விஷ்ணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
அடையாளங்கள்: Undo Reverted |
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
நாராயணன், வாசுதேவன், செகன்நாதர், விதோபர், ஹரி, [[திருமால்]] என்று பல பெயர்களால் விஷ்ணு அறியப்படுகிறார். இவர் நீல நிற தோற்றத்தில் கீழ் வலது கையில் கௌமேதகியும் கீழ் இடது கையில் பத்மாவும் மேல் வலது கையில் சுதர்சனமும் மேல் இடது கையில் பாஞ்சசன்யமும், தாங்கிய தோற்றத்துடன் காணப்படுகிறார். மேலும் இவர் பாற்கடலில் [[திருமகள்|லட்சுமி தேவியுடன்]] [[ஆதிசேஷன்]] என்ற நாக படுக்கையில் படுத்திருப்பதாக நம்பப்படுகிறது.<ref>http://www.tamilvu.org/slet/l4100/l4100pd1.jsp?bookid=120&part=II&pno=1146</ref> |
நாராயணன், வாசுதேவன், செகன்நாதர், விதோபர், ஹரி, [[திருமால்]] என்று பல பெயர்களால் விஷ்ணு அறியப்படுகிறார். இவர் நீல நிற தோற்றத்தில் கீழ் வலது கையில் கௌமேதகியும் கீழ் இடது கையில் பத்மாவும் மேல் வலது கையில் சுதர்சனமும் மேல் இடது கையில் பாஞ்சசன்யமும், தாங்கிய தோற்றத்துடன் காணப்படுகிறார். மேலும் இவர் பாற்கடலில் [[திருமகள்|லட்சுமி தேவியுடன்]] [[ஆதிசேஷன்]] என்ற நாக படுக்கையில் படுத்திருப்பதாக நம்பப்படுகிறது.<ref>http://www.tamilvu.org/slet/l4100/l4100pd1.jsp?bookid=120&part=II&pno=1146</ref> |
||
விஷ்ணுவின் வாகனமாக [[கருடன், புராணம்|கருடனும்]], |
விஷ்ணுவின் வாகனமாக [[கருடன், புராணம்|கருடனும்]], அருவ வடிவமாகக் [[சாளக்கிராமம்|சாளக்கிராமமும்]] கருதப்படுகிறது. |
||
இந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே இறைவன் இவரே. [[திருவரங்கம்]] போன்ற வைணவத்தலங்களில் இந்தத் திருக்கோலமுள்ளது.<ref>{{Cite web |url=http://www.bdu.ac.in/virtual_library/0120/89.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2018-07-09 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305184017/http://www.bdu.ac.in/virtual_library/0120/89.htm |url-status=dead }}</ref> |
இந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே இறைவன் இவரே. [[திருவரங்கம்]] போன்ற வைணவத்தலங்களில் இந்தத் திருக்கோலமுள்ளது.<ref>{{Cite web |url=http://www.bdu.ac.in/virtual_library/0120/89.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2018-07-09 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305184017/http://www.bdu.ac.in/virtual_library/0120/89.htm |url-status=dead }}</ref> சிவனின் இடப்புறத்திலிருந்து விஷ்ணுவும், வலப்புறத்திலிருந்து பிரம்மாவும் உருவானார்கள் என திருமாலின் அவதாரங்களில் ஒருவரான வேதவியாசரால் இயம்பப்படுகிறது. |
||
