கௌமாரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌமாரம் முருகனை முழு முதற் கடவுளாக கொண்ட சமயமாகும். குமாரனாகிய முருகனே கடவுள். பேரின்ப வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்ற சமயக் கோட்பாட்டை உடையது. ஆதிசங்கரர் உருவாக்கிய ஷண்மதங்களில் இதுவும் ஒன்றும். ஷண்மதங்களாவன: கணபதி வழிபாடு (காணாபத்யம்), சிவ வழிபாடு (சைவம்), விஷணு வழிபாடு (வைணவம்), சூரிய வழிபாடு (செளரம்), அம்மன் வழிபாடு (சாக்தம்), முருக வழிபாடு (கெளமாரம்)
[தொகு] பெயர் காரணம்
கௌ என்ற எழுத்துக்கு மயில் என்று பொருள். முருகன் மயில்வாகனன் என்பதால் இச்சமயம் கௌமாரம் எனப் பெயர் பெற்றது.