சூன் 17
<< | சூன் 2018 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXVIII |
சூன் 17 (June 17) கிரிகோரியன் ஆண்டின் 168 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 169 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 197 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- 1579 – சர் பிரான்சிஸ் டிரேக் நோவா அல்பியன் (இன்றைய கலிபோர்னியா) நகரத்தை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார்.
- 1596 – நச்சு நாடுகாண் பயணி வில்லியம் பாரென்ட்சு ஆர்க்டிக் தீவுக்கூட்டமான ஸ்பிட்சுபெர்கனைக் கண்டுபிடித்தார்.
- 1631 – மும்தாசு மகால் பிள்ளைப்பேற்றின் போது இறந்தாள். அவளது கணவர் முகலாயப் பேரரசர் ஷாஜகான் அடுத்த 17 ஆண்டுகளுக்கு அவளுக்கான நினைவுச்சின்னம் தாஜ்மகாலைக் கட்டுவதில் முனைந்தார்.
- 1839 – அவாய் இராச்சியத்தில், ரோமன் கத்தோலிக்கர்கள் சுதந்திரமாக சமய வழிபாட்டில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.
- 1843 – நியூசிலாந்தில் மாவோரி பழங்குடியினருக்கும், பிரித்தானியக் குடியேறிகளுக்கும் இடையில் சமர்கள் இடம்பெற்றன.
- 1885 – விடுதலைச் சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது.
- 1911 – செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு சாவடைந்தான்.
- 1929 – நியூசிலாந்து மர்ச்சிசன் நகரில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17 பேர் உயிரிழந்தனர்.
- 1933 – அமெரிக்காவின் கேன்சசு நகரில் கொள்ளைக்காரன் பிராங்க் நாஷ் என்பவனை விடுவிக்கும் பொருட்டு கொள்ளைக்காரர் நடத்திய தாக்குதலில் நான்கு எஃப்பிஐ பணியாளர்களும், பிராங்க் நாஷும் கொல்லப்பட்டனர்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் லான்காஸ்ட்ரியா கப்பல் செருமானிய லூப்டுவாபே படையினரால் சென் நசேர் அருகில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதில் குறைந்தது 3,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1940 – எசுத்தோனியா, லாத்வியா, லிதுவேனியா ஆகிய மூன்று பால்ட்டிக் நாடுகளும் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டினுள் வந்தன.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் லிபியாவில் கப்பூசோ துறைமுகத்தை இத்தாலியார்களிடம் இருந்து கைப்பற்றினர்.
- 1944 – ஐசுலாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலையை அறிவித்து குடியரசானது.
- 1948 – டக்லசு டிசி-6 என்ற அமெரிக்க விமானம் பென்சில்வேனியா, கார்மேல் குன்றில் மோதியதில் அனைத்து 43 பயணிகளும் கொல்லப்பட்டனர்.
- 1967 – சீனா தனது முதலாவது அதரசன் குண்டை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக அறிவித்தது.
- 1985 – டிஸ்கவரி விண்ணோடத்தில் முதலாவது அராபிய விண்வெளிவீரர் (சுல்தான் பின் சல்மான் பின் அப்துலசீசு அல் சவுதி) விண்வெளிக்கு சென்றார்.
- 1992 – "கூட்டு ஆயுதக்குறைப்பு" ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், உருசிய அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- 2015 – சார்லசுட்டன் படுகொலை: தென் கரொலைனாவில் ஆப்பிரிக்க மெதடித்த தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 – மன்னார் பேசாலைப் பகுதியில் கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலின் பின்னர் ஆறு பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்[தொகு]
- 1704 – ஜான் கே, ஆங்கிலேயப் பொறியியலாளர் (இ. 1780)
- 1800 – வில்லியம் பார்சன்சு, ஆங்கிலேய-அயர்லாந்து வானியலாளர், அரசியல்வாதி (இ. 1867)
- 1882 – இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி, உருசிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1971)
- 1883 – மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா, தமிழக அரசியல்வாதி (இ. 1943)
- 1921 – மீ. ப. சோமு, தமிழக எழுத்தாளர் (இ. 1999)
- 1939 – இயன் கிருகரன், இலங்கை-செருமானியத் தொழிலதிபர்
- 1942 – முகம்மது அல்-பராதிய், நோபல் பரிசு பெற்ற எகிப்திய அரசியல்வாதி
- 1950 – ப. அருளி, தமிழக சொல்லாய்வறிஞர்
- 1973 – லியாண்டர் பயஸ், இந்திய டென்னிசு வீரர்
- 1976 – ஸ்காட் அட்கின்ஸ், ஆங்கிலேய நடிகர்
- 1980 – வீனஸ் வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிசு வீராங்கனை
- 1988 – ஸ்ரெபனி றைஸ், ஆத்திரேலிய நீச்சல் வீராங்கனை
இறப்புகள்[தொகு]
- 656 – உதுமான், பாரசீக ஆட்சியாளர் (பி. 577)
- 676 – இரண்டாம் ஆதேயோதாத்துஸ் (திருத்தந்தை)
- 1631 – மும்தாசு மகால், சாஜகானின் மனைவி (பி. 1593)
- 1674 – ஜிஜாபாய், மராத்தியப் பேரரசரின் தாயார் (பி. 1598)
- 1839 – வில்லியம் பென்டிங்கு பிரபு, பிரித்தானிய இந்தியாவின் 14வது தலைமை ஆளுநர் (பி. 1774)
- 1858 – ராணி லட்சுமிபாய் (ஜான்சிராணி), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1835)
- 1911 – ஆஷ் துரை, திருநெல்வேலி மாவட்டத்தின் தற்காலிக ஆட்சியாளர் (பி. 1872)
- 1911 – வாஞ்சிநாதன், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1886)
- 1996 – மதுகர் தத்ரேய தேவ்ரஸ், இந்திய அரசியல்வாதி (பி. 1915)
சிறப்பு நாள்[தொகு]
- தந்தையர் தினம் (எல் சால்வடோர், குவாத்தமாலா)
- விடுதலை நாள் (ஐசுலாந்து, 1944)
- ஆக்கிரமிப்பு நாள் (லாத்வியா)
- பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட நாள்