இதிகாசங்களான [[மகாபாரதம்]] இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், [[இராமாயணம்]] இராம அவதாரத்தினையும் விளக்குகிறது. [[பாகவத புராணம்]], [[ஹரி வம்சம்]], [[விஷ்ணு புராணம்]], [[மச்சபுராணம்]], [[வாமன புராணம்]] உள்ளிட்ட பன்னிரு புராண நூல்கள் விஷ்ணுவின் பெருமைகளை விவரிக்கின்றன.<ref>http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=19</ref> |
இதிகாசங்களான [[மகாபாரதம்]] இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், [[இராமாயணம்]] இராம அவதாரத்தினையும் விளக்குகிறது. [[பாகவத புராணம்]], [[ஹரி வம்சம்]], [[விஷ்ணு புராணம்]], [[மச்சபுராணம்]], [[வாமன புராணம்]] உள்ளிட்ட பன்னிரு புராண நூல்கள் விஷ்ணுவின் பெருமைகளை விவரிக்கின்றன.<ref>http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=19</ref> |
||
== குணநலன்கள் == |
|||
== கல்யாண குணங்கள் == |
|||
விஷ்ணுவின் |
விஷ்ணுவின் குணங்களாக நான்கு குணங்கள் கூறப்பெறுகின்றன. அவையாவன, |
||
# வாத்சல்யம் – தாய்ப்பசுவின் கன்று கொள்கின்ற அன்பு. |
# வாத்சல்யம் – தாய்ப்பசுவின் கன்று கொள்கின்ற அன்பு. |
||
வரிசை 55: | வரிசை 55: | ||
=== அக்கினி புராணம் === |
=== அக்கினி புராணம் === |
||
விஷ்ணுவும் இலட்சுமியும் [[பாற்கடல்|பாற்கடலில்]] தனித்திருக்கும் வேளையில் சனகாதி முனிவர்கள் விஷ்ணுவைக் காண வந்தார்கள். அவர்களை |
விஷ்ணுவும் இலட்சுமியும் [[பாற்கடல்|பாற்கடலில்]] தனித்திருக்கும் வேளையில் சனகாதி முனிவர்கள் விஷ்ணுவைக் காண வந்தார்கள். அவர்களை செயன், விசயன் எனும் இரு வாயிற்காவலர்களும் தடுத்தனர். இறைவனின் தரிசனத்திற்கு வந்த தங்களைத் தடுத்தமையால் கோபம் கொண்ட முனிவர்கள் வாயிற்காவலர்களைக் கொடூர அசுரர்களாகப் பிறக்கும்படி சாபமிட்டனர். இதையறிந்த விஷ்ணு தன்னுடைய வாயிற்காவலர்கள் அரக்கர்களாகப் பிறக்கும் போது, அவர்களை ஆட்கொள்ள தசாவதாரம் எடுத்ததாகக் காரணம் சொல்லப்படுகிறது. |
||
பத்து அவதாரங்கள் அல்லது தசாவதாரங்கள் என்று கூறப்படுவன: |
பத்து அவதாரங்கள் அல்லது தசாவதாரங்கள் என்று கூறப்படுவன: |
||
வரிசை 105: | வரிசை 105: | ||
# [[கௌதம புத்தர்|புத்த அவதாரம்]] |
# [[கௌதம புத்தர்|புத்த அவதாரம்]] |
||
# [[கல்கி (அவதாரம்)|கல்கி அவதாரம்]] |
# [[கல்கி (அவதாரம்)|கல்கி அவதாரம்]] |
||
== வைணவ அருளிச்செயல்கள் == |
|||
# [[பொய்கையாழ்வார்]] - முதலாம் திருவந்தாதி |
|||
# [[பூதத்தாழ்வார்]] - இரண்டாம் திருவந்தாதி |
|||
# [[பேயாழ்வார்]] - மூன்றாம் திருவந்தாதி |
|||
# [[திருமழிசையாழ்வார்]] - திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி |
|||
# [[நம்மாழ்வார் (ஆழ்வார்)|நம்மாழ்வார்]] - திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி |
|||
# [[மதுரகவி ஆழ்வார்]] - கண்ணிநுண் சிறுத்தாம்பு |
|||
# [[குலசேகர ஆழ்வார்]] - பெருமாள் திருமொழி |
|||
