மும்மூர்த்திகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
||||||||||
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை மும்மூர்த்தி (சமஸ்கிருதம்:त्रिमूर्तिः, ஆங்கிலம்:Trimurti) என்று குறிப்பிடுகின்றார்கள். இந்து சமயத்திலே இந்த அண்டத்தையும் அதில் உள்ள உயிர்களையும் உருவாக்கும் படைத்தல் தொழிலைச் செய்பவராகப் பிரம்மாவையும், அவ்வாறு படைக்கப்பட்டவற்றைப் பாதுகாக்கும் காத்தல் தொழிலைச் செய்பவராக விஷ்ணு அல்லது திருமாலையும், அழித்தல் தொழிலைச் செய்பவராகச் சிவனையும் கொள்வர். இந்துக் கடவுளரில் மிகவும் முக்கியமான இம்மூவரையும் மும்மூர்த்திகள் எனக் குறிப்பிடுவர்.
இம்மூவரையும் ஒருங்கே பிரம்மா-விஷ்ணு-சிவன் என்பது வழக்கம். இக் கருத்துருவை உருவ வடிவத்தில் ஒருங்கே குறிக்கும்போது சில சமயங்களில் ஒரே கழுத்தில் மூன்று தலைகள் இருப்பதுபோல் அமைப்பர். ஒரே தலையில் மூன்று முகங்களைக் கொண்டதாகவும் அமைப்பது உண்டு.