மைலாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மையிலாடி
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 8,961 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மையிலாடி (ஆங்கிலம்:Myladi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,661 வீடுகளும், 10,070 மக்கள்தொகையும் கொண்டது. [3]


தொழில்[தொகு]

இவ்வூர் கற்சிற்பங்களுக்கு பேர்போனது. இவ்வூரில் முப்பதுக்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்களில், சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிற்பத் தொழிலைச் சார்ந்து இருக்கின்றனர். கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை, சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் போன்றவை மைலாடி சிற்பிகளால் செய்யப்பட்டவை. அண்மையில் ஐயன் திருவள்ளுவரின் 6அடி உயரச் சிலை ஒன்று ஆஸ்ரேலியாவில் நிறுவதற்காக கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டள்ளது.[4] நிறைந்த அளவில் கடவுளரின் சிற்பங்கள் கல்லில் உருவாக்கப்படுகின்றன.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. மைலாடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  4. என். சுவாமிநாதன் (14 சூலை 2017). "மைலாடி கல்லெடுத்து.. மகத்துவமா சிலை வடித்து..!". கட்டுரை. தி இந்து. 14 சூலை 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைலாடி&oldid=3578123" இருந்து மீள்விக்கப்பட்டது