சிவபெருமானுடன் சம்மந்தமான அனைத்தும் சைவம் என்று அறியப்பெறுகிறது. சைவநெறியென்றும், சிவநெறியென்றும், சிவ வழிபாடென்றும் சைவ சமயம் வழங்கப்பெறுகிறது. சிவவழிபாடு தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டிலிருந்து தோன்றியதாகும். ஆதி சைவம், வீர சைவம், சித்தாந்த சைவம் என பல வகை பிரிவுகளை உள்ளடக்கிய இச்சமயம், இந்து மதத்தின் வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய இந்து சமயப்பிரிவுகளையும் தன்னுள் இணைத்துக் கொண்டது. கல்லாடம் எனும் நூல் மூலம் முதல் தமிழ்ச்சிற்றிலக்கியத்தை தோற்றுவித்தது, பக்தி இலக்கிய காலத்தில் நாயன்மார், சமயக்குரவர் போன்றோரின் எழுச்சியால் எண்ணற்ற சைவ இலக்கியத்தினை படைத்தது என்று சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டால் 'சைவத்தமிழ்' என்று அழைக்கப்பெறுகிறது.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின்திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார். அத்துடன் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப்பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆனையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜன்உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என பெரியபுராணத்தினை தொடங்கியதாக நம்பப்படுகிறது. இந்நூல் இரண்டு காண்டங்களையும், பதிமூன்று சருக்கங்களையும் கொண்டுள்ளது.
இராவணன் இலங்கையை ஆண்ட சிறந்த சிவபக்தனாவார். இவர் சாமாகானம் பாடுவதிலும், யாழ் இசைப்பதிலும், ஓவியம் வரைவதிலும் சிறந்தவராக அறியப்பெறுகிறார். இவர் உமையும், சிவனும் வீற்றிருக்கும் இமயமலையை பெயர்த்தெடுத்தபொழுது, சிவபெருமான் பெருவிரலால் அழுத்த, யாழில் சாமகாணம் இசைத்தார். இசையில் மயங்கிய சிவபெருமான் சந்திரகாசம் எனும் வாளினையும், வாழ்நாட்களையும் அளித்தாக சைவ நூல்கள் கூறுகின்றன. இந்நிகழ்வின் காரணமாக சிவாலயங்களில் கைலாய மலையை சுமந்திருக்கும் இராவணனின் உருவம் சிவ வாகனமாகப் பயன்படுத்தப்படுகிறது. இலங்கை அழியக்கூடாதென தவமியற்றி சிவபெருமானிடமிருந்து ஆத்ம லிங்கத்தினை இராவணன் பெற முயன்ற பொழுது, தேவர்களின் வேண்டுகோளுக்கினங்கி திருமால் இராவணனை ஆத்மலிங்கத்திற்கு பதிலாக பார்வதியை பெறும்படி செய்தார். இதனால் சினம் கொண்ட பார்வதி திருமால் இராமனாக பிறக்கும் பொழுது அவரது மனைவியை இராவணன் கவர்ந்து செல்வான் என்று சாபமளித்தாக நாரத புராணம் கூறுகிறது. மீண்டும் தவமிருந்து ஆத்மலிங்கம் பெற்று இலங்கைக்கு செல்லும் பொழுது, விநாயகர் அதனை தடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் இவர் இருபத்தியேழு நூல்களை இயற்றிய தமிழ் நூலாசிரியராகவும் அறியப்பெறுகிறார்.
அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொழுது வெளிபட்ட ஆலகாலம் அவர்களைத் துரத்தியது. தங்களைக் காப்பாற்ற வேண்டி சிவபெருமான் வசிக்கும் கையிலைக்கு சென்றார்கள். இமயமலையை தேவர்கள் வலமாக சுற்றும் போது ஆலகாலம் வழிமறைத்தது. அதனால் தேவர்கள் வந்த வழியே திரும்பி சுற்ற இம்முறை ஆலகாலம் இடப்புறம் வந்து எதிர்த்தது. இவ்வாறு வலமும் இடமுமாக மாறி மாறி பயமுருத்திய ஆலகாலத்தினை சிவபெருமான் உண்டு தேவர்களை காத்தார். ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கிறார்கள் சைவர்கள்.
திருமால் மற்றும் பிரம்ம தேவருக்கு சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளித்தை நினைவு கூறும் விதமாக கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
தேவாரம், திருவாசகம், திருசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் ஆகிய ஐந்து நூல்களும் பஞ்சபுராணம் என்று அழைக்கப்பெறுகிறது.
தேவார வைப்புத் தலங்கள் என்பவை தேவாரத்தில் தனிப்பாடல்களாகப் பாடப்பெறாமல், வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும்.
உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளில் மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்கலாம். தக்க ஆதாரங்களை இணைத்து சிறப்பான கட்டுரையாக்குதல் மேலும் சிறப்பு.
விக்கித் திட்டம் சைவத்தில் பங்களிப்பாளர்களுக்கு வழிகாட்டுதலையும், சிறப்பான செயல்பாடுகளுக்காக பயனர்களுக்கு பதக்கங்கள் கொடுத்து ஊக்கத்தினையும் செய்யலாம்.