அக்டோபர் 14
<< | அக்டோபர் 2018 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXVIII |
அக்டோபர் 14 (October 14) கிரிகோரியன் ஆண்டின் 287 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 288 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 78 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1066 - இங்கிலாந்தில் "ஹாஸ்டிங்ஸ்" என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் வில்லியமின் படைகள் இரண்டாம் ஹரோல்ட் மன்னனைக் கொன்றனர்.
- 1322 - ஸ்கொட்லாந்தின் முதலாம் ரொபேர்ட் பைலாண்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் இரண்டாம் எட்வேர்ட் மன்னனைத் தோற்கடித்தான். ஸ்கொட்லாந்தின் விடுதலையை எட்வேர்ட் ஏற்றுக் கொண்டான்.
- 1582 - கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
- 1586 - ஸ்கொட்லாந்தின் முதலாம் மேரி இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்துக்கு எதிராக சதி மேற்கொண்டதாக குற்றஞ் சாட்டப்பட்டாள்.
- 1758 - ஏழாண்டுப் போர்: ஆஸ்திரியா பிரஷ்யாவை வெற்றி கொண்டது.
- 1773 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் தேயிலைக் கப்பல் மேரிலாந்தில் எரிக்கப்பட்டது.
- 1806 - முதலாம் நெப்போலியன் புரூசிய இராணுவத்தை தோற்கடித்தார்.
- 1888 - Roundhay Garden Scene என்ற முதலாவது அசையும் படத்தை லூயி லெ பிரின்ஸ் தயாரித்தார்.
- 1903 - யாழ்ப்பாணத்தின் SS Jaffna என்ற பயணிகள் கப்பல் நெடுந்தீவுக்கு பயணித்தது.
- 1912 - முன்னாள் அமெரிக்க அதிபர் தியொடோர் ரோசவெல்ட் விஸ்கொன்சின் மாநிலத்தின் மில்வாக்கி நகரில் வைத்து சுடப்பட்டார்.
- 1913 - ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 439 பேர் கொல்லப்பட்டனர்.
- 1925 - டமாஸ்கசில் பிரெஞ்சுக்காரர்களுக்கெதிரான போராட்டம் ஆரம்பமாயிற்று.
- 1926 - சிறுவர் நூல் வின்னீ-த-பூ (Winnie-the-Pooh) வெளியிடப்பட்டது.
- 1933 - நாசி ஜெர்மனி தேசங்களின் அணியில் இருந்து விலகியது.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியக் கடற்படையினரின் "ரோயல் ஓக்" என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. 800 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
- 1943 - போலந்தில் நாசிகளின் "சோபிபோர்" வதைமுகாமில் இருந்த 600 கைதிகள் கிளர்ச்சியை மேற்கொண்டதில் 11 நாசிகள் கொல்லப்பட்டனர். முன்னூறுக்கும் அதிகமான கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர்.
- 1948 - இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.
- 1956 - இந்தியத் தலித் தலைவர் அம்பேத்கர் தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.
- 1962 - கியூபாவுக்கு மேல் பறந்த அமெரிக்க U-2 விமானம் சோவியத் அணு ஆயுதங்களைப் படம் பிடித்தது.
- 1964 - லியோனிட் பிரெஷ்னெவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நாயகமும் ஆனார். நிக்கிட்டா குருசேவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1964 - ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
- 1968 - விண்ணிலிருந்தான முதலாவது நேரடி தொலைக்காட்சி அஞ்சல் அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.
- 1973 - தாய்லாந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மக்களாட்சிக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டதில் 77 பேர் கொல்லப்பட்டு 857 பேர் காயமடைந்தனர்.
- 1987 - டெக்சாசில் ஜெசிக்கா என்ற 18-மாதக் குழந்தை கிணறு ஒன்றில் வீழ்ந்தது. 58 மணி நேரத்தின் பின்னர் இது உயிருடன் மீட்கப்பட்டது. இந்த மீட்புப் போராட்டம் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது.