# [[பெரியாழ்வார்]] - திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி |
|||
# [[ஆண்டாள்]] - நாச்சியார் திருமொழி, திருப்பாவை |
|||
# [[தொண்டரடிப்பொடியாழ்வார்]] - திருமாலை, திருப்பள்ளியெழுச்சி |
|||
# [[திருப்பாணாழ்வார்]] - அமலனாதிபிரான் |
|||
# [[திருமங்கையாழ்வார்]] - திருவெழுக்கூற்றிருக்கை,சிறிய திருமடல்,பெரிய திருமடல்,திருநெடுந்தாண்டகம்,திருக்குறுந் தாண்டகம்,பெரிய திருமொழி |
|||
== கடவுளுடனான உறவு == |
== கடவுளுடனான உறவு == |
||
வரிசை 193: | வரிசை 179: | ||
கிருட்டிணரும் சத்யபாமாவும் நரகாசுரனை அழித்ததால் தீபாவளிப் பண்டிகையையும், வராக செயந்தி, மத்சய செயந்தி, சுதர்சன செயந்தி, கூர்ம செயந்தி, வாமன செயந்தி, கிருட்டிண செயந்தி (சிரீ செயந்தி), சிரீ ராம நவமி, அயக்ரீவ செயந்தி, நரசிம்ம செயந்தி, போன்ற தினங்களில் விஷ்ணுவை வழிபட்டு பக்தர்கள் மகிழ்வர். |
கிருட்டிணரும் சத்யபாமாவும் நரகாசுரனை அழித்ததால் தீபாவளிப் பண்டிகையையும், வராக செயந்தி, மத்சய செயந்தி, சுதர்சன செயந்தி, கூர்ம செயந்தி, வாமன செயந்தி, கிருட்டிண செயந்தி (சிரீ செயந்தி), சிரீ ராம நவமி, அயக்ரீவ செயந்தி, நரசிம்ம செயந்தி, போன்ற தினங்களில் விஷ்ணுவை வழிபட்டு பக்தர்கள் மகிழ்வர். |
||
== |
== விஷ்ணுவின் சிறப்புத் தலங்கள் == |
||
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த நூற்றெட்டு வைணவ திவ்விய தேசங்கள், அபிமான தலங்கள், பத்ராச்சலம், பூரி செகந்நாதர் திருக்கோவில், திருவயோதி, மதுரா, துவாரகை, திருவரங்கபட்டணம், போன்ற தலங்கள் மிகவும் சிறப்பிடம் பெற்ற விஷ்ணுவின் ஆலயங்கள் ஆகும். |
|||
== நாலாயிர திவ்யப் பிரபந்தம் == |
== நாலாயிர திவ்யப் பிரபந்தம் == |
||
வரிசை 208: | வரிசை 194: | ||
{{wide image|Srirangamlong view.jpg|600px|[[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்]], இந்தியாவின் மிகப்பெரிய இந்துக் கோவில்.{{sfn|Mittal| Thursby |2005| p= 456}}||none}} |
{{wide image|Srirangamlong view.jpg|600px|[[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்]], இந்தியாவின் மிகப்பெரிய இந்துக் கோவில்.{{sfn|Mittal| Thursby |2005| p= 456}}||none}} |
||
== |
== காண்க == |
||
* [[வைணவ சமயம்]] |
* [[வைணவ சமயம்]] |
||
* [[ஆழ்வார்கள்]] |
* [[ஆழ்வார்கள்]] |
||
* [[திருமாலின் பெயர்கள்]] |
|||
* [[திருமாலின் வேறு பெயர்கள்]] |
|||
* [[நித்தியசூரிகள்]] |
|||
* [[திருப்பரமபதம்]] |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
வரிசை 228: | வரிசை 210: | ||
[[பகுப்பு:பன்னிரு ஆதித்தர்கள்]] |
[[பகுப்பு:பன்னிரு ஆதித்தர்கள்]] |
||
[[பகுப்பு:மும்மூர்த்திகள்]] |
[[பகுப்பு:மும்மூர்த்திகள்]] |
||
[[பகுப்பு:திருமாலின் பெயர்கள்]] |
