பைரவர்
|
||||||||||
பைரவர் அல்லது வைரவர் இந்து சமயத்தில் வழிபடப்படும் ஒரு கடவுள் வடிவமாகும். சிவனின் வடிவங்களுள் பைரவரும் ஒன்று என கூறப்படுகிறது. பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷன பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.
கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ருபமாக சொல்லப்படுபவர்,சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர், ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் , நாகத்தை பூனூலாகவும் சந்திரனை தலையில் வைத்தும் சூலாயுதம்,பாசக் கயிரு ,அங்குசம், அயுதங்களை தாங்கியும் நிர்வாண ருபமாய் காட்சி தருபவர், கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள்,பஞ்ச பூதங்கள்,நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.