வீரபத்திரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வீரபத்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிவ வடிவங்களில் ஒன்றான
வீரபத்திரர்
அரக்கனைக் கொல்லும் வீரபத்திரர்
அரக்கனைக் கொல்லும் வீரபத்திரர்
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்: தக்கனைக் கொல்ல எடுத்த வடிவம்
துணை: பத்ரகாளி
இடம்: கைலாயம்
மந்திரம்: ஓம் தீக்ஷ்ணதேஹாய வித்மஹே பக்தரக்ஷகாய தீமஹி தந்நோ வீரபத்ர: ப்ரசோதயாத்
ஆயுதம்: வில்,அம்பு ,கதம்,
வாகனம்: நந்தி தேவர்
கிரகம்: செவ்வாய்

வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாகக் கருதப்படுகிறார்.சிவபெருமானை மருமகனாகக் கொண்ட கர்வத்தினால் தட்சண் சிவனை மதியாமலும் அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தைக் கொடுக்காமலும் யாகத்தை நிகழ்த்தினான். நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் மதிக்காமல் பேசவே தாட்சாயணி யாகத்தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முனைய, ருத்திர தாண்டவடிய சிவனின் உடலெங்கும் தோன்றிய வியர்வைத் துளிகள் ஆயிரம் வீரபத்திரராகத் தோன்றி பின் அவை ஒன்றாகியதென்றும், கடுங்கோபத்துடன் யாகசாலை சென்று அங்கிருந்த தேவர், முனிவர் சகலரையும் துவம்சம் செய்தார் என்றும் ஈற்றில் தக்கனின் சிரசை தம் கைவாளினால் அறுக்க அவன் ஆட்டுக்கடா வடிவெடுத்து வீரபத்திரனிடம் மன்னிப்புக் கேட்டு நின்றான் எனவும் புராணங்கள் கூறும்.

வீரபத்திரருக்கு “வீரம்” என்பதற்கு “அழகு” என்றும், “பத்திரம்” என்பதற்கு “காப்பவன்” என்றும் பொருள் கொண்டு “வீரம் காக்கும் கடவுள்” என்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணைத் தெய்வமாக வைக்கப்பட்டு தனிக் கோயில்களில் வழிபடப்படுகிறார். தமிழ்நாட்டில் திருவண்ணாமலை,திருக்கழுக்குன்றம், சென்னையிலுள்ள மயிலாப்பூர், தாராசுரம், கும்பகோணம், அரியலூர், திருக்கடவூர் போன்ற இடங்களிலும், இலங்கை யாழ்ப்பாணத்தில் கோப்பாய், கல்வியங்காடு, வியாபாரிமூலை, தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள வரகால்பட்டு பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பேதாதம்பட்டி- ஆத்தனூர் ஆகிய இடங்களிலும் வீரபத்திரர் கோயில்கள் உள்ளன.

திருச்செந்தூர்ப் புராணத்தில்

“ஆளுடைத் தனி ஆதியை நீத்தொரு

வேள்வி முற்ற விரும்பிய தக்கனோர் நீள் சிரத்தை நிலத்திடை வீட்டிய

வாள் படைத்த மதலையைப் போற்றுவாம்”

என வீரபத்திரக் கடவுள் போற்றப்படுகிறார்.

"மரகத மணிநீலம் கிண்கிணீ ஜாலபத்தம்

ப்ரகடித ஸமுகேச’ம் பானு ஸோமாக்னி நேத்ரம் … சூல தண்டோக்ர ஹஸ்தம்

விருதல மஹிபூஷம் வீரபத்ரம் நமாமி"

என்று வீரபத்திரர் பற்றிய ஒரு தியானஸ்லோகம் சொல்கிறது.

உத்தராகண்ட மாநிலத்திலுள்ள அரித்துவாரில் தான் தக்ஷன் யாகம் செய்ததும் தாட்சாயிணி யாக குண்டத்தில் விழுந்ததும் நடந்ததாய்க் கூறுகின்றனர். கங்கால் என்ற பெயரில் உள்ள இடத்தில் தட்சேசுவரர் மகாதேவர் கோயில் என்ற பெயரில் ஈசன் கோயில் கொண்டிருக்கிறார்.

இங்கே தான் வீரபத்திரரும் காளியும் தக்ஷனையும் அவன் கூட்டத்தாரையும் அழித்ததாயும் கூறுகின்றனர். தக்ஷன் சாகாவரம் பெற்றிருந்ததால் அவன் தலையை வெட்டி அதற்குப் பதிலாக ஆட்டுத் தலையை வைத்ததாகவும் கூறுவார்கள். மேலும் இங்கே சதிகுண்டம் என்ற பெயரிலேயே குண்டம் ஒன்றும் இருக்கிறது.