|||
[[பகுப்பு:திருமாலின் வேறு பெயர்கள்]] |
09:14, 28 சனவரி 2024 இல் நிலவும் திருத்தம்
விஷ்ணு | |
---|---|
விஷ்ணு-நான்கு கரங்களுடன் | |
அதிபதி | காத்தல் யாவற்றுக்கும் |
தேவநாகரி | विष्णु |
சமசுகிருதம் | viṣṇu |
வகை | முழுமுதல், மும்மூர்த்திகள் |
இடம் | வைகுந்தம் |
ஆயுதம் | சங்கு, சக்கரம், வில், கதாயுதம், மற்றும் நந்தகம் |
துணை | இலக்குமி, பூமாதேவி, நீளாதேவி |
குழந்தைகள் | பிரம்மா,காமதேவன்,செவ்வாய் |
வாகனம் | கருடன் |
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
இந்து சமயம் வலைவாசல் சைவம் வலைவாசல் வைணவம் வலைவாசல் |
வைணவம் தொடரின் ஒரு பகுதி |
---|
விஷ்ணு என்பவர் இந்து சமயத்தின் முக்கியமான கடவுள்களில் ஒருவரும் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளும் ஆவார். மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு மூவுலகையும் காப்பவராக இருக்கிறார். இவர் பிறப்பும், இறப்பும் இல்லா பரம்பொருளாக இருப்பதால் பரப்பிரம்மன், பரமாத்மா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்று பொருள். வைணவ சமயத்தின் படி, பரப்பிரம்மனான விஷ்ணு, உலகில் அதர்மம் தலைதூக்கும் போது தர்மத்தை நிலைநாட்ட பல்வேறு அவதாரங்கள் எடுப்பார் என்று கூறப்படுகிறது. அதன்படி அவர் எடுத்த தசாவதாரங்களில் இராம மற்றும் கிருஷ்ண அவதாரங்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.
நாராயணன், வாசுதேவன், செகன்நாதர், விதோபர், ஹரி, திருமால் என்று பல பெயர்களால் விஷ்ணு அறியப்படுகிறார். இவர் நீல நிற தோற்றத்தில் கீழ் வலது கையில் கௌமேதகியும் கீழ் இடது கையில் பத்மாவும் மேல் வலது கையில் சுதர்சனமும் மேல் இடது கையில் பாஞ்சசன்யமும், தாங்கிய தோற்றத்துடன் காணப்படுகிறார். மேலும் இவர் பாற்கடலில் லட்சுமி தேவியுடன் ஆதிசேஷன் என்ற நாக படுக்கையில் படுத்திருப்பதாக நம்பப்படுகிறது.[1]
விஷ்ணுவின் வாகனமாக கருடனும், அருவ வடிவமாகக் சாளக்கிராமமும் கருதப்படுகிறது.
இந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே இறைவன் இவரே. திருவரங்கம் போன்ற வைணவத்தலங்களில் இந்தத் திருக்கோலமுள்ளது.[2] சிவனின் இடப்புறத்திலிருந்து விஷ்ணுவும், வலப்புறத்திலிருந்து பிரம்மாவும் உருவானார்கள் என திருமாலின் அவதாரங்களில் ஒருவரான வேதவியாசரால் இயம்பப்படுகிறது.
இதிகாசங்களான மகாபாரதம் இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், இராமாயணம் இராம அவதாரத்தினையும் விளக்குகிறது. பாகவத புராணம், ஹரி வம்சம், விஷ்ணு புராணம், மச்சபுராணம், வாமன புராணம் உள்ளிட்ட பன்னிரு புராண நூல்கள் விஷ்ணுவின் பெருமைகளை விவரிக்கின்றன.[3]
குணநலன்கள்
விஷ்ணுவின் குணங்களாக நான்கு குணங்கள் கூறப்பெறுகின்றன. அவையாவன,
- வாத்சல்யம் – தாய்ப்பசுவின் கன்று கொள்கின்ற அன்பு.
