நஞ்சீயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நஞ்சீயர்
பிறப்புஸ்ரீ மாதவர்
திருநாராயணபுரம்
இறப்புதிருவரங்கம், தமிழ்நாடு

நஞ்சீயர் எனும் வைணவப் பெரியவர் திருநாராயணபுரம் (தற்போதைய மேல்கோட்டை) எனும் ஊரில் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஸ்ரீ மாதவர் எனும் இயற்பெயரோடு பிறந்தார். 12-ஆம் நூற்றாண்டின் சிறந்த வைணவத் தமிழ் உரையாசிரியர்களுள் ஒருவர். வைணவத் தமிழ் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்புக் கணிசமானது..[1]

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

மாதவாச்சாரியர் எனும் சிறந்த அத்வைதி ஆகிய இவரைப் பராசர பட்டர் மூலம் விசிஷ்டாத்வைத கொள்கைக்கு மாற்றியருளினார் இராமானுசர். பராசர பட்டருக்குச் சீடராக அவருடனே திருவரங்கம் சென்று இலக்கிய பணிகளை மேற்கொண்டார்.

பிறபெயர்கள்[தொகு]

இலக்கிய படைப்புகள்[தொகு]

  • திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி வியாக்கியானம்
  • கண்ணிநுண் சிறுதாம்பு வியாக்கியானம்
  • திருப்பாவை ஈராயிரப்படி
  • திருவந்தாதி வியாக்கியானம்
  • திருப்பல்லாண்டு வியாக்கியானம்
  • ரகஸ்யத்ரயவிவரணம் வியாக்கியானம்
  • நூற்றெட்டு சரணாகதி கத்யத்ரய வியாக்கியானம்

சிறப்பு[தொகு]

தன் வாழ்நாளில் திராவிட வேதமாகிய நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் அங்கமாகிய திருவாய்மொழிக்கு நூறு முறைக்குமேல் காலட்சேபம் செய்தருளினார் என்பது இவரின் சிறப்பு.

மேற்கோள்கள்[தொகு]

  1. நஞ்சீயர்

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நஞ்சீயர்&oldid=3302008" இலிருந்து மீள்விக்கப்பட்டது