பிறப்புகள்[தொகு]
- 1606 – யோவான் மத்சாக்கர், டச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகளின் ஆளுனர் (இ. 1678)
- 1633 – இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு (இ. 1701)
- 1643 – முதலாம் பகதூர் சா, முகலாயப் பேரரசர் (இ. 1712)
- 1873 – ஜூல்ஸ் ரிமெட், பிரான்சியத் தொழிலதிபர் (இ. 1954)
- 1887 – ஆற்காடு இராமசாமி முதலியார், இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி பி. 1976)
- 1887 – ஏ. இலட்சுமணசுவாமி, இந்திய மருத்துவர், கல்வியாளர் (இ. 1974)
- 1890 – டுவைட் டி. ஐசனாவர், அமெரிக்காவின் 34வது அரசுத்தலைவர் (இ. 1969)
- 1893 – லில்லியன் கிஸ், அமெரிக்க முதல் நடிகை (இ. 1993)
- 1900 – வி எட்வர்ட் டெமிங், அமெரிக்கப் புள்ளிவிபரவியலாளர், எழுத்தாளர் (இ. 1993)
- 1926 – எர்பர்ட் தம்பையா, இலங்கை நீதிபதி, வழக்கறிஞர் (இ. 1992)
- 1927 – ரோஜர் மூர், ஆங்கிலேய நடிகர், தயாரிப்பாளர் (இ. 2017)
- 1930 – மொபுட்டு செசெ செக்கோ, சயீர் அரசுத்தலைவர் (இ. 1997)
- 1942 – சிவசங்கரி, தமிழக எழுத்தாளர்
- 1943 – மனோன்மணி சண்முகதாஸ், ஈழத்தின் கல்வியாளர், தமிழறிஞர்
- 1946 – கிரைக் வெண்டர், அமெரிக்க உயிரியலாளர்
- 1957 – பிரான்சு உருசா, அங்கேரிய இந்தியவியலாளர், மெய்யியலாளர்
- 1965 – ஸ்டீவ் கூகன், ஆங்கிலேய நடிகர், தயாரிப்பாளர்
- 1976 – திலகரத்ன டில்சான், இலங்கைத் துடுப்பாளர்
- 1981 – கவுதம் கம்பீர், இந்தியத் துடுப்பாளர்
இறப்புகள்[தொகு]
- 1803 – அய்மே ஆர்கண்ட், சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (பி. 1750)
- 1827 – பிரடெரிக் நோர்த், பிரித்தானிய இலங்கையின் முதலாவது ஆளுநர் (பி. 1766)
- 1831 – ழீன் உலூயிசு பொன்சு, பிரான்சிய வானியலாளர் (பி. 1761)
- 1944 – இர்வின் ரோமெல், செருமானிய இராணுவத் தலைவர் (பி. 1891)
- 1961 – இலங்கையர்கோன், ஈழத்துச் சிறுகதை முன்னோடி (பி. 1915)
- 1977 – பிங்கு கிராசுபி, அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1903)
- 1981 – கே. பி. ஹரன், தமிழக-இலங்கைப் பத்திரிகையாளர், பேச்சாளர் (பி. 1906)
- 1984 – மார்ட்டின் இரைல், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1918)
- 1995 – சில்லையூர் செல்வராசன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், நாடக, திரைப்பட நடிகர் (பி. 1933)
- 2005 – சுந்தர ராமசாமி, தமிழ் எழுத்தாளர் (பி. 1931)
- 2009 – சி. பி. முத்தம்மா, இந்தியப் பெண் சாதனையாளர் (பி. 1924)
- 2011 – கம்பளைதாசன், தமிழக-இலங்கை நாடகக் கலைஞர்
- 2013 – மோகன் தாரியா, இந்திய அரசியல்வாதி, சமூகச் செயற்பாட்டாளர், வழக்கறிஞர் (பி. 1925)
- 2014 – காவலூர் ராஜதுரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1931)
சிறப்பு நாள்[தொகு]
- இரண்டாம் புரட்சி நாள் (யெமன்)
- அன்னையர் நாள் (பெலருஸ்)
- உலகத் தர நிர்ணய நாள்
- ஆசிரியர் நாள் (போலந்து)