- சுவாமித்துவம் – கடவுள்களுக்கெல்லாம் தலைமையேற்கும் சிறப்பு.
- சௌசீல்யம் – ஏற்றத்தாழ்வின்றி நட்பு பாராட்டுவது.
- சௌலப்யம் – கடவுளின் எளிமையை குறிப்பது.
இந்த நான்கு குணங்களும் விஷ்ணுவுடைய கிருட்டிண அவதாரத்தில் வெளிப்பட்டதாகவும் கருதப்பெறுகிறது. அருச்சுனனின் தவறை நோக்காது, பாரத போரினை நிகழ்த்தியமை வாத்சல்யமாகவும், அருச்சுனனுக்கு தன்னுடைய பரத்துவத்தை விளக்கியமை சுவாமித்தரமாகவும், குசேலனிடம் நட்பு பாராட்டியமை சௌசீல்யமாகவும், இறைவனாகிய விஷ்ணு மனிதனாக அவதரித்தது சௌலப்யமாகவும் சொல்லப்பெறுகிறது.[4]
விஷ்ணுவின் அவதாரங்கள்
உலகில் அதர்மம் தலையெடுக்கும்போது விஷ்ணு உலகில் அவதரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர். இதற்காக விஷ்ணு எடுத்த அவதாரங்களை சப்தாவதாரம், தசாவதாரம் என எண்ணிக்கை அடிப்படையில் குறித்துவைக்கின்றனர். பாகவத புராணத்தில் விஷ்ணு இருபத்தைந்து அவதாரங்களை எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.[5]
விஷ்ணுவின் அவதாரங்களை அவதாரம், ஆவேசம், அம்சம் என பிரிக்கின்றார்கள்.[6]
- அவதாரம் – முழு சக்தியை கொண்டது.
- ஆவேசம் – தேவையின் போது மட்டும் சக்தி கொண்டவனாகுதல்.
- அம்சம் – விஷ்ணு சக்தியின் ஒரு பகுதி ஓர் உருக்கொண்டு வெளிப்படுவது.
வாயு புராணம்
அசுரகுருவான சுக்கிராச்சாரியாரின் மனைவியை விஷ்ணு கொன்றதால், அவரை ஏழுமுறை மனிதனாக பூமியில் பிறக்கும் படி சுக்கிராச்சாரியார் சபித்தார். இதனால் தத்தாத்ரேயர், பரசுராமர், இராமர், வியாசர், கிருட்டிணன், உபேந்திரன், கல்கி முதலிய சப்த அவதாரங்களை விஷ்ணு எடுத்ததாக இதில் கூறப்படுகிறது.
அக்கினி புராணம்
விஷ்ணுவும் இலட்சுமியும் பாற்கடலில் தனித்திருக்கும் வேளையில் சனகாதி முனிவர்கள் விஷ்ணுவைக் காண வந்தார்கள். அவர்களை செயன், விசயன் எனும் இரு வாயிற்காவலர்களும் தடுத்தனர். இறைவனின் தரிசனத்திற்கு வந்த தங்களைத் தடுத்தமையால் கோபம் கொண்ட முனிவர்கள் வாயிற்காவலர்களைக் கொடூர அசுரர்களாகப் பிறக்கும்படி சாபமிட்டனர். இதையறிந்த விஷ்ணு தன்னுடைய வாயிற்காவலர்கள் அரக்கர்களாகப் பிறக்கும் போது, அவர்களை ஆட்கொள்ள தசாவதாரம் எடுத்ததாகக் காரணம் சொல்லப்படுகிறது.
