வலைவாசல்:சைவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சைவ வலைவாசல்
.

அறிமுகம்

ஓம்
ஓம்

சிவபெருமானுடன் சம்மந்தமான அனைத்தும் சைவம் என்று அறியப்பெறுகிறது. சைவநெறியென்றும், சிவநெறியென்றும், சிவ வழிபாடென்றும் சைவ சமயம் வழங்கப்பெறுகிறது. சிவவழிபாடு தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டிலிருந்து தோன்றியதாகும். ஆதி சைவம், வீர சைவம், சித்தாந்த சைவம் என பல வகை பிரிவுகளை உள்ளடக்கிய இச்சமயம், இந்து மதத்தின் வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய இந்து சமயப்பிரிவுகளையும் தன்னுள் இணைத்துக் கொண்டது. கல்லாடம் எனும் நூல் மூலம் முதல் தமிழ்ச்சிற்றிலக்கியத்தை தோற்றுவித்தது, பக்தி இலக்கிய காலத்தில் நாயன்மார், சமயக்குரவர் போன்றோரின் எழுச்சியால் எண்ணற்ற சைவ இலக்கியத்தினை படைத்தது என்று சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டால் 'சைவத்தமிழ்' என்று அழைக்கப்பெறுகிறது.

சைவ சமயம் பற்றி மேலும் அறிய...

சிறப்புக் கட்டுரைகள்

சேக்கிழார்
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார். அத்துடன் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆனையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இந்நூல் இரண்டு காண்டங்களையும், பதிமூன்று சருக்கங்களையும் கொண்டுள்ளது.



சைவ அடியார்கள்

கை நரம்புகளில் இசைக்கும் இராவணன்
இராவணன் இலங்கையை ஆண்ட சிறந்த சிவபக்தனாவார். இவர் சாமாகானம் பாடுவதிலும், யாழ் இசைப்பதிலும், ஓவியம் வரைவதிலும் சிறந்தவராக அறியப்பெறுகிறார். இவர் உமையும், சிவனும் வீற்றிருக்கும் இமயமலையை பெயர்த்தெடுத்தபொழுது, சிவபெருமான் பெருவிரலால் அழுத்த, யாழில் சாமகாணம் இசைத்தார். இசையில் மயங்கிய சிவபெருமான் சந்திரகாசம் எனும் வாளினையும், வாழ்நாட்களையும் அளித்தாக சைவ நூல்கள் கூறுகின்றன. இந்நிகழ்வின் காரணமாக சிவாலயங்களில் கைலாய மலையை சுமந்திருக்கும் இராவணனின் உருவம் சிவ வாகனமாகப் பயன்படுத்தப்படுகிறது. இலங்கை அழியக்கூடாதென தவமியற்றி சிவபெருமானிடமிருந்து ஆத்ம லிங்கத்தினை இராவணன் பெற முயன்ற பொழுது, தேவர்களின் வேண்டுகோளுக்கினங்கி திருமால் இராவணனை ஆத்மலிங்கத்திற்கு பதிலாக பார்வதியை பெறும்படி செய்தார். இதனால் சினம் கொண்ட பார்வதி திருமால் இராமனாக பிறக்கும் பொழுது அவரது மனைவியை இராவணன் கவர்ந்து செல்வான் என்று சாபமளித்தாக நாரத புராணம் கூறுகிறது. மீண்டும் தவமிருந்து ஆத்மலிங்கம் பெற்று இலங்கைக்கு செல்லும் பொழுது, விநாயகர் அதனை தடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் இவர் இருபத்தியேழு நூல்களை இயற்றிய தமிழ் நூலாசிரியராகவும் அறியப்பெறுகிறார்.


சிறப்புப் படம்

{{{texttitle}}}

அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொழுது வெளிபட்ட ஆலகாலம் அவர்களைத் துரத்தியது. தங்களைக் காப்பாற்ற வேண்டி சிவபெருமான் வசிக்கும் கையிலைக்கு சென்றார்கள். இமயமலையை தேவர்கள் வலமாக சுற்றும் போது ஆலகாலம் வழிமறைத்தது. அதனால் தேவர்கள் வந்த வழியே திரும்பி சுற்ற இம்முறை ஆலகாலம் இடப்புறம் வந்து எதிர்த்தது. இவ்வாறு வலமும் இடமுமாக மாறி மாறி பயமுருத்திய ஆலகாலத்தினை சிவபெருமான் உண்டு தேவர்களை காத்தார். ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கிறார்கள் சைவர்கள்.

படம்: User:
தொகுப்பு


பகுப்புகள்

சைவ சமய பகுப்புகள்

உங்களுக்குத் தெரியுமா?

  • ஏழு பிரளயங்களில் பெரும் பிரளயமான மகாபிரளயத்தின் பொழுது சிவபெருமான் ஊழித்தாண்டவம் ஆடு அனைவருக்கும் கட்டாய மோட்சம் அளித்து தனக்குள் ஒடுக்குகிறார்.
  • சிவபெருமான் நாரத முனிவருக்கும், சுக்ரமுனிவர்களுக்கும் இசையைப் பற்றி கற்பித்த உருவம் வீணா தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.
  • அகச்சந்தான குரவர்கள் என திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் அழைக்கப்படுகிறார்கள்.
  • திருமால் மற்றும் பிரம்ம தேவருக்கு சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளித்தை நினைவு கூறும் விதமாக கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
  • தேவாரம், திருவாசகம், திருசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் ஆகிய ஐந்து நூல்களும் பஞ்சபுராணம் என்று அழைக்கப்பெறுகிறது.
  • தேவார வைப்புத் தலங்கள் என்பவை தேவாரத்தில் தனிப்பாடல்களாகப் பாடப்பெறாமல், வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும்.


தொடர்பானவை

தொகு  

சைவம் பற்றி சான்றோர் கூறியமை


தமிழர் தம் சிந்தனைச் செழுமையில் தோன்றியது சைவ சித்தாந்தம் - அறிஞர் ஜி.யு.போப்


தொகு  

விக்கித்திட்டங்கள்


தாய்த் திட்டம்
இந்து சமயம்
விக்கித்திட்டம்
முதன்மைத் திட்டம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/இலக்கியம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/தத்துவங்கள்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/தொண்டர்கள்



தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்


தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


இந்து சமயம்இந்து சமயம்
இந்து சமயம்
வைணவம்வைணவம்
வைணவம்
சாக்தம்சாக்தம்
சாக்தம்
கௌமாரம்கௌமாரம்
கௌமாரம்
சௌரம்சௌரம்
சௌரம்
காணாபத்தியம்காணாபத்தியம்
காணாபத்தியம்
இந்து சமயம் வைணவம் சாக்தம் கௌமாரம் சௌரம் காணபத்தியம்
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:சைவம்&oldid=3783252" இலிருந்து மீள்விக்கப்பட்டது