சந்தான குரவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தான குறவர்கள் - திருவாரூர் தியாகராஜர் கோவில்
சந்தான குறவர்கள் - திருவாரூர் தியாகராஜர் கோவில்

சந்தான குரவர்கள் சைவ சமயத்தின் அன்பு, பக்தி நெறியை வளர்த்த நாயன்மார்கள் போன்று அறிவு நெறியை வளர்த்தவர்கள் ஆவர். இவர்களை சைவ சமய சந்தானாசாரியார்கள் என்றும் அழைப்பதுண்டு. [1] சந்தான குரவர்களை அகச்சந்தான குரவர்கள், புறச்சந்தான குரவர்கள் என இருவகையினர்.

அகச்சந்தான குரவர்[தொகு]

திருக்கைலாய பரம்பரையிலிருந்து தொடங்கும் திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் அகச்சந்தான குரவர்கள். [2] [3] திருகைலாய பரம்பரை என்பது நந்திதேவரே குருவாக கொண்டு ஆரம்பித்தது. நேரடியாக கைலாயத்துடன் தொடர்பு கொண்டமையால் இவர்களை அகச்சந்தான குரவர் என்று அழைக்கின்றனர்.

புறச்சந்தான குரவர்[தொகு]

புறச்சந்தான குரவர்கள் - கரூர் பசுபதீசுவரர் கோயில்

அகச்சந்தான குரவர்களில் நான்காமவராகிய பரஞ்சோதியாரின் சீடராகிய மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் ஆகிய நால்வரும் புறச்சந்தான குரவர்கள் ஆவர். [3] திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் முதலிய சைவ ஆதீனங்கள் உமாபதிசிவாச்சாரியாரின் சீடப்பரம்பரையால் தோற்றிவைக்கப்பட்டவையாகும்.

ஆதாரங்கள்[தொகு]

  1. சைவ சமய சிந்தாமணி - சைவப் புலவர் கா அருணாசல தேசிகமணி
  2. http://thiruvavaduthuraiadheenam.com/index.php/home/ பரணிடப்பட்டது 2017-07-09 at the வந்தவழி இயந்திரம் திருவாடுதுறை ஆதினம் வரலாறு
  3. 3.0 3.1 https://thirumarai.com/santana-kuruvar/ பரணிடப்பட்டது 2015-08-21 at the வந்தவழி இயந்திரம் சந்தான குரவர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தான_குரவர்கள்&oldid=3693397" இலிருந்து மீள்விக்கப்பட்டது