பத்து அவதாரங்கள் அல்லது தசாவதாரங்கள் என்று கூறப்படுவன:
- மச்ச அவதாரம்
- கூர்ம அவதாரம்
- வராக அவதாரம்
- நரசிம்ம அவதாரம்
- வாமண அவதாரம்
- பரசுராம அவதாரம்
- இராம அவதாரம்
- பலராம அவதாரம்
- கிருட்டிண அவதாரம்
- கல்கி அவதாரம்
பௌத்த மதத்தினை தோற்றுவித்தவரான கௌதம புத்தரும் விட்டிணுவின் தசாவதாரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் திருபாற்கடலை கடையும் போது அசுரர்களை மயக்கிய தேவி மோகினியும் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. இதுகுறித்து புராணங்களிலும் செய்திகளுள்ளது. அத்துடன் மகாபலிபுரத்தில் அரியரன் சிற்பத்தின் மேல் உள்ள கல்வெட்டொன்றில் தசாவதாரம் குறித்து கீழ்க்கண்ட வடமொழி சுலோகம் எழுதப்பெற்றுள்ளது. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை
- மத்சய கூர்ம வராஹஸ்ச நாரசிம்மஸ்ச வாமணஹ
- ராமோ ராமஸ்ச ராமாஸ்ச புத்தக் கல்கீ தசாஸ்மிருதா:[7]
(ஆனால் வைணவ நூல்களில் புத்தர் குறித்த குறிப்புகள் இல்லை.)
ஸ்ரீமத் பாகவதம்
ஸ்ரீமத் பாகவதத்தில் பகவான் விஷ்ணு மொத்தம் 24 அவதாரங்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. அவையாவன:
- சனகாதி முனிவர்கள்
- ஆதிபுருட அவதாரம்
- வராக அவதாரம்
- நாரத அவதாரம்
- நரநாரயண அவதாரம்
- கபில அவதாரம்
- யக்ஞ அவதாரம்
- ரிசபதேவ அவதாரம்
- பிருது அவதாரம்
- அயக்கிரீவ அவதாரம்
- அம்ச அவதாரம்
- வியாச அவதாரம்
- மச்ச அவதாரம்
- கூர்ம அவதாரம்
- தன்வந்திரி அவதாரம்
- மோகினி அவதாரம்
- நரசிம்ம அவதாரம்
- வாமன அவதாரம்
- பரசுராம அவதாரம்
- ராம அவதாரம்
- தத்தாத்ரேய அவதாரம்
- பலராம கிருட்டிண அவதாரம்
- புத்த அவதாரம்
- கல்கி அவதாரம்
கடவுளுடனான உறவு
இந்துக் கடவுளும் சிவனின் மனைவியுமான பார்வதி தேவியின் சகோதரனாக விஷ்ணு கூறப்படுகிறார். விஷ்ணுவின் கண்ணீரில் இருந்து தோன்றிய வள்ளி மற்றும் தெய்வானையை சிவன்-பார்வதி மைந்தனான முருகப்பெருமான் மணந்து விஷ்ணுவின் மருமகன் ஆனார். மேலும் பிரம்ம தேவனை தன் நாபியிலிந்து படைத்து அவருக்கு தந்தையானவர். மேலும் பிரம்மனால் சிவன் படைக்கப்பட்டதால் சிவனுக்கு தாத்தா ஆகிறார் விஷ்ணு.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்றப் பின்பு, அமுதத்தினை அசுரர்கள் அருந்தினால் சாகாவரம் பெற்றவர்களாக ஆகிவிடுவார்கள் எனப் பயந்த தேவர்கள், விஷ்ணுவிடம் வேண்டினர். விஷ்ணு மோகினி என்னும் பெண் அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு மட்டும் அமுதம் கிடைக்கப்பெறச் செய்தார்.
விஷ்ணு நாமாவளி
விஷ்ணு நாமாவளி என்பது திருமாலின் வேறுபட்ட பெயர்களின் தொகுப்பாகும். நாம ஆவளி என்பதற்கு பெயர்களின் வரிசை என்று பொருளாகும். கோவிந்த நாமாவளி, சத்யநாராயண அட்டோத்திர சதநாமாவளி, விஷ்ணு சகசுரநாமம் அவற்றில் குறிப்பிடத்தக்கன. இதில் விஷ்ணு சகசுரநாமம் வைணவத்தலங்களில் மந்திரமாக மூலவரின் முன் மட்டுமல்லாது பெரும்பான்மையானோரால் தினமும் இல்லத்திலும் ஓதப்படுவதாக உள்ளது.
