சைவ சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சைவ சமயம் (சமக்கிருதம்: शैव पंथ, śaiva paṁtha; ) என்பது சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். சைவம் சிவனுடன் சம்பந்தமாவது என திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார். [1] சிவ வழிபாடினை என்பது சிவநெறி என்றும் சைவநெறி என்றும் கூறலாம். [2] சைவசமயத்தினை சுருக்கமாக சைவம் என்று அழைக்கின்றார்கள். பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும், இம்மதத்தினை சிவ மதம் என்றும் தமிழர் சமயம் நூலில் பாவணார் குறிப்படுகிறார்.[3] இச்சமயம் உலகில் தோன்றிய முதல் சமயமென என்று கூறப்பெறுகிறது. [4]

இந்து சமயப் பிரிவுகளான வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய பிற பிரிவுகளை தன்னுள் எடுத்துக் கொண்ட இச் சமயம் இந்து சமயப்பிரிவுகளுள் முதன்மையானதாக கொள்ளப்பெறுகிறது. இம்மதத்தினை இருநூற்று இருபது மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். பக்தி இலக்கிய காலத்தில் சைவம் தமிழுக்கு பெரும் சேவை செய்து சைவத்தமிழ் என்று பெயர் கொண்டது. இதற்கு நாயன்மார்களும், சமயக் குரவர்களும் பெரும் உதவி செய்தனர்.

'தென்னாடுடைய சிவனே போற்றி' என்பது பொதுவாக வாழ்த்தப்படுவதாகும். வேதங்களும், ஆகமங்கள் முதலானவையும் சிவபிரானின் சதாசிவக் கோலத்தினால் அருளப்பட்டவை என்பர். பதினெண் புராணங்களுள் பத்து புராணங்கள் சிவன் பற்றியவை. இந்தியா, இலங்கை, தென்கிழக்காசியா, ஐரோப்பா முதலான எல்லா நாடுகளிலும் சிவாலயங்கள் காணப்படுகின்றன.

பொருளடக்கம்

சைவ சமயத்தின் தோற்றம் [தொகு]

பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும் தமிழர் சமயம் நூலில் பாவணார் குறிப்படுகிறார்.

மத்திய அமெரிக்காவின் மாயன் நாகரிகமும், கிழக்காசிய நாடுகளில் [[ஜாவா], பாலி முதலிய இடங்களில் காணப்படும் கோவில் இடிபாடுகளும் சிவ வழிபாடு உலகமெங்கும் இருந்துள்ளமையை காட்டுகின்றன. சிந்து சமவெளி நாகரீகத்தினை ஆய்வு செய்து எழுதிய சர்.ஜான் மார்ஷல் என்பவர் உலகின் மிகப்பழைய சமயமாகச் சைவம் விளங்குகிறது என கூறுகிறார். [5]

மொகெஞ்சதாரோ - ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, ஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்ததென்பதற்கும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஜி. யு. போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தென்னிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார்.

சிவனை வழிபடும் சிவநெறியாகிய சைவம் தென்னாட்டில் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே நிலவிய தொன்மைச் சமயமாகும். இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை ஆசிரியர் குறிப்பதால் அறியலாம். [6] /*சைவசமயத்தின் வரலாற்றை நாம் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதியதை வைத்து பேசுகிறோம்,எனது அறிவுக்கு அக்கருத்துகள்,வரலாற்று கூற்றுகள் தவறாகப்படுகின்றது. 'சமயமென்பது மனிதர்களை கடவுளின் நிலைகளுக்கு கொண்டு செல்வது.அதாவது ஆனமாக்களை பக்குவபடுத்தவே சமயத்தை சதாசிவ கடவுள் உலகம் உண்டாக்கப்பட்டபொழுது உண்டாக்கினான். இதை ஸ்ரீகண்ட உருத்தரர் தனது எட்டு சீடர்கள் மூலமாக உலகமக்களுக்கு போதிக்கபட்டது. அவர்களின் காலத்தில் இமயமலை பூமியில் இல்லை. கைலாயம் மேருமலையின் நடுவில் இருந்துள்ளது, மேருமலையோ பூமியின் மத்தியில் இருந்துள்ளது. அதாவது பூமத்திய ரேகையின் மீது, மேருமலைக்கு தெற்கே தில்லை இருந்துள்ளது {திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தென்தில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்} தில்லைக்கு தெற்கே இராவணவன்னஃ ஆண்ட இலங்கை இருந்துள்ளது. (இதை பட்டிணாத்தார் கூறியுள்ளார் 'தனது தாயின் உடலுக்கு நெருப்பு வைக்க பாடியபாட்டில் முன்னே இட்ட தீ தென் இலங்கை'. அன்று வாழந்த உயிரினங்களில் மனிதர்கள், தேவகள், அரக்கர்கள் என்ற உயிரினங்களும் வாழ்ந்து வந்துள்ளார்கள் (இன்று ஆராய்ச்சி ஆளரகளும் பூமியில் மூன்று விதமான மனிதரகள் வாழந்து வந்தார்கள என்கிறார்கள்) அரக்கர்களும், தேவர்களும் தீரா பகையால் சண்டையிட்டு அழிந்து விட்டார்கள் என்கிறது தமிழ். ஆரியன் என்ற சொல் சதாசிவனையும், அவனின் நிலைஅடைந்தவரகளையும் குறிக்கும். செத்து சம்பலாகவும், புழுக்களானவர்களை குறிக்காது.இன்றோ மடிந்து போன மனிதர்கள் உண்டாக்கிய மதங்கள் இப்பூமியை நரகமாக்கிறது. திருமந்திரத்தை படித்தால் நான் சொல்லியுள்ள கருத்துகள் உண்மை எனபதை உணர்வீர்கள்§ வெற்றிலிங்கம்=மும்பை/*

