி, வாயுங்கம், தேயுலிங்கம், அப்புலிங்கம் காணலாம். ஆயிரத்தொருவர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் இங்கு உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூரத்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, கோச்செங்கட்சோழன், துர்க்கை உள்ளனர். மூலவர் சன்னதிக்கு வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. வெளிச்சுற்றில் விநாயகர், சரஸ்வதி, வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. சுப்பிரமணியர் சன்னதிக்கு முன்பாக மயிலும், பலிபீடமும் உளளன.
தலவரலாறு[தொகு]
சோழ மன்னனொருவன் ஆயிரம் அந்தணர்களுக்கு தினமும் உணவு அளிக்கும் போது, இறைவன் அந்த ஆயிரவர்களில் ஒருவராகக் காட்சி தந்ததால் ஆயிரத்துள் ஒருவர் என்றும் வழங்கப்படுகிறார்.
இறைவன், இறைவி[தொகு]
மாடக்கோயில் அமைப்பில் இக்கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் தான்தோன்றியப்பர்,இறைவி வாள்நெடுங்கண்ணி.
மேற்கோள்கள்[தொகு]
இவற்றையும் பார்க்க[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 46 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 46 |