விஷ்ணுவிற்கு அனுட்டிக்கும் விரதங்கள்
உலகத்தில் உள்ள வைணவர்கள் பொதுவாக இருபத்து நான்கு ஏகாதசி விரதங்களை கடைபிடிக்கின்றனர். இவ்விரதங்களைப் கடைபிடித்து திருமாலின் அருளை பெற்று நீங்காத செல்வம் பெறலாம்.
பக்ஷம். | மாதம் | விரதத்தின் பெயர் | பலன் |
---|---|---|---|
சுக்ல | சித்திரை | காமதா | நினைத்த காரியம் நடக்கும் |
கிருட்டிண | சித்திரை | பாப மோசனிகா | பாபங்கள் அகலும் |
சுக்ல | வைகாசி | மோகினி | பாவம் நீங்கும் |
கிருட்டிண | வைகாசி | வருதிந் | பிரம்மகத்தி தோசம் நீங்கும் (சிவன், பிரம்மன் தலையை அறுத்த தோசம் நீங்கிய நாள்) |
சுக்ல | ஆனி | நிர்சலா (பீம) | எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக் கூடாது - பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்) |
கிருட்டிண | ஆனி | அபார | குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும் |
சுக்ல | ஆடி | சயிநீ | தெய்வ சிந்தனை அதிகமாகும் - திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்) |
கிருட்டிண | ஆடி | யோகினீ | நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஏமநாதன் விரதம் இருந்து குட்ட நோய் நீங்கிய நாள்) |
சுக்ல | ஆவணி | புத்ரசா | புத்ர பாக்கியம் கிடைக்கும் |
கிருட்டிண | ஆவணி | சாமிகா | விருப்பங்கள் நிறைவேறும் |
சுக்ல | புரட்டாசி | பத்மநாபா | பஞ்சம் நீங்கும் |
கிருட்டிண | புரட்டாசி | அசா | இழந்ததைப் பெறலாம் - அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள் |
சுக்ல | ஐப்பசி | பாபாங்குசா | கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள் அகலும் |
கிருட்டிண | ஐப்பசி | இந்திரா | பித்ருக்கள் நற்கதி பெறுவர் |
சுக்ல | கார்த்திகை | ப்ரபோதின் | பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும் |
கிருட்டிண | கார்த்திகை | ரமா | உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும் |
சுக்ல | மார்கழி | மோட்ச | வைகுண்டம் கிடைக்கும் |
கிருட்டிண | மார்கழி | உற்பத்தி | சகல பாக்கியங்களும் கிடைக்கும். |
சுக்ல | தை | புத்ரதா | புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்) |
கிருட்டிண | தை | சபலா | பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்) |
சுக்ல | மாசி | செயா | பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை பெற்றான்). |
கிருட்டிண | மாசி | செட்திலா | அன்ன தானத்திற்கு ஏற்றது. |
சுக்ல | பங்குனி | ஆமலதீ | கோதானம் செய்ய ஏற்றது. |
கிருட்டிண | பங்குனி | விசயா | இராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரடம் இருந்த நாள். |
சுக்ல / கிருட்டிண | (சில வருடங்களில் மட்டும்) | கமலா | மகாலட்சுமித் தாயாரின் அருள் கிடைக்கும். |
விஷ்ணுவின் மற்ற விரதங்கள்
ஏகாதசி விரதத்தை தவிர்த்து மற்றபடி வைணவர்கள் ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் சத்ய நாராயண விரதம் மேற்கொள்வர். இதை தவிர்த்து நரசிம்ம விரதம், இராம நவமி விரதம் போன்ற விரதங்களை விஷ்ணுவின் அந்தந்த அவதார செயந்தி அன்று மேற்கொள்வர் .
