கந்தர்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கந்தர்வர்வனுடன் ஒரு அரம்பை, 10ஆம் நூற்றாண்டு சிற்பம், வியட்நாம்

கந்தர்வர்கள் என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினெட்டு கணங்களில் ஒரு இனக்குழுவாவர்.

இவர்கள் கந்தவர் லோகத்தில் வசிக்கின்றார்கள்.

இவர்கள் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் தொடர்பாக இருப்பவர்கள்.[1] இவர்கள் எப்பொழுதும் மகிழ்வாக பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருப்பார்கள். ஆடல் கலையில் வல்லவர்களாகவும், யாழ் போன்ற இசைக்கருவிகளை மீட்கும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். சித்தரம், நடனம், இசை போன்ற கலைகள் கந்தர்வ வேதம் என்று அழைக்கப்பெற இவர்களே காரணமாகும்.[2] அரம்பையர்கள், கந்தவர்களுடன் ஆடல் பாடல்களில் ஈடுபடுவர்.

தேவலோகத்தில் கச்யபப் பிரஜாபதி அரிஷ்டா தம்பதிகளுக்கு பிறந்தவர்களே கந்தர்வர்கள்.[3] கந்தவர்கள் பிரம்மனின் மூக்கில் இருந்து தோன்றியவர்கள் என்ற கருத்தும் உள்ளது. இவன் பிரம்மாவையும், சந்திரனையும் வழிபடுகின்றனர்.[3]

கந்தவர்களுக்கு பறக்கும் திறன் உள்ளது.[3]

தேவர்களுக்காக சோமரசம் எனும் மதுபானம் தயாரிப்பவர்களாகவும், கானம் இசைத்து தேவர்களை மகிழ்விப்பவர்களாகவும் கந்தர்வர்கள் உள்ளனர்.[3]

அதர்வண வேதத்தின்படி 6,300 கந்தர்வர்கள் இருக்கிறார்கள். கந்தவர்களின் தலைவனாக சித்ராதா என்பவர் உள்ளார். பாதாள லோகத்தின் வாசிகளான நாகர்கள் என்னும் அசுரர்கள் கந்தவர்களின் எதிரிகள் ஆவார்கள்.

காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. "மனிதர்களுக்காக பூ மழை தூவி வரவேற்கும் கந்தர்வர்கள்". Dinamalar. 12 ஏப்., 2011. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "காந்தர்வ வேதம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)". www.kamakoti.org.
  3. 3.0 3.1 3.2 3.3 புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப் - பக்கம் 23 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தர்வர்&oldid=3928513" இலிருந்து மீள்விக்கப்பட்டது