சிவ முழக்கங்கள் [தொகு]

  1. நம : பார்வதீபதயே - ஹர ஹர மஹாதேவா
  2. சித் ஸபேசா - சிவ சிதம்பரம்
  3. கார்த்திகேய நாம சங்கீர்த்தனம் -சிவ சுப்ரஹ்மண்யோம்
  4. வல்லீ காந்த ஸ்மரணம்-சிவ சுப்ரஹ்மண்யோம்
  5. தென்னாட்டுடைய சிவனே போற்றி - எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

இந்த முழக்கத்தில் "-" குறிக்கு முந்தையதை ஒருவர் முழங்க,"-" குறிக்கு பின்னையதை மற்ற சிவ பக்தர்கள் முழங்குகின்றார்கள். இவையில்லாமல் "சிவ சிவ" என்றும் கூறுவார்கள்.

“தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்பதை என்று மணிவாசகப் பெருந்தகை அருளினார்.

சைவ சமய பிரிவுகள் [தொகு]

என பல வகையான பிரிவுகள் இருக்கின்றது. [7]

இவற்றின் தத்துவங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றில் சில வேறுபாடுகள் உள்ளனவாயினும் அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை.

சைவ சித்தாந்தத்தை தத்துவமாகக் கொண்டு விளங்குவது சித்தாந்த சைவம். இச்சைவம் இந்தியாவில் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பிறநாடுகளிலும் விளங்குகிறது.

சைவ வழிபாட்டின் பண்புகள் [தொகு]

பழம்பெருஞ் சமயமாகிய சைவத்தில் கடவுள் வழிபாட்டுப் பண்பும், பயனும் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. வாழ்ந்தே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத நியதிக்கு உட்பட்டிருக்கும் நமது வாழ்க்கை பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் என்ற மூலங்கள் மூன்றின் சேர்க்கையால் ஆனது. இவற்றில் பதிக்குப் பாசத்தால் ஆவதொன்றுமில்லை. பாசத்துக்குப் பதியைத் தொழுது பயன் பெற்றுக் கொள்ளமுடியாது. மூன்றாவதாகிய பசுவே பதியின் இடையறாத உபகாரத்தால் தனது வினைப் பயனாகப் பிறந்து இறந்து பெறும் நீண்ட கால அனுபவத்தில் பாசத்தடையில் இருந்து நீங்கிப் பதியினைச் சார்ந்து விடுதலை பெறுவதற்கான நிலையில் உள்ளது. இந்த நிலையே ஞானம் எனப்படுகிறது. இந்த ஞானமே சைவ வழிபாட்டின் தனித்துவப் பண்பாகும்.

சைவ வழிபாட்டிற்கு ஆதார நூலாக விளங்கும் சிவாகமங்கள் இந்த ஞானம் பற்றிய விளக்கத்தை முதலில் வைத்தே கடவுள் வழிபாட்டு விதிமுறைகளைத் தெரிவிக்கின்றன. சைவ வழிபாட்டுத் தலமான ஆலயமும் ஞானி ஒருவரின் உடல் அமைப்பின் மாதிரியிலேயே உருவமைக்கப்படும். அங்கு நிகழும் கிரியைகள் யாவும் (விழுந்து கும்பிடுதல் முதல் பூசை செய்தல் வரை) இந்த ஞான விளக்கப் பின்னணியிலேயே அமையும்.

பாவ புண்ணியம் [தொகு]

பாவம் [தொகு]

கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊண் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல் போன்றவற்றினை சைவம் பாவம் என்கிறது. இதனை செய்பவர்கள் நரகத்தில் விழுந்து அத்துன்பத்தை அனுபவிப்பர் என்கிறது.