விஷ்ணுவிற்கு கொண்டாடும் பண்டிகைகள்
கிருட்டிணரும் சத்யபாமாவும் நரகாசுரனை அழித்ததால் தீபாவளிப் பண்டிகையையும், வராக செயந்தி, மத்சய செயந்தி, சுதர்சன செயந்தி, கூர்ம செயந்தி, வாமன செயந்தி, கிருட்டிண செயந்தி (சிரீ செயந்தி), சிரீ ராம நவமி, அயக்ரீவ செயந்தி, நரசிம்ம செயந்தி, போன்ற தினங்களில் விஷ்ணுவை வழிபட்டு பக்தர்கள் மகிழ்வர்.
விஷ்ணுவின் சிறப்புத் தலங்கள்
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த நூற்றெட்டு வைணவ திவ்விய தேசங்கள், அபிமான தலங்கள், பத்ராச்சலம், பூரி செகந்நாதர் திருக்கோவில், திருவயோதி, மதுரா, துவாரகை, திருவரங்கபட்டணம், போன்ற தலங்கள் மிகவும் சிறப்பிடம் பெற்ற விஷ்ணுவின் ஆலயங்கள் ஆகும்.
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
பன்னிரு ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் உலகெங்கும், தமிழ் பேசாத ஊர்கள், நாடுகளிலும் கூட விஷ்ணுவிற்கு விண்ணப்பிக்கப் படுகிறது.
விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்
விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களை கோர்வையாக ஒருங்கினைத்து விஷ்ணு சகசுரநாமம் என்ற தொகுப்பாக விசாயர் அருளியுள்ளார். இது விஷ்ணு சகசுர நாமாவளி என்ற பெயரிலும் அழைக்கப்பெறுகிறது. மகாபாரதத்தில் பீசுமர் யுதிட்டிரனுக்கு போர்க்களத்தில் விஷ்ணுவின் பெயர்களைக் கூறுவதாக அப்பகுதி அமைந்துள்ளது. ச.கேசவன் என்பவர் அப்பகுதியை தமிழில் எழுதியுள்ளார்.[8] இவ்வாறான நாமாவளிகளுக்கு உரை எழுதுவது பாசியம் என்று அழைக்கப்பெறுகிறது. விஷ்ணு சகசுரநாமத்திற்கு ஆதிசங்கரரால் உரையெழுதப்பெற்றது என்ற நம்பிக்கையுள்ளது.[9][10]
இந்த விஷ்ணு சகசுரநாமத்தினை நூறு பேர் ஒரே சமயத்தில் வாசிப்பதை விஷ்ணு சகசுரநாம லட்சார்ச்சனை என்கிறார்கள். இது வைணவத் தலங்களில் விஷ்ணு சகசுரநாம பாராயணம் லட்சார்ச்சனை விழா என்ற பெயரில் நடைபெறுகிறது.
காண்க
மேற்கோள்கள்
- ↑ http://www.tamilvu.org/slet/l4100/l4100pd1.jsp?bookid=120&part=II&pno=1146
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2018-07-09.
- ↑ http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=19
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=4744
- ↑ http://temple.dinamalar.com/StoryDetail.php?id=36211
- ↑ புவியினர் போற்றும் பூவராகன் - எஸ். வெங்கட்ராமன் - ஏப்ரல் 17, 2009
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-07-09.
- ↑ http://www.indusladies.com/forums/pujas-prayers-and-slokas/118104-vishnu-sahasranamam-in-tamil.html
- ↑ http://www.visvacomplex.com/SriGanEsa_Sahasranamam1.html
- ↑ http://www.tamilhindu.com/2011/04/tamils-and-vedanta-3/
- ↑ Mittal & Thursby 2005, ப. 456.