தோற்றம்[தொகு]

சதி என்கிற தாட்சாயினி தட்சனின் இளைய மகளாவாள். சிவன் மீது கொண்ட காதலால், தவமிருந்து சிவனின் அன்பை பெறுகிறாள். இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் கிடைக்கும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.தட்சன் கைலாயம் சென்றபோது, சிவபெருமான் எழுந்துநின்று வரவேற்காததை நினைத்து வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன் மீதான கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும் யாகமொன்றை நடத்தி சிவபெருமானை அழையாமல்,திருமால், பிரம்மன் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும், ரிஷிகளையும் தட்சன் அழைத்தார். இதனை அறிந்த சதி தன்னுடைய தந்தையிடம் முறையிடச் செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும் தன் தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட சதி யாகசாலை சென்றாள். அங்கு தச்சனால் அவமானம் அடைந்து, யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள். இதனால் சிவபெருமான் ருத்திரன், மகாகாளி, வீரபத்திரன் முதலிய அவதாரங்களை உருவாக்கி தட்சனை அழித்தார்.

வீரபத்திரரின் வழிவந்தவர்கள் மற்றும் அவரை குல தெய்வமாக வழிபடுபவர்கள் வீரமுஷ்ட்டி அல்லது வீரமுட்டி என்று அழைக்கபடுவார்கள். வீரமுட்டிகள் தமிழ் நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பரவலாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், வீரபத்திரசுவாமி வண்ணார்களின் குல தெய்வமாக வணங்கப்படுகிறது இந்த சமூக மக்களே வீரபத்திரன் வழி வந்தவர்களாக தமிழகத்தில் கருதப்படுகின்றனர் [1][2][3]

கோயில்கள்[தொகு]

  • மாதவப்பெருமாள் மற்றும் முண்டகக் கண்ணியம்மன் கோயில், மயிலாப்பூர் - கல்யாண வீரபத்திரர். [4]
  • வீரபத்திரர் கோயில், திருவானைக்காவல் - ஆறுஅடி உயர வீரபத்திரர்
  • வீரபத்திரர் கோயில், ஊத்துமலை [5]
  • திருக்கழுக்குன்றம் வீரபத்திரர் கோயில்
  • கும்பகோணம் வீரபத்திரர் கோயில்
  • தாராசுரம் வீரபத்திரர் கோயில்
  • தஞ்சாவூர் வீரபத்திரர் கோயில்
  • அனுமந்தபுரம் வீரபத்திரர் கோயில்
  • கோப்பாய் வீரபத்திரர் கோயில்
  • ஆற்காடு,பெருங்கால் மேடு அகோர வீரபத்திரர் கோயில்
  • வடுவாவத்தை வீரபத்திரர் கோயில்
  • சேலம் மாவட்டம், சங்ககிரி மலை கோட்டை அடிவாரத்தில் வீரபத்திரர் சுவாமி தனி கோவிலில் வீற்றிருக்கிறார்.
  • பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பேதாதம்பட்டி- ஆத்தனூரில் 25 அடி உயரத்தில் சத்தி வாய்ந்த வீரபத்திரர் எழுந்தருளியுள்ளார்.
  • ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம் அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில் பின்புறம், செல்லீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் 400 ஆண்டுகள் பழமையான வீரபத்திரர் கோவில் அமைந் துள்ளது.இக்கோவில் பின்புறம் வெற்றிலை தோட்டம், வில்வ மரங்கள் நிறைந்து வில்வ வனம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையில் அகோர வீரபத்திரர் கோவில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

இவற்றையும் காண்க[தொகு]

ஸ்ரீ வீரபத்திரன் கிருஷ்ணகிரி[தொகு]

  1. பக்தவத்சல பாரதி, தொகுப்பாசிரியர் (2002). தமிழர் மானிடவியல். மெய்யப்பன் தமிழாய்வகம். பக். 109. https://books.google.co.in/books?id=26OAAAAAMAAJ&q=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwjjzoLyya_yAhUXAd4KHQuZAF0Q6AF6BAgEEAM. "தமிழர் மானிடவியல் வீரபத்திரன் வழி வந்தோரே குறும்ப கவுண்டர்" 
  2. பிலவேந்திரன், தொகுப்பாசிரியர் (2004). சனங்களும் வரலாறும். வல்லினம். பக். 149,169. https://books.google.co.in/books?id=PVpLAQAAIAAJ&q=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwjjzoLyya_yAhUXAd4KHQuZAF0Q6AF6BAgDEAM. 
  3. கந்தையாபிள்ளை, தொகுப்பாசிரியர் (2003). சிந்துவெளித்தமிழர். அமிழ்தம் பதிப்பகம். பக். 159,161. https://books.google.co.in/books?id=7BduAAAAMAAJ&q=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwjjzoLyya_yAhUXAd4KHQuZAF0Q6AF6BAgLEAM. 
  4. தினகரன் ஆன்மிக மலர் 27.02.2016 பக்கம் 23
  5. தினகரன் ஆன்மிக மலர் 27.02.2016 பக்கம் 22
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரபத்திரர்&oldid=3875015" இலிருந்து மீள்விக்கப்பட்டது