வாயு புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாயு புராணம் (தேவநாகரி:वायु पुराण, வாயு புராணா) என்பது சிவபெருமான் பெருமைகளை வாயு பகவான் கூறியதாகும்.

வாயு புராணம் பூர்வ பாகம், உத்தர பாகம் என்று இரண்டு பெரும் பிரிவுகளை கொண்டது. மேலும் 112 அத்தியாயங்களையும், 24,000 ஸ்லோகங்களையும் உள்ளடக்கியது. இது வாயுபகவானால் கூறப்பட்டதால் வாயு புராணம் என அழைக்கப்படுகிறது.

இப்புராணத்தில் சிவனின் எட்டு பெயர்கள் குறிப்பிட்டுள்ளது. அவ்வெட்டு பெயர்கள் முறையே உருத்திரன், பவன், சிவன், பசுபதி, ஈஸ்வரன், பீமன், உக்கிரன், மகாதேவன் என்பனவாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=11027 வாயு புராணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாயு_புராணம்&oldid=3790502" இலிருந்து மீள்விக்கப்பட்டது