சாங்கியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாங்கியம் இந்தியத் தரிசனங்களுள் பிரதானமானது. கடவுள் இருப்பினை ஏற்றுக் கொள்ளாதது. பிரகிருதி, புருடன் ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற சடவாத தரிசனமாகும். பௌத்த மதத்தில் சாங்கியச் சிந்தனைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
புருடன் அறிவுள்ள பொருள் என்றும் பிரகிருதி அறிவற்ற சடப்பொருள் என்றும் கூறுகின்றது. உலகமானது முக்குணங்களின் சேர்க்கையினால் உருவானது என்பது இதன் கருத்து.