புண்ணியம் [தொகு]

புண்ணியம் பதிபுண்ணியம், பசுபுண்ணியம் என இருவகைப்படும். பதி புண்ணியம் சிவபுண்ணியம் எனவும்படும். பசு புண்ணியம் உயிர்புண்ணியம் எனவும் படும். பதி புண்ணியம், சிவபெருமானை நோக்கிச் செய்யப்படும் நற்செயல்கள் ஆகும். சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நோக்கிச் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பசுபுண்ணியம் ஆகும். பதி புண்ணியங்கள் ஒருபோதும் அழிவில்லாமல் என்றும் நின்று முத்தியைக் கொடுக்கும். பசு புண்ணியங்களுக்கும் பயன் உண்டு; ஆனால், அப்பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியப்பயன் சிவபெருமானால் அனுபவிக்கப் படாததால், அழிவதில்லை. அதன் பயன், உயிர்களுக்கு நிலையான இன்பத்தைத் தருவதே ஆகும். “பசித்து உண்டு, பின்னும் புசிப்பானை ஒக்கும் இசைத்து வருவினையில் இன்பம்." சிவஞானபோதம் எட்டாம் சூத்திரம் முதல் அதிகரணத்தில் உள்ள வெண்பாவில் மெய்கண்டார் தெளிவுற அருளிச்செய்துள்ளார். இதன் பொருள் பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுப்பது பசு புண்ணியம்; அவ்வுணவின் பயனாக, அவனுக்குள்ள பசி ஆறுகிறது. அவனுக்கு மீண்டும் பசி வரும்போது, முன்புண்ட உணவின் பயன் அனுபவிக்கப்பட்டுவிட்டதால், அவனுக்குச் செய்த பசு புண்ணியமும் அத்தோடு அழிந்துவிடுகிறது.

சிவமே முதல் எனக் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாகும், மேலும் 1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் போன்றனவும் புண்ணியத்தில் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு புண்ணியங்களை செய்தவர்கள் சிவ இன்பத்தையும், சீவ ( உயிர் ) புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் அனுபவிப்பர் என்று சைவர்கள் நம்புகிறார்கள். [8]

சைவ அடியவர்கள் [தொகு]

சைவ உலகில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தர மூர்த்தி சுவாமிகளும், மாணிக்கவாசகரும் நால்வர் எனப்படுவர். இவர்களை சைவசமயக் குரவர்கள் என்றும் அழைப்பர். சைவ அடியாளர்கள் உடலில் திருநீறு அணிய வேண்டும். சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே உறக்கம் நீங்கி எழ வேண்டும்.திருநீறு அணிந்து சிவபெருமானை நினைந்து திருப்பள்ளி எழுச்சி முதலிய திருமுறைப் பாடல்களை ஓத வேண்டும். தூய நீர் கொண்டு அனுட்டானம் செய்து திருவைந்தெழுத்தை எண்ணித் திருமறைகள், திருமுறைகள் ஓத வேண்டும்.

சைவ நெறி நூல்கள் [தொகு]

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர் எழுதிய தேவாரம், மாணிக்கவாசக சுவாமிகள் எழுதிய திருவாசகம் இரண்டும் தமிழ் மொழியில் உள்ள சைவ வேதம் ஆகும்.

  1. சங்கற்ப நிராகரணம்
  2. உண்மை விளக்கம்
  3. உண்மை நெறி விளக்கம்
  4. நெஞ்சு விடு தூது
  5. கொடிக்கவி
  6. போற்றிப் பஃறொடை
  7. வினா வெண்பா
  8. திருவருட் பயன்
  9. சிவப் பிரகாசம்
  10. இருபா இருபஃது
  11. சிவஞான சித்தியார் - ஆசிரியர் : திருத்துறையூர் - அருணந்தி சிவாச்சாரியார்
  12. சிவஞான போதம் - ஆசிரியர் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர்
  13. திருக்களிற்றுப் படியார் - ஆசிரியர் : உய்யவந்ததேவ நாயனார்
  14. திருவுந்தியார் - ஆசிரியர் உய்யவந்ததேவ நாயனார்

சைவ தொண்டு [தொகு]

சிவாலயத்துக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு செய்தலை சைவம் சிவ தொண்டென அழைக்கிறது. இவ்வாறு செய்யும் தொண்டினால் பலன் பெற்று ஆத்மாக்கள் இறைவனை அடைகின்றன என்றும் நம்பப்படுகிறது.

இவற்றையும் பார்க்க [தொகு]

ஆதாரங்கள் [தொகு]

  1. திருமந்திரம் -1486
  2. http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202111.htm
  3. தமிழர் சமயம் - பாவாணர்
  4. http://www.valaitamil.com/tamil-and-samayam_6859.html
  5. http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202111.htm
  6. வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை
  7. அபிதான சிந்தாமணி : ப. 746
  8. [http:http://www.shaivam.org/siddhanta/shp_vinavidai.htm#hdmunnurai/ சைவ சமயம் - வினாவிடை]

உசாத்துணை [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=சைவ_சமயம்&oldid=1422804" இருந்து மீள்விக்கப்பட்டது